ரூம் எடுத்து தங்கும் கல்லூரி மாணவர்களுக்கு திடீர் கெடு! கோவை காவல்துறையின் 24x7 அதிரடி பிளான்!

ரூம் எடுத்து தங்கும் கல்லூரி மாணவர்களுக்கு திடீர் கெடு! கோவை காவல்துறையின் 24x7 அதிரடி பிளான்!
News Image
<p style="text-align: justify;"><span style="color: #ba372a;"><strong>Coimbatore Police College Students Monitoring Scheme:</strong></span> கோவை நகரில் பயிலும் கல்லூரி மாணவர்களை முழுமையாகக் கண்காணித்து, அவர்களை நல்வழிப்படுத்துவதற்காகக் கோவை மாநகரக் காவல்துறை 'கல்வியே முதன்மை' அல்லது 'எஜுகேஷன் ஃபர்ஸ்ட்' என்ற சிறப்புத் திட்டத்தைத் தயாரித்துள்ளது. இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் சுற்றறிக்கைகள் அனைத்துக் கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. ஒரு மாணவன் குற்றச் செயல்களில் ஈடுபட்ட பிறகு அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்து, அவர் தவறான பாதையைத் தேர்ந்தெடுக்கும் ஆரம்ப அறிகுறிகளையே கண்டறிந்து தடுப்பதே இந்த விசேஷத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.</p> <h3 style="text-align: justify;">மாற்றங்களைக் கண்காணிக்க சிறப்பு நெறிமுறைகள்</h3> <p style="text-align: justify;">மாணவர்களின் வருகைப் பதிவேட்டில் திடீரென ஏற்படும் மாற்றங்கள், அடிக்கடி வகுப்பிற்கு வராமல் இருப்பது, படிப்பில் கவனம் குறைவது, நடத்தையில் ஏற்படும் மாறுதல்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அவர்களின் நடவடிக்கைகள் குறித்துக் கல்லூரி நிர்வாகமும் ஆசிரியர்களும் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். மேலும், குற்றப் பின்னணி கொண்டவர்களுடன் மாணவர்களுக்குத் தொடர்பு உள்ளதா என்பதையும் கவனிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p> <p style="text-align: justify;">கல்லூரி விடுதிகளில் தங்கும் மாணவர்களைக் கண்காணிப்பது சுலபம் என்றாலும், வெளியில் அறையெடுத்துத் தங்கும் மாணவர்கள் யாருடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்பதைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டியது அவசியமாகிறது. வழக்க வழக்குகளில் சிக்கியவர்கள், சிறைக்குச் சென்று வந்தவர்களுடன் மாணவர்கள் தொடர்பில் இருப்பது தெரிந்தால் கல்லூரி நிர்வாகம் உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.</p> <h3 style="text-align: justify;">நோடல் மற்றும் லயசன் அதிகாரிகளின் நியமனம்</h3> <p style="text-align: justify;">இத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த ஒவ்வொரு கல்லூரியிலும் ஒரு ஆசிரியரை 'நோடல் ஆபீசர்' ஆக நியமிக்க வேண்டும். அதேபோல, காவல்துறை தரப்பில் ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒரு 'லயசன் ஆபீசர்' நியமிக்கப்படுவார். இவர் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துடன் நேரடி தொடர்பில் இருப்பார். கல்லூரி முதல்வர்கள், விடுதி வார்டன்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்கும் மாதாந்திர ஆலோசனைக் கூட்டங்களும் தொடர்ச்சியாக நடத்தப்படும்.</p> <p style="text-align: justify;">போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனை, ரேகிங், ஈவ்டீசிங், குழு மோதல்கள், சைபர் குற்றங்கள், சமூக வலைதள மிரட்டல்கள், ஆயுதங்கள் வைப்பது, போதையில் வாகனம் ஓட்டுவது மற்றும் ஆன்லைன் சூதாட்டம் போன்ற தவறான வழிகளில் மாணவர்கள் சிக்காமல் இருக்கத் தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.</p> <h3 style="text-align: justify;">காவல்துறையின் தெளிவுபடுத்தல்</h3> <p style="text-align: justify;">மாணவர்களைக் குற்றவாளிகளாகப் பார்த்து அவர்களைக் கண்காணிப்பது இத்திட்டத்தின் நோக்கம் அல்ல என்று உயர்மட்டக் காவல் அதிகாரி ஒருவர் தெளிவுபடுத்தியுள்ளார். சமூகச் சூழல் மற்றும் தவறான நட்பு வட்டாரத்தால் மாணவர்கள் குற்றப் பாதைக்குச் செல்லும் முன்பே அவர்களை அடையாளம் கண்டு நல்வழிப்படுத்துவதே இத்திட்டத்தின் உண்மையான நோக்கமாகும். இதனால் எந்தவிதத் தவறான செயல்களிலும் ஈடுபடாத சாதாரண மாணவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் அல்லது இடையூறும் ஏற்படாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks