நீட் தேர்வு மன உளைச்சல்: மாணவி தற்கொலை சம்பவம்!

நீட் தேர்வு மன உளைச்சல்: மாணவி தற்கொலை சம்பவம்!

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்! - 17 வயது மாணவி தூக்கிட்டுத் தற்கொலை; சென்னையில் சோகம்!

மருத்துவக் கனவு தகர்ந்ததால் மன உளைச்சல்! - கொடுங்கையூரில் நடந்த சோகமான சம்பவம்; போலீசார் விசாரணை!


சென்னை: நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் ஏற்பட்ட மன உளைச்சலில், 17 வயது மாணவி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்துக் கொடுங்கையூர் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை கொடுங்கையூர் நாராயணசாமி கார்டன் மூன்றாவது தெருவில் வசிப்பவர் ஹரிஷ் குமார் (42). இவருக்கு இரண்டு மகள்கள். இவர்களில் மூத்த மகள் மருத்துவப் படிப்பு படித்து வரும் நிலையில், இளைய மகளான மதன ஸ்ரீ (17), தானும் மருத்துவப் படிப்பில் சேர நீட் தேர்வு எழுதியிருந்தார்.

தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அதில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மதன ஸ்ரீ மன உளைச்சலில் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், நேற்று இரவு வீட்டில் தனது அறையில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்துத் தகவலறிந்த கொடுங்கையூர் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு மருத்துவராக வேண்டும் என்ற மாணவியின் கனவு தகர்ந்துபோனதால் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks