அதிமுகவின் முதல் வாக்குறுதி: 2026 தேர்தலையொட்டி எடப்பாடி பழனிசாமி வெளியீடு!
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் முதல் வாக்குறுதியை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் அமைதி, வளம், வளர்ச்சி மற்றும் மாநில உரிமைகள் பறிபோய்விட்டதாகவும், அவற்றை தான் மீட்டுத் தருவதாகவும் எடப்பாடி பழனிசாமி தனது வாக்குறுதியில் தெரிவித்துள்ளார்.
"இதுவே, தமிழ்நாட்டு மக்களுக்கு நான் அளிக்கும் 2026 தேர்தலுக்கான முதல் வாக்குறுதி!" என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வாக்குறுதி, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது.
in
அரசியல்