
<h2>அண்ணா, பெரியார் பேரணிக்கு அனுமதி மறுப்பு</h2>
<p>ஈரோட்டில் அண்ணா பிறந்தநாளையொட்டி நடைபெற இருந்த பேரணிக்கும், அண்ணா பிறந்தநாளையொட்டி குடியாத்தத்தில் நடைபெற இருந்த பேரணிக்கும் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அதே நேரம் ஆர்எஸ்எஸ் சார்பாக நடைபெறவுள்ள பேரணிக்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> அரசின் செயல்பாட்டிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், எதிர்கட்சி தலைவரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி வெளியிட்டுள்ள பதிவில், தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் பிறந்த ஈரோட்டு மண்ணில் தி.க. சார்பில் செப்டம்பர் 17-ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிக்கும், </p>
<h2>வலதுசாரி அமைப்புகளுக்கு அனுமதி</h2>
<p>குடியாத்தத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.கழகம் உள்ளிட்ட கட்சிகள் நடத்தவிருந்த பேரணிக்கும், இந்த Circus அரசின் காவல்துறை அனுமதி மறுத்து இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை, வலதுசாரி அமைப்புகளின் பேரணிகளுக்கு அனுமதி வழங்கிவிட்டு, தமிழ்நாட்டை செதுக்கிய பெரியார் – அண்ணாவின் பிறந்த நாள் பேரணிகளுக்கு அனுமதி மறுப்பது ஏன்? பெரியாரையும், அண்ணாவையும் கொள்கைத்தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் முதலமைச்சர், யாரை திருப்திப்படுத்த இதைச் செய்கிறார்? </p>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="ta">தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் பிறந்த ஈரோட்டு மண்ணில் தி.க. சார்பில் செப்டம்பர் 17-ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிக்கும், <br /><br />குடியாத்தத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.கழகம் உள்ளிட்ட கட்சிகள் நடத்தவிருந்த பேரணிக்கும், <br /><br />இந்த Circus அரசின்…</p>
— Udhay (@Udhaystalin) <a href="https://x.com/Udhaystalin/status/2099402897469452489?ref_src=twsrc%5Etfw">September 14, 2026</a></blockquote>
<p>
<script src="https://platform.x.com/widgets.js" async="" charset="utf-8"></script>
</p>
<h3>காவி எஜமானர்களின் Control-லில் காவல் துறை</h3>
<p>காவல்துறை, முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? இல்லை அவரது காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா? பெரியார் – அண்ணாவை புறக்கணிக்கும் Reels முதலமைச்சர், அவருடைய அடிமைத்தனத்தையும் - ஆணவத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, உடனே இந்த பேரணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என அந்த பதிவில் உதயநிதி தெரிவித்துள்ளார். </p>
<p> </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/tamil-beauty-fac-pimples-home-remedies-tips-274377" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article