Strike At Wedding: திருமண வீட்டில் திடீர் தாக்குதல்..! குழந்தை உட்பட 5 பேர் மரணம், 50 பேர் காயம் - நடந்தது என்ன?

Strike At Wedding: திருமண வீட்டில் திடீர் தாக்குதல்..! குழந்தை உட்பட 5 பேர் மரணம், 50 பேர் காயம் - நடந்தது என்ன?
News Image
<p><strong>USA - IRAN WAR:</strong> ஈரானில் திருமண வீட்டில் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குலில் 5 பேர் பலியான நிலையில், 50 பேர் காயமடைந்துள்ளனர்.</p> <h2><strong>திருமண வீட்டில் திடீர் தாக்குதல்:</strong></h2> <p>தெற்கு ஈரானில் திருமணம் நடைபெற்று கொண்டிருந்த ஒரு வீட்டில் அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஒரு குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்த நிலையில் 50 பேர் காயமடைந்ததாக ஈரானிய செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. ஹோர்மோஸ்கான் மாகாணத்தின் சிரிக் மாவட்டத்தில் உள்ள குஹெஸ்டாக் என்ற இடத்தில், திருமணக் கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வீட்டின் மீது எதிர்பாராத நேரத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.&nbsp;</p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/gk/who-was-the-first-muslim-came-to-india-know-details-in-pics-273146" width="631" height="381" scrolling="no"></iframe></p> <h2><strong>ஈரான் ஊடகங்கள் வெளியிட்ட வீடியோக்கள்:</strong></h2> <p>ஈரானிய அரசாங்க ஊடகங்களும், தாக்குதலின் விளைவுகள் என குறிப்பிட்டு சில வீடியோக்களை பகிர்ந்துள்ளன. அவற்றில் தாக்கல் நடத்தப்பட்டதாக கூறப்படும் இடத்தில் பரவலான இடிபாடுகளும் சேதங்களும் காணப்பட்ட.&nbsp; அதே நேரத்தில் பின்னணியில் மக்கள் அலறும் சத்தமும் கேட்க முடிந்தது. ஹோர்மோஸ்கான் மாகாணத்தின் துணை ஆளுநர் அஹ்மத் நஃபீசி, ஆரம்பத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் அரசு தொலைக்காட்சியில் தெரிவித்ததைத் தொடர்ந்து, பலியானோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.&nbsp;தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதிக்கு மீட்புக் குழுக்கள் அனுப்பப்பட்டதாகவும், அதேவேளையில் அதிகாரிகள் சேதம் மற்றும் உயிரிழப்புகளைத் தொடர்ந்து மதிப்பிட்டு வருவதாகவும் ஈரான் அதிகாரிகள் தெரிவித்தனர்.</p> <p><iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/TKLXEjm2NI4?si=FcQ4D1u5nxXyFaMs" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p> <h2><strong>தொடரும் மோதல் போக்கு..!</strong></h2> <p>வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான மோதலில் ஒரு முக்கியப் பதற்றப் புள்ளியாக மாறியுள்ள, முக்கிய உலகளாவிய கப்பல் போக்குவரத்துப் பாதையான, ஹார்மஸ் ஜலசந்தியின் ஓரத்தில் சிரிக் கவுண்டி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பகுதியில் அமெரிக்க ராணுவம் எந்த இலக்கைத் தாக்க முயன்றது என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை. இதுகுறித்து பேசிய ஹோர்மோஸ்கனின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான துணை ஆளுநர், குடியிருப்புப் பகுதி தாக்கப்பட்டுள்ளது., மீட்புக் குழுக்கள் உடனடியாக அனுப்பப்பட்டுள்ளன.&nbsp; இது ஒரு போர்க்குற்றம்&rdquo; என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.</p> <h2><strong>தீவிரடமைடையும் தாக்குதல் - ட்ரம்ப் எச்சரிக்கை</strong></h2> <p>அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் கடுமையாக அதிகரித்துள்ள வேளையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணையைச் சுற்றியுள்ள பகுதிகள் உட்பட, தெற்கு ஈரான் முழுவதும் அமெரிக்கா புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளது. பல இடங்களில் வெடிப்புகள் நிகழ்ந்ததாகவும், கெர்மான் மாகாணத்தில் உள்ள ஒரு விமான நிலையம் தாக்கப்பட்டதாகவும் ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹோர்முஸ் ஜலசந்தியில் வர்த்தகக் கப்பல்கள் மீதும், அப்பகுதியில் உள்ள அமெரிக்கப் பணியாளர்கள் மீதும் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதல் முயற்சிகளைத் தொடர்ந்து, தங்களது சமீபத்திய தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.</p> <p><a title="TN Weather News: ரைட்டு..! 16 மாவட்டங்களில் இன்று கனமழையா? சென்னை எப்படி? தமிழக வானிலை அறிக்கை" href="https://tamil.abplive.com/news/tamil-nadu/tamilnadu-rain-alert-chennai-weather-forecast-tn-today-meteorological-department-warning-september-2nd-16-districts-rain-alert-273239" target="_self">இதையும் படியுங்கள்: TN Weather News: ரைட்டு..! 16 மாவட்டங்களில் இன்று கனமழையா? சென்னை எப்படி? தமிழக வானிலை அறிக்கை</a></p> <p>ஈரான் நீர்வழிப்பாதையில் கண்ணிவெடிகளைப் புதைக்க முயன்றதாகவும், ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளம் மீது ஏவுகணைகளை ஏவியதாகவும் கூறப்படுவதற்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஈரான் பதிலடி கொடுத்தால், மிகவும் கடுமையான மற்றும் கடுமையான அமெரிக்கப் பதிலடியை எதிர்கொள்ள நேரிடும்&rdquo; என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.</p> <h2><strong>ஈரான் பதிலடி..</strong></h2> <p>இதற்கிடையில், ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் சர்தார் ஹொசைன் மொஹேபி, அமெரிக்கா தனது புதிய தாக்குதல்களுக்காக வருந்தும்&rdquo; என்றும், ஆக்கிரமிப்பாளர்களுக்குக் கடுமையான தண்டனை காத்திருக்கிறது&rdquo; என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks