
<p style="text-align: justify;"><strong>Kanchipuram Silk Export Trade Facility Center Announcement:</strong> உலகளாவிய நெசவுக் கலை வரலாற்றில் காஞ்சிபுரம் பட்டுக்கு என்றுமே தனித்துவமான ஒரு ஆளுமையும் கம்பீரமும் உண்டு. "பட்டு நகரங்களின் அரசி" என்று புகழப்படும் காஞ்சிபுரத்தில் நெய்யப்படும் பட்டுப் புடவைகள், தங்களின் தூய்மையான தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன ஜரிகை வேலைப்பாடுகளாலும், அடர்த்தியான நெசவுத் தன்மையாலும், மாறுபட்ட நிறக் கலவைகளாலும் உலகம் முழுவதும் வலம் வருகின்றன. </p>
<p style="text-align: justify;">தலைமுறை தலைமுறையாகக் கைதேர்ந்த நெசவாளர்களின் கரங்களால் செதுக்கப்படும் இந்த ஆடை, வெறும் ஆடையாக மட்டுமின்றி தமிழர்களின் பாரம்பரியப் பெருமையாகவும், பண்பாட்டு அடையாளமாகவும் விளங்குகிறது. சர்வதேச அளவில் பட்டுப் பிரியர்களின் முதன்மைத் தேர்வாக இருக்கும் இத்தகைய சிறப்புமிக்க காஞ்சி பட்டின் ஏற்றுமதி வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், தமிழக அரசு தற்போது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது.</p>
<h3 style="text-align: justify;">ரூ. 2 கோடியில் உருவாகும் புதிய ஏற்றுமதி வர்த்தக மையம் - Kanchipuram weavers support scheme</h3>
<p style="text-align: justify;">காஞ்சிபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் பட்டு நெசவுக் குழுமங்களின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், அவர்களின் உலகளாவிய சந்தை அணுகலை எளிதாக்கவும் மத்திய-மாநில அரசுகளின் கைத்தறி ஆதரவுத் திட்டத்தின் கீழ் புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்க்கதிர்ப்பூர் பகுதியில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் பேரறிஞர் அண்ணா கைத்தறிப் பட்டுப் பூங்கா அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. </p>
<p style="text-align: justify;">இந்த உயர்தரப் பூங்காவில், காஞ்சிபுரம் பட்டு நெசவாளர்களின் ஏற்றுமதி கனவுகளுக்குச் சிறகு முளைக்கும் வகையில் "காஞ்சிபுரம் பட்டு ஏற்றுமதி வர்த்தக வசதி மையம்" அமைக்கப்படும் என்று அமைச்சர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> பாலாஜி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த மையம் அமைக்கப்படுவதன் மூலம் பட்டு உடைகளின் தரம் பிரித்தல், சர்வதேசச் சந்தைக்கு ஏற்றவாறு வடிவமைப்பு மாற்றம் செய்தல் மற்றும் ஏற்றுமதி சார்ந்த ஆவணப் பணிகளை ஒரே இடத்தில் மேற்கொள்ள முடியும்.</p>
<h3 style="text-align: justify;">உலகத்தரம் வாய்ந்த காஞ்சிபுரம் பட்டின் தனித்துவமும் ஏற்றுமதி வாய்ப்புகளும்</h3>
<p style="text-align: justify;">காஞ்சிபுரம் பட்டு ஆடைகள் உலகத்தரம் வாய்ந்தவை என்று போற்றப்படுவதற்கு அதன் தனித்துவமான நெசவு முறையே முதன்மை காரணமாகும். தூய்மையான முல்பெரி பட்டு நூல்களைக் கொண்டு, மூன்று வெவ்வேறு நூலிழைகளை ஒன்றாக முறுக்கி நெய்யப்படுவதால், இதன் தடிமனும் உழைப்பும் உலகின் பிற பட்டு வகைகளை விடப் பல மடங்கு அதிகமாகும். மேலும், உடலின் மையப்பகுதியும் கரையும் (Border) தனித்தனியாக நெய்யப்பட்டு, பின்னர் 'கொர்வை' என்ற பாரம்பரிய நுட்பத்தின் மூலம் மிக உறுதியாக இணைக்கப்படுகின்றன. </p>
<p style="text-align: justify;">இத்தகைய இணையற்ற கைவினைத்திறன் கொண்ட காஞ்சி பட்டுக்கு சர்வதேச சந்தையில் நிலவும் வரவேற்பைப் பயன்படுத்திக் கொள்ள இந்த புதிய வர்த்தக வசதி மையம் பெரும் பாலமாக அமையும். இந்த மையத்தின் மூலம் வெளிநாட்டு வர்த்தகர்கள் நேரடியாக நெசவாளர்களைத் தொடர்புகொண்டு வர்த்தகம் செய்ய முடியும் என்பதால், இடைத்தரகர்களின் தலையீடு இன்றி நெசவாளர்களுக்கு நியாயமான லாபமும், சர்வதேச அளவில் காஞ்சி பட்டுக்கு புதிய சந்தைப் புகழும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காஞ்சிபுரம் நெசவாளர்களுக்கு சார்பில், சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக, வைக்கப்பட்டு வந்த கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது.</p>
Source: Read Full Article