India Vs America: மோடியின் செயலால் கோபமடைந்த அமெரிக்கா.! இந்தியாவுக்கு எச்சரிக்கை; என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?

India Vs America: மோடியின் செயலால் கோபமடைந்த அமெரிக்கா.! இந்தியாவுக்கு எச்சரிக்கை; என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
News Image
<p><span dir="auto">ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியனுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு நடத்திய சில நாட்களுக்குப் பிறகு, ஈரானுடன் வர்த்தகம் செய்யும் அல்லது அமெரிக்க தடைகளைத் தவிர்க்க டெஹ்ரானுக்கு உதவக்கூடிய இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.</span></p> <h2><span dir="auto">பிஷ்கெக்கில் மோடி-பெகேஷ்கியன் சந்திப்பு</span></h2> <p><span dir="auto">ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர்&nbsp;</span><span dir="auto">நரேந்திர மோடியும்</span><span dir="auto">&nbsp;ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியனும் பிஷ்கெக்கில் சந்தித்ததைத் தொடர்ந்து ரூபியோவின் அறிக்கை வெளியானது .</span></p> <p><span dir="auto">இக்கூட்டத்தில், இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இருதரப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்தவும், பல்வகைப்படுத்தவும் உள்ள திட்டங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். மேலும், மேற்கு ஆசியாவில் தொடரும் மோதல், வர்த்தகக் கப்பல்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பு குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.</span></p> <h2><span dir="auto">மார்கோ ரூபியோ கூறியது என்ன.?</span></h2> <p><span dir="auto">ஈரான் மீதான தடைகளை தவிர்க்க எந்த நாடும் உதவ முடியாது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறினார். பணம் சம்பாதித்து, அந்த பணத்தை பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கவோ அல்லது அணு ஆயுதங்களை உருவாக்கவோ பயன்படுத்தும் ஒரு அமைப்பை ஈரான் உருவாக்க எந்த நாடாவது உதவினால், அத்தகைய நாடுகள் மீதும் அமெரிக்கா தடைகளை விதிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.</span></p> <div class="mid-taboola"> <div id="taboola-mid-article-personalisation-3183643" class="trc_related_container tbl-trecs-container trc_spotlight_widget">பிரதமர் மோடி, பெஷேஷ்கியனை சந்தித்தது மற்றும் இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே ஒரு புதிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு குறித்து பிரையன் கில்மீட் தனது 'தி பிரையன் கில்மீட் ஷோ' நிகழ்ச்சியில் கேட்ட கேள்விக்குப் பதிலளித்தபோது ரூபியோ இந்த கருத்தை தெரிவித்தார்.</div> </div> <h2><span dir="auto">இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே எந்த வர்த்தக ஒப்பந்தமும் இல்லை - ரூபியோ</span></h2> <p><span dir="auto">மேலும், "இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் இருப்பதாக நான் நம்பவில்லை," என்று ரூபியோ கூறினார். இருப்பினும், நாடுகள் தங்கள் சொந்த வெளியுறவுக் கொள்கையை தீர்மானிக்கவும், ஈரானுடன் உறவுகளைப் பேணவும் உரிமை உண்டு என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார். </span><span dir="auto">டொனால்ட் ட்ரம்ப்</span><span dir="auto"> நிர்வாகம் ஈரான் மீதான பொருளாதார அழுத்தத்தை கணிசமாக அதிகரித்துள்ள நேரத்தில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. டெஹ்ரானுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்யும் நாடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக இரண்டாம் நிலை தடைகள் விதிக்கப்படும் என்றும் அமெரிக்கா அச்சுறுத்தியுள்ளது.</span></p> <p><span dir="auto">அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட், ஆகஸ்ட் 24 அன்று 'ஆபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்' என்ற நடவடிக்கையை தொடங்கினார். ஈரானின் எஞ்சியிருக்கும் பொருளாதார உயிர்நாடிகளை துண்டிப்பதற்கான இந்த நடவடிக்கையை, அவர் 'பொருளாதார டி-டே' என்று விவரித்தார்.</span></p> <h2><span dir="auto">இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு ரூபியோவின் நேரடி எச்சரிக்கை</span></h2> <p><span dir="auto">உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் ஈரானுடன் தொடர்பில் இருப்பதை அமெரிக்கா அறிந்திருப்பதாக ரூபியோ கூறினார். மேலும், முந்தைய பேச்சுவார்த்தைகளின்போது அமெரிக்காவே ஈரானிய பிரதிநிதிகளை தொடர்புகொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</span></p> <p><span dir="auto">ஈரானிய ஆட்சியின் சில பிரதிநிதிகளுடன் அமெரிக்காவும் பேச்சுவார்த்தை மற்றும் தொடர்பில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார். ஆனால், பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பாக ரூபியோ தெளிவான வரம்புகளை வைத்துள்ளார்.</span></p> <p><span dir="auto">அதிபரின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது என்று அவர் கூறினார். எந்த நாடும் ஈரான் அமெரிக்க தடைகளை தவிர்க்க உதவக்கூடாது. ஈரான் பணம் சம்பாதித்து, பின்னர் அந்தப் பணத்தைப் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கவோ அல்லது அணு ஆயுதங்களை உருவாக்கவோ அனுமதிக்கும் ஒரு அமைப்பை உருவாக்க எந்த நாடும் உதவக்கூடாது. எந்த நாடு அவ்வாறு செய்தாலும், அமெரிக்கா அந்த நாட்டின் மீதும் தடைகளை விதிக்க நேரிடும் என்பதை ரூபியோ தெளிவுபடுத்தினார்.</span></p> <p>&nbsp;</p> <p>&nbsp;</p> <p><span dir="auto"><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/role-of-rice-water-for-hair-growth-know-benefits-and-right-usage-273347" width="631" height="381" scrolling="no"></iframe></span></p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks