Chennai: தி.நகர் முதல் பாரிஸ் கார்னர் வரை.. சென்னையில் இந்த பகுதிகளுக்கு ஏன் இந்த பேரு வச்சாங்க?

Chennai: தி.நகர் முதல் பாரிஸ் கார்னர் வரை.. சென்னையில் இந்த பகுதிகளுக்கு ஏன் இந்த பேரு வச்சாங்க?
News Image
<p>தமிழ்நாட்டின் தலைநகராக திகழ்வது சென்னை. சென்னையில் உள்ள ஒவ்வொரு பகுதியும் புகழ்பெற்ற பகுதியாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களுக்கு எந்தளவு பாரம்பரியமும், வரலாறும் உள்ளதோ, அதே அளவிற்கு சென்னைக்கும் உள்ளது.</p> <h2><strong>ஏன் பெயர் வந்தது?</strong></h2> <p>சென்னையில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் உள்ள ஒவ்வொரு பெயருக்கும் வரலாற்று காரணம் உள்ளது. சென்னையில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் அந்த பெயர் யாருடைய நினைவாக சூட்டப்பட்டுள்ளது? என்பதை கீழே காணலாம்.</p> <h2><strong>1. தி.நகர்:</strong></h2> <p>சென்னையின் புகழ்பெற்ற பகுதியாகவும், அடையாளமாகவும் திகழ்வது தி.நகர். சென்னையின் புகழ்பெற்ற தொழிலதிபர், வழக்கறிஞர் மற்றும் அரசியல் தலைவராக திகழ்ந்தவர் திவான் சர் பிடி தியாகராய செட்டியார். அவரது நினைவாகவே தி.நகர் என்று அந்த பகுதிக்கு பெயர் சூட்டப்பட்டது.</p> <h2><strong>2. பனகல் பார்க்:</strong></h2> <p>தி.நகர் அருகே அமைந்துள்ள பனகல் பார்க் சென்னையில் மிகவும் பிரபலமான பகுதியாகும். அந்த பகுதிக்கு பனகல் ராஜாவான ராஜா சர் பனகந்தி ராமராய ஐயங்கர் நினைவாக பனகல் பார்க் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சென்னை மாகாணத்தி்ன் முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்தவர்.</p> <h2><strong>3. பாரிஸ் கார்னர்:</strong></h2> <p>சென்னை என்றாலே அனைவரது நினைவுக்கும் வரும் பகுதியில் ஒன்று பாரிஸ் கார்னர். ஆங்கிலேயர் காலத்தில் தவிர்க்க முடியாத &nbsp; &nbsp;நகரமாக இருந்தது. இந்த பகுதிக்கு தாமஸ் பெர்ரியின் நினைவாகவே பாரிஸ் கார்னர் என்று பெயர் சூட்டப்பட்டது. ஆங்கிலேயே தொழிலதிபரான அவர் தொடங்கியதே புகழ்பெற் பாரீஸ் நிறுவனம். இன்றும் பாரிஸ் கார்னர் பகுதியில் ஒரு மிகப்பெரிய அடையாளமாக நிற்கிறது.</p> <h2><strong>4.அண்ணாநகர்:</strong></h2> <p>தமிழ்நாட்டின் மறைந்த முதலமைச்சர் அண்ணாவின் நினைவாக அண்ணாநகர் என்று அந்த பகுதிக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. சென்னையின் ஆடம்பரமான மற்றும் தவிர்க்க முடியாத பகுதியாக அண்ணாநகர் உள்ளது.&nbsp;</p> <h2><strong>5. திரு.வி.க.நகர்:</strong></h2> <p>சென்னையின் புகழ்பெற்ற சாலைகளில் ஒன்று திரு.வி.க. சாலை ஒன்றாகும். தமிழறிஞரான திரு.வி.கல்யாணசுந்தரனார் நினைவாக இந்த சாலைக்கு அந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும், வட சென்னையின் முக்கியமான பகுதிக்கும் திரு.வி.க.நகர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அவரது பெயரில் பூங்காவும் உள்ளது.</p> <h2><strong>6. கே.கே.நகர்:</strong></h2> <p>தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர்களில் ஒருவரான கருணாநிதியின் நினைவாக கே.கே.நகர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அசோக் நகர் அருகில் இந்த பகுதி அமைந்துள்ளது.</p> <h2><strong>7. டிமான்டி காலனி:</strong></h2> <p>டிமான்டி காலனி என்பது திரைப்படமாக வந்ததால் அனைவரும் அறிந்ததே ஆகும். ஜான் டி மான்டி என்ற போர்ச்சுகீசிய வணிகரை குறிக்கும் விதமாக இந்த பகுதிக்கு டிமான்டி காலனி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.</p> <h2><strong>8. எல்லீஸ் சாலை:</strong></h2> <p>சென்னையின் பிரதான சாலைகளில் ஒன்று எல்லீஸ் சாலை. ஆங்கிலேயரின் கிழக்கு இந்திய நிறுவனத்தில் எழுத்தராக பணியைத் தொடங்கி, பின்னர் நீதிபதி- வரை பதவி உயர்வு பெற்ற ஃப்ரான்ஸிஸ் ஒயிட் எல்லீஸ் நினைவாக இந்த சாலைக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. அவர் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் புலமைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p> <h2><strong>9. ரங்கநாதன் சாலை:</strong></h2> <p>சென்னையின் மிகவும் புகழ்பெற்ற சாலைகளில் ஒன்று ரங்கநாதன் சாலை ஆகும். இந்த சாலைக்கு ரங்கசுவாமி ஐயங்கார் நினைவாக இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. பத்திரிகையாளர், வழக்கறிஞர் மற்றும் அரசியல்வாதியாக திகழ்ந்த இவர் தஞ்சையைச் சேர்ந்தவர்.</p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/these-are-the-best-foods-to-improve-memory-and-brain-health-273457" width="631" height="381" scrolling="no"></iframe></p> <p>&nbsp;</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks