பல ஆண்களுடன் திருமணம் மீறிய உறவு !! தட்டி கேட்ட கணவருக்கு நேர்ந்த கொடூரம்

பல ஆண்களுடன் திருமணம் மீறிய உறவு !! தட்டி கேட்ட கணவருக்கு நேர்ந்த கொடூரம்
News Image
<h2 dir="ltr"><strong>" திருமணம் மீறிய உறவு "</strong></h2> <p dir="ltr">சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் பூபதி ( வயது 45 ) சங்ககிரி சாலை அருகில் செங்கல் சூளை நடத்தி வந்திருக்கிறார். இவரின் மனைவி சுஜிதாஸ்ரீ ( வயது 31 ) கடந்த 31 - ம் தேதி காரில் சென்று கொண்டிருந்த போது திடீரென வழிமறித்த ஒரு கும்பல் ஒன்று கணவரை வெட்டி படுகொலை செய்து விட்டு நகைகளைத் திருடிச் சென்றதாக உறவினர்கள் மற்றும் காவல் துறையினரிடம் தெரிவித்திருக்கிறார் சுஜிதாஸ்ரீ</p> <p>பூபதியின் உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் , இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சுஜிதாஸ்ரீயின் நடவடிக்கைகளால் சந்தேகம் ஏற்பட்டத்தைத் தொடர்ந்து அவரிடமே விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். எதிர் வீட்டில் குடியிருந்த சந்தோஷ் ராஜ் என்பவருடன் திருமணம் மீறிய உறவில் இருந்ததைக் கண்டறிந்து கணவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கொலை செய்தோம் எனத் திடுக்கிட வைத்திருக்கிறார்.</p> <h2><strong>"பல ஆண்களுடன் உறவு"&nbsp;&nbsp;</strong></h2> <p>சுஜிதாஸ்ரீ , சந்தோஷ் ராஜ் இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் இந்தத் தம்பதியின் 13 வயது சிறுவனை கூர்நோக்கு இல்லத்தில் அனுப்பி வைத்துள்ளனர். சந்தோஷ் ராஜ் மட்டுமின்றி பூபதியின் நண்பர்கள் பலருடனும் திருமணம் தாண்டிய உறவில் சுஜிதா இருந்து வந்திருப்பதை காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர்.</p> <p>இந்த அதிர்ச்சி பின்னணி குறித்து தெரிவித்த ஓமலூர் காவல் துறையினர் , "செங்கல் சூளை உரிமையாளரான பூபதியின் வீட்டிற்கு தொழில் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த நண்பர்கள் பலரும் அடிக்கடி வந்து சென்றுள்ளனர். அவர்களுடன் ரகசியமாகப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட சுஜிதாஸ்ரீ , திருமணம் மீறிய தகாத உறவில் இருந்து வந்திருக்கிறார்.</p> <h2><strong>" சினிமாவை போல் நாடகம் "</strong></h2> <p>இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பூபதி அடிக்கடி கண்டித்து வந்திருக்கிறார். ஆனால் , எதைப் பற்றியும் கவலைப்படாமல் பல ஆண்களுடன் ரகசிய உறவைத் தொடர்ந்து வந்திருக்கிறார். எதிர் வீட்டில் குடியிருந்த சந்தோஷ் ராஜ் என்பவருடனும் திருமணம் தாண்டிய உறவில் இருந்து விவகாரம் தொடர்பாக கடந்த 29 ஆம் தேதி இரவு வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.</p> <p>பூபதியின் தலையில் தாக்கி மயக்கமடையச் செய்ததுடன் , சந்தோஷ் ராஜை வீட்டிற்கு வரவழைத்து கத்தியால் பல இடங்களில் குத்தி கொலை செய்திருக்கிறார்கள். தன்னுடைய 13 வயது மகனையும் இந்தக் கொடூர கொலையில் ஈடுபடுத்தியிருக்கிறார். கொலையை மறக்கவே சினிமாவை மிஞ்சும் வகையில் நாடகமாடியிருக்கிறார் என்றனர்.</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks