இறந்தவர்களுக்கும் இருள்தானா? திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் அதிர்ச்சி கொடுக்கும் அவலம்!

இறந்தவர்களுக்கும் இருள்தானா? திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் அதிர்ச்சி கொடுக்கும் அவலம்!
News Image
<p style="text-align: justify;">திருச்சி: ஸ்மார்ட் சிட்டி அந்தஸ்தை பெற்ற திருச்சி மாநகரின் முக்கிய சுடுகாடான ஓயாமரியில், இரவு நேரங்களில் போதிய மின்விளக்கு வசதி இல்லாததால், மறைந்தவர்களின் உடல்களுக்கு இருளில் இறுதிச்சடங்குகளை செய்ய வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. செல்போன் வெளிச்சம், இருசக்கர வாகனங்களின் முகப்பு விளக்கு ஆகியவற்றை மட்டுமே நம்பி இறுதி காரியங்களை மேற்கொள்ளும் நிலை இருப்பதாக பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.</p> <p style="text-align: justify;"><strong>ஓயாமல் எரிந்ததால் &lsquo;ஓயாமரி&rsquo;!</strong></p> <p style="text-align: justify;">திருச்சி காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது ஓயாமரி சுடுகாடு. எரிவாயு தகன மேடைகள் அமைக்கப்படுவதற்கு முன்பு, இங்கு ஓயாமல் உடல்கள் எரிந்து கொண்டிருந்ததால், இந்த இடத்திற்கு &lsquo;ஓயாமரி&rsquo; என்ற பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது எரிவாயு தகன மேடைகள் பயன்பாட்டில் இருந்தாலும், பல்வேறு சமூகத்தினர் தங்களது பாரம்பரிய முறைப்படி உடல்களை விறகுகள் மூலம் தகனம் செய்து வருகின்றனர். இதற்காக ஓயாமரி சுடுகாட்டில் நான்கு தனித்தனி கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு கொட்டகையில் ஒரே நேரத்தில் நான்கு உடல்கள் வரை தகனம் செய்ய முடியும் என்பதால், மொத்தம் 16 உடல்களை ஒரே நேரத்தில் எரியூட்டும் வசதி உள்ளது.</p> <p style="text-align: justify;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/05/8871a4ee6c1be0322a307f8e2fc643991788581130121733_original.jpg" /></p> <p style="text-align: justify;"><strong>சுடுகாட்டில் மட்டும் ஏன் இருள்?</strong></p> <p style="text-align: justify;">திருச்சி மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சுடுகாடு, நகரின் முக்கியமான இறுதிச்சடங்கு நடைபெறும் இடமாக உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டங்களின் மூலம் மாநகரின் பல்வேறு பகுதிகள் நவீனப்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஓயாமரி சுடுகாட்டில் அடிப்படை வசதியான மின்விளக்கு கூட இல்லாதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உடல்கள் தகனம் செய்யப்படும் கொட்டகைகளுக்கு வெளியே தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த வெளிச்சம் கொட்டகைக்குள் போதுமான அளவில் செல்வதில்லை. இதனால் இரவு நேரங்களில் இறுதிச்சடங்குகள் நடைபெறும் போது, கொட்டகைக்குள் கடும் இருள் நிலவுகிறது.</p> <p style="text-align: justify;">இதன் காரணமாக செல்போன் விளக்கு அல்லது இருசக்கர வாகனங்களின் முகப்பு விளக்கை பயன்படுத்தியே இறுதிச்சடங்குகளை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p> <p style="text-align: justify;"><strong>இறுதி சடங்கிலும் தடுமாறும் நிலை</strong></p> <p style="text-align: justify;">இந்துமத வழக்கப்படி உடலை தகன மேடையில் வைத்து பல்வேறு இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன. இறுதிச்சடங்கின் ஒரு பகுதியாக உடலைச் சுற்றி வந்து வழிபடுவதும் நடைபெறும். ஆனால், இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால், உடலைச் சுற்றி வரும்போது உறவினர்கள் தடுமாறி கீழே விழும் அபாயம் உள்ளது. குறிப்பாக முதியவர்கள் உடலைச் சுற்றி வரும் போது அருகில் மற்றொரு உடல் எரிந்து கொண்டிருந்தால், நிலைமை மேலும் ஆபத்தானதாக மாறுகிறது.</p> <p style="text-align: justify;">எரியும் தகன மேடைகளுக்கு அருகே தடுமாறி விழுந்தால் தீக்காயம் ஏற்படும் அபாயமும் உள்ளது. இதனால் துக்கத்தில் இருக்கும் குடும்பத்தினர் மேலும் அச்சத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.</p> <p style="text-align: justify;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/05/7ed515b88d754ef5849731b4e62c19c71788581142542733_original.jpeg" /></p> <p style="text-align: justify;"><strong>மொட்டை அடிக்கவும் செல்போன் வெளிச்சம்தான்!</strong></p> <p style="text-align: justify;">இறந்தவருக்கு இறுதிச்சடங்கு செய்யும் நபருக்கு மொட்டை அடிக்கும் நடைமுறையும் சில குடும்பங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், இதற்குக்கூட போதுமான மின்விளக்கு வசதி இல்லை.</p> <p style="text-align: justify;">இதனால் செல்போன் வெளிச்சத்தை பயன்படுத்தியே மொட்டை அடிக்கும் நிலை இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு முக்கியமான இறுதிச்சடங்கு நடைபெறும் இடத்தில் இத்தகைய அடிப்படை வசதிகள் இல்லாதது வேதனைக்குரியதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.</p> <p style="text-align: justify;"><strong>தண்ணீர் தொட்டியின் பரிதாப நிலை!</strong></p> <p style="text-align: justify;">இறுதிச்சடங்குகளுக்கு தண்ணீர் பயன்படுத்துவதற்காக சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த தொட்டியில் இருந்து தண்ணீரை கட்டுப்படுத்துவதற்கான முறையான குழாய் வசதி இல்லை.</p> <p style="text-align: justify;">தண்ணீர் வெளியேறாமல் தடுப்பதற்கு குச்சியை பயன்படுத்த வேண்டிய நிலை இருப்பதாக கூறப்படுகிறது. குச்சியை அகற்றினால் அதிகளவு தண்ணீர் வெளியேறும் சூழல் இருப்பதால், இதுவும் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.</p> <p style="text-align: justify;"><strong>நான்கு கொட்டகைகளிலும் மின்விளக்கு இல்லை!</strong></p> <p style="text-align: justify;">ஓயாமரி சுடுகாட்டில் அமைக்கப்பட்டுள்ள நான்கு தகனக் கொட்டகைகளிலும் போதுமான மின் விளக்குகள் இல்லை என கூறப்படுகிறது.</p> <p style="text-align: justify;">இதனால் இரவு நேரங்களில் உடல்களை தகனம் செய்வதில் சுடுகாட்டு பணியாளர்களும் சிரமப்படுகின்றனர். உடலை கொண்டு வருவது குறித்து தகவல் தெரிவிக்கும் போது, இருட்டுவதற்கு முன்பாக உடலை கொண்டு வருமாறு உறவினர்களிடம் சுடுகாட்டு பணியாளர்கள் கூறும் நிலையும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உடல்கள் இரவு நேரத்தில்தான் சுடுகாட்டுக்கு கொண்டு வரப்படும் சூழ்நிலையும் ஏற்படுகிறது. அப்போது மின்விளக்கு இல்லாததால் குடும்பத்தினர் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.</p> <p style="text-align: justify;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/05/e2e4f3bc2ae020a6362e0d6418f8a63d1788581154385733_original.jpeg" /></p> <p style="text-align: justify;"><strong>பயன்பாடற்ற நிலையில் இறுதிச்சடங்கு மண்டபம்!</strong></p> <p style="text-align: justify;">இதுமட்டுமின்றி, இறுதிச்சடங்குகளை மேற்கொள்வதற்காக இந்தப் பகுதியில் தனியாக ஒரு மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த மண்டபத்திலும் போதுமான மின் வசதி இல்லாததால் பொதுமக்களுக்கு முழுமையான பயன்பாடு கிடைக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. முக்கியமான இறுதிச்சடங்கு நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள மண்டபம் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் மின் வசதிகளுடன் இருக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.</p> <p style="text-align: justify;"><strong>&ldquo;நிம்மதியாக சாகக்கூட முடியாது&rdquo; என்ற நிலை வேண்டாம்! </strong></p> <p style="text-align: justify;">கிராமப்புறங்களில் பேச்சுவழக்கில், &ldquo;நிம்மதியாக சாகக்கூட முடியாது&rdquo; என்று வேதனையுடன் கூறுவது உண்டு. ஆனால், திருச்சி ஓயாமரி சுடுகாட்டின் தற்போதைய நிலையை பார்க்கும்போது, மறைந்தவர்களின் உடல்களுக்கு இறுதி மரியாதை செலுத்தும் குடும்பத்தினரே நிம்மதியின்றி தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.</p> <p style="text-align: justify;">ஒருவர் மறைந்த பிறகு அவரது உடலை கண்ணியத்துடன் தகனம் செய்வதற்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவது நிர்வாகத்தின் முக்கியமான கடமை. குறிப்பாக இரவு நேரங்களில் நடைபெறும் இறுதிச்சடங்குகளுக்கு போதுமான வெளிச்சம், பாதுகாப்பான நடைபாதை, தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கட்டாயம் இருக்க வேண்டும்.</p> <p style="text-align: justify;">எனவே, திருச்சி மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக ஓயாமரி சுடுகாட்டை ஆய்வு செய்து, நான்கு தகனக் கொட்டகைகளிலும் போதுமான மின்விளக்குகளை அமைக்க வேண்டும். தண்ணீர் தொட்டிக்கு முறையான குழாய் வசதி ஏற்படுத்த வேண்டும். பயன்பாடின்றி இருக்கும் இறுதிச்சடங்கு மண்டபத்தையும் மின் வசதியுடன் சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p> <p style="text-align: justify;">ஸ்மார்ட் சிட்டி என பெருமை பேசும் திருச்சியில், மறைந்தவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தும் இடம் மட்டும் இருளில் மூழ்கியிருப்பது எந்த வகையில் நியாயம்? என்பதே தற்போது பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks