ஆசியாவின் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்கா... படையெடுக்கும் சுற்றுலா பயணிகளின் வேதனை என்ன தெரியுங்களா?

ஆசியாவின் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்கா... படையெடுக்கும் சுற்றுலா பயணிகளின் வேதனை என்ன தெரியுங்களா?
News Image
<p style="text-align: justify;">திருச்சி: திருச்சியின் அடையாளமாக விளங்கும் வண்ணத்துப்பூச்சி பூங்காவிற்கு வரும் பயணிகளுக்கு ஏற்படும் வேதனை என்ன தெரியுங்களா?</p> <p style="text-align: justify;">திருச்சி மாவட்டத்தின் சுற்றுலா அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் ஸ்ரீரங்கம் மேலூர் வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். காவிரி கொள்ளிடம் ஆற்றின் கரையில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் இயற்கை எழில் சூழ அமைந்துள்ள இந்த பூங்கா, ஆசியாவின் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்காக்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால், இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலத்துக்கு போதுமான அளவில் சீரான அரசுப் பேருந்து வசதி இல்லாதது பொதுமக்கள் மத்தியில் நீண்டகால குறையாக இருந்து வருகிறது.</p> <p style="text-align: justify;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/12/e370755fc4dc5e4e2782e1a02b76ca1e1789215857714733_original.jpg" /></p> <p style="text-align: justify;">திருச்சி என்றாலே மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், முக்கொம்பு, கல்லணை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் நினைவுக்கு வரும். இந்த வரிசையில் இயற்கை ஆர்வலர்கள், குழந்தைகள், குடும்பத்தினர் என அனைத்து தரப்பினரையும் கவரும் முக்கிய இடமாக மேலூர் வண்ணத்துப்பூச்சி பூங்காவும் திகழ்கிறது.</p> <p style="text-align: justify;"><strong>இயற்கை சூழலுடன் அமைந்துள்ள வண்ணத்துப்பூச்சிகளின் உலகம்!</strong></p> <p style="text-align: justify;">காவிரி கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் இயற்கை சூழலுடன் அமைந்துள்ள இந்த பூங்கா, நகர வாழ்க்கையின் பரபரப்பில் இருந்து விலகி இயற்கையுடன் சில மணி நேரங்களை செலவிட விரும்புவோருக்கு சிறந்த இடமாக உள்ளது.</p> <p style="text-align: justify;">பூங்காவில் பல்வேறு வகையான தாவரங்கள், வண்ணத்துப்பூச்சிகளுக்கு ஏற்ற சூழல், நட்சத்திர வனம், செயற்கை நீர்வீழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பார்வையாளர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.</p> <p style="text-align: justify;">குறிப்பாக குழந்தைகளுக்கு வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்க்கைச் சுழற்சி மற்றும் இயற்கைச் சூழல் குறித்து நேரடியாக அறிந்து கொள்ளும் வாய்ப்பை இந்த பூங்கா வழங்குகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்விச் சுற்றுலா குழுக்களும் இங்கு வந்து செல்கின்றனர்.</p> <p style="text-align: justify;"><strong>குவியும் சுற்றுலாப்பயணிகளுக்கு கூறும் பெரும் குறை&nbsp;</strong></p> <p style="text-align: justify;">இவ்வளவு சிறப்பு வாய்ந்த சுற்றுலாத் தலமாக இருந்தாலும், பொதுமக்கள் எளிதாக சென்றடைய போதுமான அரசுப் பேருந்து வசதி இல்லாதது பெரும் குறையாக உள்ளது.</p> <p style="text-align: justify;">திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஸ்ரீரங்கம் பேருந்து நிலையத்தில் இருந்தும் வண்ணத்துப்பூச்சி பூங்காவை சென்றடைவதற்கு சீரான இடைவெளியில் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.</p> <p style="text-align: justify;">ஆனால், குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் மட்டுமே கிடைப்பதால், பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. குறிப்பாக வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நேரத்தில் இந்த சிரமம் மேலும் அதிகரிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.</p> <p style="text-align: justify;"><strong>ஆட்டோ, வாடகை கார்... கூடுதல் செலவு!</strong></p> <p style="text-align: justify;">அரசுப் பேருந்து வசதி போதுமானதாக இல்லாததால், பூங்காவுக்கு செல்லும் பலர் ஆட்டோ மற்றும் வாடகை கார்களை நாட வேண்டிய சூழல் உள்ளது. இதனால் குடும்பத்துடன் செல்லும் பொதுமக்களுக்கு பயணச் செலவு அதிகரிக்கிறது. ஏற்கனவே சுற்றுலா செலவுகளை திட்டமிட்டு வரும் குடும்பங்களுக்கு கூடுதல் போக்குவரத்துச் செலவு சுமையாக மாறுகிறது.</p> <p style="text-align: justify;">சிறிய குழந்தைகளுடன் வரும் பெற்றோர், முதியவர்கள் மற்றும் நீண்ட தூரத்திலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் இதனால் அதிக சிரமத்தை சந்திக்கின்றனர்.</p> <p style="text-align: justify;"><strong>பள்ளி மாணவர்களுக்கும் பாதிப்பு</strong></p> <p style="text-align: justify;">இந்த பூங்கா இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான அறிவை மாணவர்களுக்கு வழங்கக்கூடிய முக்கிய இடமாக உள்ளது. பள்ளி மாணவர்களை அழைத்து வரும் கல்விச் சுற்றுலா குழுக்களுக்கு சீரான பொதுப் போக்குவரத்து வசதி இருந்தால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.</p> <p style="text-align: justify;">பேருந்து வசதி குறைவாக இருப்பதால், பெரிய குழுக்களாக வரும் மாணவர்கள் தனியார் வாகனங்களை ஏற்பாடு செய்ய வேண்டிய நிலை உருவாகிறது. இதனால் கல்விச் சுற்றுலாவுக்கான செலவும் அதிகரிக்கிறது.</p> <p style="text-align: justify;"><strong>சுற்றுலா வளர்ச்சிக்கு போக்குவரத்து முக்கியம்!</strong></p> <p style="text-align: justify;">ஒரு சுற்றுலாத் தலம் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும், அங்கு பொதுமக்கள் எளிதாகச் சென்று வருவதற்கான போக்குவரத்து வசதி இல்லையெனில் அதன் முழுமையான பயன் கிடைக்காது.</p> <p style="text-align: justify;">திருச்சிக்கு வரும் வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில சுற்றுலாப் பயணிகளும் எளிதாக வண்ணத்துப்பூச்சி பூங்காவை சென்றடையும் வகையில் பேருந்து சேவையை திட்டமிட வேண்டும்.</p> <p style="text-align: justify;">ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், மலைக்கோட்டை உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத் தலங்களுடன் வண்ணத்துப்பூச்சி பூங்காவையும் இணைக்கும் வகையில் சுற்றுலா வழித்தட பேருந்து சேவையை உருவாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.</p> <p style="text-align: justify;"><strong>மக்கள் எதிர்பார்ப்பு எப்போது நிறைவேறும்?</strong></p> <p style="text-align: justify;">வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு சீரான இடைவெளியில் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும். குறிப்பாக காலை, மாலை நேரங்களில் கூடுதல் சேவைகள் வழங்குவதுடன், வார இறுதி மற்றும் அரசு விடுமுறை நாட்களில் பயணிகளின் வருகைக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.</p> <p style="text-align: justify;">இயற்கை எழில், அரிய வண்ணத்துப்பூச்சிகள், குழந்தைகளை கவரும் சூழல் என சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ள மேலூர் வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு, போக்குவரத்து வசதி மட்டும் இன்னும் முழுமையாக கைகூடவில்லை.</p> <p style="text-align: justify;">ஆசிய அளவில் சிறப்பு பெற்றதாக பெருமை சேர்க்கும் இந்த பூங்காவை திருச்சியின் முக்கிய சுற்றுலா மையமாக மேலும் வளர்க்க வேண்டுமெனில், முதலில் பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் சீரான அரசுப் பேருந்து வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பதே மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. வண்ணத்துப்பூச்சிகள் சிறகடிக்கும் பூங்காவுக்கு... மக்கள் செல்ல பேருந்துகளும் சிறகடிக்குமா? என்ற எதிர்பார்ப்புடன் திருச்சி மக்கள் காத்திருக்கின்றனர்.</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks