டெண்டர் முடிவதற்குள் திறப்பு விழா: தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் அதிரடி மாற்றம்!

டெண்டர் முடிவதற்குள் திறப்பு விழா: தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் அதிரடி மாற்றம்!
News Image
<p style="text-align: justify;">சென்னை தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் கோரியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அரசு நிர்வாக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p> <h3 style="text-align: justify;">டெண்டர் கோரப்படுவதற்கு முன்பே திறக்கப்பட்ட தூண்கள்</h3> <p style="text-align: justify;">தாம்பரம் மாநகராட்சி சார்பில் பெருங்களத்தூர் ரவுண்டானாவில் அசோக சக்கரத் தூண் ஜூலை 29-ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. அதேபோல், சித்தலப்பாக்கம் ரவுண்டானாவில் ஆகஸ்ட் 6-ஆம் தேதி தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தும் சின்னம் திறக்கப்பட்டது. இவற்றை அமைச்சர் சரத்குமார் மற்றும் தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் ஆகியோர் திறந்து வைத்தனர். இது தொடர்பான பதிவுகளையும் புகைப்படங்களையும் அமைச்சர் சரத்குமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்திலும் இது வெளியிடப்பட்டிருந்தது.</p> <p style="text-align: justify;">ஆனால், ஜூலை 29-ல் திறக்கப்பட்ட அசோகா சக்கரத் தூணுக்கு ஆகஸ்ட் 6-ஆம் தேதியில்தான் ரூ.27.30 லட்சத்தில் டெண்டர் கோரப்பட்டு, அது ஆகஸ்ட் 24-ல் முடிவடைவதாகக் காண்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தும் சின்னம் திறக்கப்பட்ட பின்னரே, ரூ.18.60 லட்சத்திற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.</p> <h3 style="text-align: justify;">அறப்போர் இயக்கம் புகார் மற்றும் விசாரணை நடவடிக்கை</h3> <p style="text-align: justify;">ஒப்பந்ததாரரை முன்பே முடிவு செய்துவிட்டு, டெண்டர் நடவடிக்கைகளில் கடுமையான முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக &lsquo;அறப்போர் இயக்கம்&rsquo; சார்பில் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்குப் புகார் மனு அனுப்பப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டார்.</p> <h3 style="text-align: justify;">அதிரடி நடவடிக்கை மற்றும் பொறுப்பு மாற்றம்</h3> <p style="text-align: justify;">விசாரணையின் தொடர்ச்சியாக, தாம்பரம் மாநகராட்சி கமிஷனராக இருந்த பாலச்சந்தர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, ஆவடி மாநகராட்சி கமிஷனர் சரண்யா, மறு உத்தரவு வரும் வரை தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் பொறுப்பைக் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p> <p style="text-align: justify;">மேலும், இந்த மாநகராட்சி டெண்டர் குறைபாடுகளுக்காக மண்டல உதவி செயற்பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையின் அடிப்படையில், தவறுகிழைத்த அனைவரும் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks