
<p>விழுப்புரம்: தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்துக்குட்பட்ட பேரணி - மயிலம் யார்டு இடையேயான பகுதியில் பொறியியல் பணிகள் நடைபெற உள்ளதால், செப்டம்பர் 3 முதல் 7-ஆம் தேதி வரை பல்வேறு ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.</p>
<p>இதன்படி, சில ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்படுவதுடன், சில ரயில்களின் புறப்படும் இடம் மாற்றம் செய்யப்படவும், சில ரயில்கள் குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் கூடுதல் நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் இயக்கப்படவும் உள்ளன.</p>
<h2>தாம்பரம் - விழுப்புரம் பயணிகள் ரயில்</h2>
<p>சென்னை தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்கு புறப்படும் தாம்பரம் - விழுப்புரம் பயணிகள் ரயில் (66045), செப்டம்பர் 3, 4, 5, 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் திண்டிவனம் - விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்படுகிறது. இதனால், இந்த ரயில் திண்டிவனம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.</p>
<p>அதேபோல், விழுப்புரத்திலிருந்து பிற்பகல் 1.30 மணிக்கு புறப்படும் விழுப்புரம் - சென்னை கடற்கரை பயணிகள் ரயில் (66046), செப்டம்பர் 3 முதல் 7-ஆம் தேதி வரை விழுப்புரம் - திண்டிவனம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்படுகிறது. இதனால், இந்த ரயில் திண்டிவனம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.37 மணிக்கு புறப்படும்.</p>
<h2>வந்தே பாரத், வைகை ரயில்கள் தாமதமாக இயக்கம்</h2>
<p>சென்னை எழும்பூரிலிருந்து பிற்பகல் 3.10 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர் - திருநெல்வேலி வந்தே பாரத் விரைவு ரயில் (20665), செப்டம்பர் 3, 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமார் 20 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் இயக்கப்படும்.</p>
<p>சென்னை எழும்பூரிலிருந்து பிற்பகல் 1.15 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர் - மதுரை வைகை அதிவேக விரைவு ரயில் (12635), செப்டம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் சுமார் 110 நிமிடங்களும், செப்டம்பர் 6-ஆம் தேதி சுமார் 15 நிமிடங்களும் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் இயக்கப்படும்.</p>
<h2>சிறப்பு ரயில்களிலும் மாற்றம்</h2>
<p>சென்னை தாம்பரத்திலிருந்து செப்டம்பர் 3-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் சென்னை தாம்பரம் - திருவனந்தபுரம் சென்ட்ரல் சிறப்பு ரயில் (06109), வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமார் 95 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் இயக்கப்படும்.</p>
<p>சென்னை தாம்பரத்திலிருந்து செப்டம்பர் 4-ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சென்னை தாம்பரம் - போடிநாயக்கனூர் சிறப்பு ரயில் (06059), சுமார் 90 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் இயக்கப்படும்.</p>
<h2>புதுச்சேரி ரயில்களிலும் பாதிப்பு</h2>
<p>புதுச்சேரியிலிருந்து பிற்பகல் 1.30 மணிக்கு புறப்படும் புதுச்சேரி - காக்கிநாடா துறைமுகம் கிர்கார் விரைவு ரயில் (17656), செப்டம்பர் 3 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சுமார் 15 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் இயக்கப்படும்.</p>
<p>புதுச்சேரியிலிருந்து பிற்பகல் 12.45 மணிக்கு புறப்படும் புதுச்சேரி - கச்சிக்குடா விரைவு ரயில் (17654), செப்டம்பர் 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் சுமார் 140 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் இயக்கப்படும்.</p>
<p>மேலும், புதுச்சேரியிலிருந்து பிற்பகல் 1.40 மணிக்கு புறப்படும் புதுச்சேரி - திருப்பதி பயணிகள் விரைவு ரயில் (16112), செப்டம்பர் 4-ஆம் தேதி சுமார் 25 நிமிடங்களும், செப்டம்பர் 6-ஆம் தேதி சுமார் 30 நிமிடங்களும் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் இயக்கப்படும்.</p>
<p>சென்னை கோட்டத்துக்குட்பட்ட பேரணி - மயிலம் யார்டு இடையேயான பொறியியல் பணிகளை முன்னிட்டு இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதனால், மேற்கண்ட தேதிகளில் ரயில்களில் பயணிக்கும் பயணிகள் மாற்றப்பட்டுள்ள ரயில் நேரங்களை கவனித்து பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p>
Source: Read Full Article