புதுச்சேரியை உலுக்கும் 'RTI' குண்டு: 5 ஆண்டுகளில் மது வருமானம் ரூ.1,733 கோடியாக அதிகரிப்பு!

புதுச்சேரியை உலுக்கும் 'RTI' குண்டு: 5 ஆண்டுகளில் மது வருமானம் ரூ.1,733 கோடியாக அதிகரிப்பு!
News Image
<p>புதுச்சேரி: புதுச்சேரி அரசின் கலால் துறைக்கு 2025&ndash;26 நிதியாண்டில் 1,733.5 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளில் கலால் வருவாய் ரூ.637 கோடி அதிகரித்துள்ளதாகவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) மூலம் பெறப்பட்ட தகவலில் தெரியவந்துள்ளது.</p> <p>புதுச்சேரி அரசின் கலால் துறைக்கு 2025-26-ம் நிதியாண்டில் மட்டும் ரூ.1,733.5 கோடி வருவாய் கிடைத்து உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் கலால் வருவாய் ரூ.637 கோடி வரை உயர்ந்து இருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம் தெரியவந்து உள்ளது.</p> <p>இதுகுறித்த விரிவான விவரம் வருமாறு:</p> <h2>சமூக ஆர்வலர் மனு</h2> <p>புதுச்சேரி குயவர்பாளையத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அசோக் ராஜா என்பவர், கலால் துறையிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல்வேறு கேள்விகளை முன்வைத்து மனு தாக்கல் செய்து இருந்தார். அதில், &ldquo;கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2026-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் புதுச்சேரியில் எத்தனை &lsquo;ரெஸ்டோ பார்களுக்கு&rsquo; அனுமதி வழங்கப்பட்டு உள்ளது? கலால் துறைக்கு கிடைத்த வருவாய் எவ்வளவு? புதிதாக மொத்த மதுபான விற்பனை உரிமங்கள் வழங்கப்பட்டதா? எப்.எல்.2 உரிமத்துக்கான ஆண்டு கட்டணம் மற்றும் அவற்றின் செயல்பாட்டு நேரங்கள் என்ன?&rdquo; என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கேட்டு இருந்தார்.</p> <h2>கலால் துறை விளக்கம்</h2> <p>இதற்கு கலால் துறையின் பொதுத் தகவல் தொடர்பு அலுவலர் சத்யநாராயணன் அளித்துள்ள அதிகாரப்பூர்வ பதிலில் கூறி இருப்பதாவது:&ndash;</p> <p>புதுச்சேரி கலால் சட்ட விதிகளின்படி &lsquo;ரெஸ்டோ பார்&rsquo; என்ற பெயரில் தனியாக எந்தவொரு உரிமமும் வழங்கப்படுவது இல்லை. உணவு சேவை வழங்கும் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு சுற்றுலாப் பிரிவின் கீழ் எப்.எல்.2 (FL-2) உரிமம் வழங்கப்பட்டு வருகிறது.</p> <p>அதன்படி, கடந்த 2021 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 194 எப்.எல்.2 உரிமங்கள் புதிதாக வழங்கப்பட்டு உள்ளன. அதேநேரத்தில், இந்த காலகட்டத்தில் புதிய மொத்த மதுபான விற்பனை உரிமங்கள் (ஹோல்சேல்) எதுவும் வழங்கப்படவில்லை.</p> <h2>ரூ.637 கோடி உயர்வு</h2> <p>கலால் துறைக்கு கிடைத்துள்ள ஆண்டு வருவாய் விவரம் வருமாறு:</p> <ul> <li>2021&ndash;22 நிதியாண்டு &ndash; ரூ.1,096 கோடி</li> <li>2022&ndash;23 நிதியாண்டு &ndash; ரூ.1,402.61 கோடி</li> <li>2023&ndash;24 நிதியாண்டு &ndash; ரூ.1,487.66 கோடி</li> <li>2024&ndash;25 நிதியாண்டு &ndash; ரூ.1,538.81 கோடி</li> <li>2025&ndash;26 நிதியாண்டு &ndash; ரூ.1,733.50 கோடி</li> </ul> <p>இதன்படி, கடந்த 2021-22-ம் நிதியாண்டில் ரூ.1,096 கோடியாக இருந்த கலால் துறை வருவாய், 2025-26-ம் நிதியாண்டில் ரூ.1,733.50 கோடியாக அதிகரித்து உள்ளது. இதன் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் கலால் துறையின் வருவாய் ரூ.637 கோடி அளவுக்கு உயர்ந்து இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.</p> <h2>தொலைவு கட்டுப்பாடு இல்லை</h2> <p>மேலும், பள்ளிக்கூடங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இயங்கும் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு சுற்றுலாப் பிரிவின் கீழ் வழங்கப்படும் எப்.எல்.2 உரிமங்களுக்கு, வழக்கமான தொலைவு தொடர்பான கட்டுப்பாடுகள் பொருந்தாது.</p> <p>எப்.எல்.2 உரிமத்துக்கான ஆண்டு கட்டணமாக ரூ.7 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த உரிமம் பெற்ற ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை மதுபானங்கள் வழங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p> <p>புதுச்சேரியில் சுற்றுலாத்துறை வளர்ச்சியைக் காரணம் காட்டி மதுபானக் கடைகள் மற்றும் உணவக பார்களுக்கு அதிகளவில் உரிமங்கள் வழங்கப்பட்டு வருவதும், இதன் மூலம் அரசுக்கு நூற்றுக்கணக்கான கோடிகள் வருவாய் பெருகி வருவதும் இந்த ஆர்டிஐ தகவல்கள் மூலம் தெரியவந்து உள்ளது.</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks