
<p>2026 சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது ஜென்ஸி தலைமுறையினருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p>
<h2><strong>80வது சுதந்திர தினம்</strong></h2>
<p>ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ம் தேதி நம் நாட்டின் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மொழி தொடங்கி உணவு வரை பல வகைகளில் நாம் பிரிந்திருந்தாலும் தேசிய ஒற்றுமை என வரும்போது நாம் அனைவரும் பாரத அன்னையின் குழந்தைகள் தான். இந்தியாவின் 80வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ஆம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. </p>
<h2><strong>ஜென்ஸி தலைமுறைக்கு முன்னுரிமை</strong></h2>
<p>செங்கோட்டையில் மத்திய அரசின் சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெறும் நிலையில் அங்கு ஜென்ஸி தலைமுறையினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளதாக பாதுகாப்புத்துறை செயலாளர் நரேந்திர குமார் சிங் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பில், டெல்லியில் நடைபெறும் சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் இளைஞர்கள் ஆற்றிய பங்களிப்பு கௌரவிக்கப்படும். முதல் முறையாக வந்தே மாதரம் இசைக்கப்படவுள்ளது. </p>
<p><iframe title="EPS Vs Sengottaiyan | Edappadi Palaniswami's Sarcasm! Sengottaiyan Gets Tense, DMK Members Applaud" src="https://www.youtube.com/embed/RiBvk-t5WH0" width="1101" height="619" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்க அழைக்கப்பட்டவர்களுக்கு அதிகாலை 4 மணி முதல் மெட்ரோ சேவைகள் இலவசமாக வழங்கப்படும். தன்னார்வலர்கள், சக்கர நாற்காலிகள், உடை மாற்றும் அறைகள், குடிநீர், கழிப்பறைகள் மற்றும் மழை அங்கிகள் போன்ற வசதிகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>
<p>வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழாவை சிறப்பிக்கப்பட உள்ளது. சுதந்திர தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு செங்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கூட்டத்தில் உள்ள சந்தேகத்திற்கிடமான நபர்களை அடையாளம் காணும் பொருட்டு டெல்லி காவல்துறை அபிஞ்ஞான் செயலி மூலம் முகத்தை அடையாளம் காணும் பணி நடைபெறுகிறது. </p>
<p>ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெறும் கொண்டாட்டங்களுக்காக டெல்லி காவல்துறை மற்றும் துணை ராணுவப் படைகளைச் சேர்ந்த சுமார் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையிலான வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 16ம் தேதி வரை டெல்லியில் ட்ரோன்கள் பறக்க தடை வ்திக்கப்பட்டுள்ளது. </p>
<h2><strong>மாறும் அரசியல் களம்</strong></h2>
<p>2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக களம் கண்ட தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்தது. இதற்கு மிக முக்கிய காரணமாக ஜென்ஸி தலைமுறையினரின் வாக்குகள் அமைந்தது. அதேபோல் நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் நடந்த போராட்டம் வெடித்தது. இதில் இளம் வயதினர் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதனால் அனைத்து கட்சியினரின் பார்வையும் ஜென்ஸி தலைமுறையை நோக்கி திரும்பியுள்ளது. அந்த வகையில் சுதந்திர தின கொண்டாட்டத்திலும் ஜென்ஸி தலைமுறையினருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/benefits-of-consuming-dates-with-ghee-270388" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article