Independence day 2026: 80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!

Independence day 2026: 80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
News Image
<p style="text-align: justify;">இந்தியாவின் 80வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படும். இந்த முறை செங்கோட்டையில் &nbsp;Gen-Z-யின் தாக்கம் மேலோங்கியிருக்கும். இதற்கான திட்டத்தை அரசு தயாரித்துவிட்டது. டெல்லியில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல் முறையாக செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து தேசியப் பாடல் 'வந்தே மாதரம்' பாடப்படுகிறது.</p> <p style="text-align: justify;">இதுதொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் குமார் சிங் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்ததாவது, 80வது சுதந்திர தின விழாவை பிரதமர் மோடி டெல்லியின் செங்கோட்டையிலிருந்து தலைமையேற்பார். அழைக்கப்பட்டவர்களுக்கு மெட்ரோ சேவைகள் காலை 4 மணி முதல் இலவசமாக கிடைக்கும். தன்னார்வலர்கள், சக்கர நாற்காலிகள், கிளாக்க்ரூம், குடிநீர், கழிப்பறை மற்றும் ரெயின்கோட் போன்ற வசதிகளும் வழங்கப்படும்.</p> <p style="text-align: justify;">&nbsp;</p> <p><iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/YVSp9c3PGLE?si=VKLhWB2Iku75JeMA" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p> <p style="text-align: justify;">இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் அணுசக்தி, விண்வெளி ஆராய்ச்சி மற்றும் புதிய தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் காட்டப்படும். இதனுடன், பெண் தொழில்முனைவோர், விவசாயிகள், கைவினைஞர்கள் மற்றும் பெயர் பெற்ற இளைஞர்கள் சிறப்பு விருந்தினர்களாக கௌரவிக்கப்படுவார்கள். சர்வதேச ஒலிம்பியாடில் பதக்கம் வென்ற பத்தொன்பது மாணவர்கள் கௌரவிக்கப்படுவார்கள். இந்த விழா 'வந்தே மாதரம்' 150 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கிறது. இது முதல் முறையாக செங்கோட்டையிலிருந்து பாடப்படும். இளைஞர்களின் பங்கேற்புக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும்.</p> <h2><strong>பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன</strong></h2> <p>இதற்கிடையில், சுதந்திர தின விழாவுக்கு முன்னதாக செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கூட்டத்தில் சந்தேகத்திற்குரிய மற்றும் தேடப்படும் நபர்களை அடையாளம் காண டெல்லி போலீஸ் 'அபிஜ்ஞான்' ஆப் மற்றும் &lsquo;ஃபேஷியல் ரெகக்னிஷன் சிஸ்டம்&rsquo; பயன்படுத்தும். ஆகஸ்ட் 15 விழாவுக்காக டெல்லி போலீஸ் மற்றும் துணை ராணுவப் படைகளின் சுமார் 15000 முதல் 20000 வீரர்கள் வரை பணியமர்த்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p> <h2><strong>ட்ரோன்-காத்தாடி பறக்கத் தடை</strong></h2> <p>சுதந்திர தின விழாவுக்காக தலைநகரில் ஆகஸ்ட் 2 முதல் 16 வரை ட்ரோன்கள் உட்பட அனைத்து வகையான சிறிய வான்வழி தளங்களை பறக்க விடுவதற்கு டெல்லி போலீஸ் முழுமையான தடை விதித்துள்ளது. இதற்கு மேலாக, பாதுகாப்பு காரணங்களால் நினைவுச்சின்னத்தைச் சுற்றியுள்ள செங்கோட்டை அருகே காத்தாடி பறக்க விடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. BNSS-இன் பிரிவு 163ன் கீழ் வெளியிடப்பட்ட இந்த உத்தரவு ஆகஸ்ட் 16 வரை அமலில் இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/auto/top-7-seater-cars-for-middle-class-families-266690" width="631" height="381" scrolling="no"></iframe></p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks