
<p>சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை<strong>(29.08.2026)</strong> எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், <strong>ஆகஸ்ட் 29-ம்</strong> தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.</p>
<p>சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<h3>கிண்டி</h3>
<p>கிண்டி தொழிற்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், அம்பாள் நகர், லேபர் காலனி, பிள்ளையார் கோயில் தெரு 3, 5 மற்றும் 6-வது தெருக்கள், ஏ, பி, சி மற்றும் டி பிளாக்குகள், மவுண்ட் ரோடு பகுதி அளவு, ஜே.என். சாலை, பூமகள் தெரு, தெற்கு கட்டம், பாலாஜி நகர், பாரதியார் தெரு, தனகோட்டி ராஜா தெரு, அச்சுதன் தெரு, முனுசாம தெரு, காந்தி நகர் பகுதி, பூந்தமல்லி சாலை பகுதி அளவு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.</p>
<h3>சித்தாளபாக்கம்</h3>
<p>புஷ்பா நகர் பூங்கா, சந்தானம் தெரு, வெங்கடேஸ்வரா தெரு, மாம்பாக்கம் மெயின் ரோடு, மகேஸ்வரி நகர், பிரியதர்ஷினி நகர், ஒட்டியம்பாக்கம் மெயின் ரோடு, டி.வி. நகர், ஸ்கைலேப் அவென்யூ, வள்ளுவர் நகர், ஜெயா நகர், விவேகானந்தா நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.</p>
<h3>ஈஞ்சம்பாக்கம்</h3>
<p>ஈசிஆர் ஈஞ்சம்பாக்கம், ஈஞ்சம்பாக்கம் குப்பம், ஈஞ்சம்பாக்கம் முதல் வெட்டுவான்கேணி இணைப்புச் சாலை, வெட்டுவான்கேணி 1-வது மற்றும் 2-வது அவென்யூ, அக்கரை, அல்லிக்குளம் அம்பேத்கர் தெரு, அண்ணா என்கிளேவ், பெத்தல் நகர், பாரதி அவென்யூ, பிருந்தாவன் நகர், சோழமண்டலம் கலைஞர்கள் கிராமம், சோழமண்டலம் தேவி நகர், கிளாசிக் என்கிளேவ், காப்பர் பீச் ரோடு, டாக்டர் நஞ்சுண்டராவ் சாலை, கங்கையம்மன் கோயில் தெரு, குணால் தோட்டம், அனுமன் காலனி, ஹரிசந்திரா 1 முதல் 4-வது தெருக்கள், கக்கன் தெரு, கே.கே.சாலை, கே.வி. நகர், கஸ்தூரிபாய் நகர், எல்.ஜி. அவென்யூ, சன்ரைஸ் அவென்யூ, நயினார் குப்பம், உத்தண்டி, நீலாங்கரை குப்பம், ஆலிவ் பீச், பல்லவன் நகர், பனையூர் குப்பம், என்ஆர்ஐ மற்றும் விஜிபி லே-அவுட், பெப்பிள் பீச், பெரியார், பொதிகை மற்றும் பொன்னியம்மன் கோயில் தெரு, பிரெஸ்டீஜ் மற்றும் மந்த்ரி, ராஜன் நகர் 1 மற்றும் இரண்டாவது தெரு, ராஜீவ் அவென்யூ, ராமலிங்கா நகர், ராயல் என்கிளேவ், சீ கிளிஃப் (Sea Cliff), சீ ஷெல் அவென்யூ, சீஷோர் டவுன், செல்வா நகர், ஷாலிமார் கார்டன், ஸ்பார்க்லிங் சாண்ட் மற்றும் சேஷாத்ரி அவென்யூ, ஸ்பிரிங் கார்டன், டிவிஎஸ் அவென்யூ, டீச்சர்ஸ் காலனி, திருவள்ளுவர் சாலை, தாமஸ் அவென்யூ, விஓசி தெரு, விமலா கார்டன் மற்றும் ஜுஹு கடற்கரை.</p>
<p>மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.</p>
<p> </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/be-careful-if-you-see-these-symptoms-in-your-body-272772" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article