விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை... கடந்து வந்த பாதை ஓர் பார்வை!

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை... கடந்து வந்த பாதை ஓர் பார்வை!
News Image
<p style="text-align: justify;">தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோருக்கு இடையே நிலவி வந்த விவாகரத்து வழக்கு, இன்று (ஆகஸ்ட் 7) திடீர் திருப்பமாக வாபஸ் பெறப்பட்டு முடித்து வைக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கு, கடந்த சில மாதங்களாகப் பொதுவெளியிலும் ஊடகங்களிலும் பெரும் விவாதப் பொருளாக இருந்தது.</p> <p style="text-align: justify;">பிப்ரவரி மாதம் முதல் வழக்கு வாபஸ் பெறப்பட்ட ஆகஸ்ட் 7 வரையிலான முக்கியக் கட்டங்களை விரிவாகப் பார்ப்போம்:</p> <h3 style="text-align: justify;">பிப்ரவரி 24, 2026: நீதிமன்ற கதவைத் தட்டிய சங்கீதா</h3> <p style="text-align: justify;">நீண்ட நாட்களாக நிலவி வந்த தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் சங்கீதா விவாகரத்து மற்றும் குடியிருப்பு உரிமை கோரி அதிகாரப்பூர்வமாக மனுத் தாக்கல் செய்தார்.</p> <h3 style="text-align: justify;">பிப்ரவரி 27, 2026: வெளியான மனு விவரங்கள்</h3> <p style="text-align: justify;">மனுத் தாக்கல் செய்யப்பட்ட சில நாட்களிலேயே, பிப்ரவரி 27-ஆம் தேதி இந்த விவாகரத்து மனுவில் இடம்பெற்றிருந்த விவரங்கள் ஊடகங்களில் வெளியாகித் தீயாகப் பரவின. ஜீவனாம்சம், நீலாங்கரை இல்லத்தில் வசிப்பதற்கான உரிமை மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்ததாகத் தகவல்கள் வெளியாகின.</p> <h3 style="text-align: justify;">ஏப்ரல் 20, 2026: முதற்கட்ட விசாரணை</h3> <p style="text-align: justify;">இதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் இவ்வழக்கின் முதல் விசாரணை நடைபெற்றது. பாதுகாப்பு காரணங்கள் மற்றும் பிரபலங்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, இருவரும் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு காணொளி காட்சி (Video Conference) வாயிலாக ஆஜராக அனுமதி வழங்கி விசாரணை தொடர்ந்தது.</p> <h3 style="text-align: justify;">ஜூன் 15, 2026: இரண்டாவது விசாரணை</h3> <p style="text-align: justify;">வழக்கின் 2-வது விசாரணை ஜூன் 15-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், வழக்கைச் சமரச மையத்திற்கு அனுப்பும் நடவடிக்கைகளை பரிசீலித்து, அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.</p> <h3 style="text-align: justify;">ஆகஸ்ட் 7, 2026: 3-வது விசாரணை &amp; வழக்கு வாபஸ்</h3> <p style="text-align: justify;">திட்டமிட்டபடி இன்று (ஆகஸ்ட் 7) 3-வது விசாரணைக்கு வந்தபோது, லண்டனில் இருந்து காணொளி காட்சி வாயிலாகச் சங்கீதா ஆஜரானார். நீதிபதி சுஜாதா முன்னிலையில் நடைபெற்ற 15 நிமிட விசாரணையின்போது, கணவர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> மீது தொடரப்பட்ட வழக்குகளை முழு சுயநினைவுடன் தாமாகவே முன்வந்து திரும்பப் பெற்றுக்கொள்வதாகச் சங்கீதா தெரிவித்தார்.</p> <p style="text-align: justify;">சங்கீதாவின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி, மனுவை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு விவாகரத்து வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார். இதன் மூலம் பல மாதங்களாக நீடித்து வந்த சட்டப் போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks