
<p style="text-align: left;"><br />மேகதாது அணை விவகாரத்தில் ராகுல் காந்தி பேசுவதற்கு முதல்வர் விஜய் ஏன் வலியுறுத்தவில்லை? என்று இயக்குநர் வ.கெளதமன் கேள்வி எழுப்பியுள்ளார்.</p>
<p style="text-align: left;">இதுதொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தப்போது அவர் கூறுக்கையில், “மேகதாது அணை கட்டுவதை தடுப்பதற்கான செயல் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் முன்னெடுப்பது மிக முக்கியமானது. அதோடு பாராளுமன்ற தொகுதி மறுவறையை அதையும் தடுத்து நிறுத்த முன்னெடுப்பு என்பது முக்கியமானது. ஆனால் ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தின் சந்தேகம் என்னவென்றால் மேகதாது அணை கட்டுவதை தவிர்ப்பதற்கான முன்னெடுப்பை எதுவும் எடுக்காமல். அதைத் தவிர்த்து விட்டு பாராளுமன்ற மறு சீரமைப்பை தடுத்து நிறுத்த முயற்சி செய்வது நியாயமற்றது. நீட் தேர்வுக்கு அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த வலியுறுத்தியிருந்தோம். <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> அரசு அதைத் தவிர்த்து விட்டது.</p>
<p style="text-align: left;"> </p>
<p><iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/CHPRxJHVl2g?si=PZVeQsOPms89X5r9" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<h2 style="text-align: left;">ராகுலை ஏன் வலியுறுத்தவில்லை?<br /> </h2>
<p style="text-align: left;">மேகதாது அணை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசுவதற்கு முதல்வர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> ஏன் வலியுறுத்தவில்லை?. கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசிடமும் எதுவும் பேசவில்லை. தமிழகத்தில் ஆண்ட ஒவ்வொரு அரசும் வருவதற்கு முன்பு ஒரு பேச்சு, வந்த பிறகு ஒரு பேச்சு எனப் பேசி வருகிறார்கள். இது நேர்மையற்றது. நீங்கள் யாரையெல்லாம் தீய சக்தி எனக் கூறினீர்களோ அதே செயல்பாடு தான் நீங்களும் செய்கிறீர்கள். </p>
<p style="text-align: left;">காவிரி பிரச்சனைகள் கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றால், தமிழ்நாட்டில் வாழும் கன்னடர்களுக்கு நாங்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்க வேண்டுமா?. வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட வெறியர்கள் தமிழர்களை கொடூரமாக தாக்குதல் நடத்தி கொலை செய்தபோது கூட இங்கு தமிழகத்தில் கன்னடர்களை நாங்கள் பாதுகாத்தோம். ஜல்லிக்கட்டுக்கு வெகுந்து எழுந்த கூட்டம் இந்த முறை கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டால் வெகுந்து எழும். நாளையும் நாங்கள் கர்நாடகாவை சார்ந்தவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து பாதுகாக்க நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால் தமிழ் சமூகம் வேடிக்கை பார்க்கும் என்று நினைத்து அங்குள்ள தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தினால் நாங்கள் விடமாட்டோம். நாம் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என நீதிமன்றம், நடுவன் ஆணையம், மத்திய அரசு, சட்டம் சொல்கிறது. எங்களுக்கு உண்டான தண்ணீரை சட்டப்படி நீதிபடி தரவேண்டும்” என்று கூறினார்.</p>
<p style="text-align: left;"><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/auto/when-does-car-consume-more-petrol-reasons-and-tips-269893" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article