‘விஜய் மீதான விவாகரத்து வழக்கை சங்கீதா வாபஸ் பெற்றது ஏன்?' பின்னணியில் நடந்த பாசப்போராட்டம்..!

‘விஜய் மீதான விவாகரத்து வழக்கை சங்கீதா வாபஸ் பெற்றது ஏன்?' பின்னணியில் நடந்த பாசப்போராட்டம்..!
News Image
<p style="text-align: justify;"><strong>Vijay &amp; Sangeetha Divorce Case Updates:</strong> தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோரிடையே நிலவி வந்த தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் கணவர் விஜய் மீது விவாகரத்து மற்றும் குடியிருப்பு உரிமை கோரி சங்கீதா மனு தாக்கல் செய்திருந்தார்.</p> <h3 style="text-align: justify;">நீதிமன்ற விசாரணை மற்றும் விலக்கு</h3> <p style="text-align: justify;">இந்த வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் ஏற்கனவே மூன்று முறை விசாரணைக்கு வந்தது. பிரபலங்கள் என்பதாலும் பாதுகாப்பு காரணங்களினாலும் இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, காணொளி காட்சி (Video Conference) மூலமாக ஆஜராக நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.</p> <h3 style="text-align: justify;">இன்றைய விசாரணை மற்றும் ஒத்திவைப்பு</h3> <p style="text-align: justify;">இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தற்போது சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருவதைச் சுட்டிக்காட்டி, விசாரணையை வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என விஜய் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. எனினும், சங்கீதா தரப்பில் இன்றே விசாரணையை நடத்த வேண்டும் எனக் கோரப்பட்டதால், வழக்கு பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.</p> <h3 style="text-align: justify;">நீதிபதியிடம் சங்கீதா அளித்த விளக்கம்</h3> <p style="text-align: justify;">தொடர்ந்து பிற்பகலில் நடைபெற்ற விசாரணையின்போது, நீதிபதி சுஜாதா முன்னிலையில் சங்கீதா காணொளி வாயிலாக ஆஜரானார். சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாகத் தனது தரப்பு விளக்கங்களை அவர் நீதிபதியிடம் விரிவாக எடுத்துரைத்தார். அப்போது, இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்றால் ஊடகங்களிலும் பொதுவெளியிலும், இதைப் பற்றியே தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள் என்றும், அது குடும்பச் சூழலை பாதிக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.</p> <h3 style="text-align: justify;">வழக்கு முடித்து வைப்பு</h3> <p style="text-align: justify;">குறிப்பாக, குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும், விஜய் தற்போது தமிழக முதல்வராகப் பொறுப்பு வகிக்கும் நிலையில் அவரது நற்பெயருக்கு எவ்விதக் களங்கமும் ஏற்படக் கூடாது என்பதற்காகவும் இந்த வழக்கை வாபஸ் பெறுவதாகச் சங்கீதா நீதிபதியிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கணவர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> மீது தொடரப்பட்ட விவாகரத்து மற்றும் குடியிருப்பு உரிமை கோரும் வழக்குகளைத் தாமாகவே முன்வந்து திரும்பப் பெற்றுக்கொள்வதாகச் சங்கீதா தெரிவித்ததைத் தொடர்ந்து, இவ்வழக்கை முழுமையாக முடித்துவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks