
<p style="text-align: left;">கடலூரி கடற்கரையில் தூய்மை பணியின்போது போதைப் பொருட்கள் தொடர்பான மருந்துகள் கிடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p style="text-align: left;"><br />வி த லீடர்ஸ்' (We The Leaders) அமைப்பின் சார்பில் பல்வேறு சமூக விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடற்கரை தூய்மை இயக்கம் என்ற பெயரில் கன்னியாகுமரி கடற்கரைச் சாலையில் வி த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலைதொடங்கி வைத்தார்.</p>
<p style="text-align: left;">இதனைத் தொடர்ந்து கடலூர் துறைமுகம் சிங்காரத்தோப்பு கடற்கரைப் பகுதியில் வீ த லீடர்ஸ் அமைப்பின் கடலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் மேகநாதன், ஜீவா வினோத் குமார், பத்மினி, சந்திரன் ஆகியோரின் ஏற்பாட்டில் கடற்கரை தூய்மைப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் வீ த லீடர்ஸ் தன்னார்வலர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கடற்கரை தூய்மை பணியில் ஈடுபட்டனர்.அப்போது கடலூர் கடற்கரையில் மது பாட்டில்கள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் அதிகமாக கிடந்தன. மேலும் கடற்கரை பகுதியில் அதிக அளவு மருந்து பாட்டில்கள் போல் இருந்ததால் இவை போதை பழக்கத்திற்கு பயன்படுத்தப்படக்கூடிய பொருளாகவும் இருக்கலாம் என்று சந்தேகம் இருப்பதாகவும் தமிழ்நாட்டில் போதைப் பழக்கம் அதிகமாக இருப்பதாகவும் வி தலீடர் அமைப்பினர் தெரிவித்தனர்.</p>
<p style="text-align: left;"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/02/b286a7492297fd5b228440467eb784cd1785680611035113_original.png" width="720" /></p>
<h2 style="text-align: left;">குலசேகரப்பட்டினத்தில் வீ த லீடர்ஸ் அமைப்பு கொடியை ஏற்றி மரக்கன்றுகள் நட்ட அண்ணாமலை</h2>
<p style="text-align: left;">முன்னதாக தி லீடர்ஸ் என்ற அமைப்பு சார்பில் இன்றைய தினம் கன்னியாகுமரி, உவரி, குலசேகரன்பட்டினம் மற்றும் தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் கடற்கரையை சுத்தம் செய்யும் பணி நடைபெறும் என்று அந்த அமைப்பின் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். </p>
<p style="text-align: left;">அதன்படி, இன்று காலை முதல் அதற்கான பணிகள் நடந்து வந்தது. முதல் கட்டமாக கன்னியாகுமரி, அதைத்தொடர்ந்து உவரி பகுதியில் நடந்தது. அதன் பிறகு மாலையில் 3 மணி அளவில் குலசேகரன்பட்டினம் கடற்கரையில் தூய்மை பணியில் நடைபெறுவதாக இருந்த நிலையில் அதை மாற்றி குலசேகரன்பட்டினம் பகுதியில் மரக்கன்றுகள் நட்டார். </p>
<p style="text-align: left;">குலசேகரன்பட்டினம் வந்த <a title="அண்ணாமலை" href="https://tamil.abplive.com/topic/annamalai" data-type="interlinkingkeywords">அண்ணாமலை</a>க்கு அந்த பகுதி சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அமைப்பை சேர்ந்தவர்கள் வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து வீ த லீடர்ஸ் அமைப்பின் கல்வெட்டை திறந்து வைத்து கொடியை அவர் ஏற்றி வைத்தார். தொடர்ந்து அங்கு வந்த பொதுமக்கள் மற்றும் பெண்களுக்கு அவர் கை கொடுத்து உற்சாகப்படுத்தினார். </p>
<p style="text-align: left;">தொடர்ந்து குலசேகரன்பட்டினம் கடற்கரையில் நமது அமைப்பை சேர்ந்தவர்கள் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என்று காரில் நின்ற படி கூறிவிட்டு அவர் அங்கிருந்து தூத்துக்குடி நோக்கி காரில் கிளம்பி சென்றார்.</p>
<p style="text-align: left;"><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/gk/deepest-river-in-india-269830" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article