பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? ஆதம்பாக்கத்தில் உருவான இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!

பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? ஆதம்பாக்கத்தில் உருவான இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
News Image
<p style="text-align: justify;"><strong>Chennai Metro Engineering Marvel:</strong> சென்னை நகரப் போக்குவரத்து கட்டமைப்பில் பெரும் திருப்புமுனையாக உருவாகி வரும் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளில், மிகவும் அபூர்வமான மற்றும் சவாலான பொறியியல் கட்டமைப்பு முறை கையாளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை செல்லக்கூடிய 5-வது வழித்தடத்திற்கான உயர்மட்டப் பாதை, ஆதம்பாக்கத்தில் அமைந்துள்ள பறக்கும் ரயில் நிலையத்தின் (MRTS) கூரையை ஊடுருவிச் செல்லும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு வருகிறது.</p> <h3 style="text-align: justify;">குடியிருப்புகளைப் பாதுகாக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடம்</h3> <p style="text-align: justify;">இந்தச் சவாலான பாதை அமைப்பது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் டி. அர்ச்சுனன் கூறுகையில், வழக்கமான வழிகளில் பாதையை அமைத்தால் அப்பகுதியில் உள்ள ஏராளமான குடியிருப்புகளையும் வீடுகளையும் இடிக்க வேண்டிய சூழல் உருவானது. பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கவே, கூடுதல் செலவு மற்றும் தொழில்நுட்பச் சவால்கள் இருந்தபோதிலும் பறக்கும் ரயில் நிலையத்தின் மேல் பகுதி வழியே பாதையைக் கொண்டு செல்லும் இந்த மாற்றுக் கட்டமைப்புத் திட்டம் தேர்வு செய்யப்பட்டது என்று தெரிவித்தார்.</p> <h3 style="text-align: justify;">கூரை அகற்றம் மற்றும் 20 மீட்டர் உயரத்தில் கட்டுமானப் பணிகள்</h3> <p style="text-align: justify;">இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் நிலையக் கூரையின் ஒரு சிறிய பகுதி மற்றும் பக்கவாட்டுச் சுவர்கள் கவனமாக அகற்றப்பட்டன. தரைப்பகுதியில் இருந்து சுமார் 20 மீட்டர் உயரத்தில், பறக்கும் ரயில் பாதையின் மேல் மின்சாரக் கம்பிகளுக்கு மேல் மெட்ரோ ரயில்கள் இயங்கும் வகையில் இந்தப் பாதை அமைக்கப்படுகிறது. இதற்காக ரயில்வே பாதுகாப்பு ஆணையரிடம் (CRS) முறையான அனுமதியும் பெறப்பட்டுள்ளது.</p> <h3 style="text-align: justify;">வளைவில் பயன்படும் ஸ்டீல் கிர்டர்கள்</h3> <p style="text-align: justify;">தற்போது இயங்கி வரும் ரயில் பாதைக்கு மேல் கான்கிரீட் தூண்களை அமைப்பது சாத்தியமில்லை என்பதால், 56 மீட்டர் நீளமுள்ள 'ஸ்டீல் காம்போசிட் கிர்டர்கள்' பயன்படுத்தப்பட்டுள்ளன. வளைவான பகுதியில் இத்தகைய இரும்பு கிர்டர்களைப் பயன்படுத்தும் இந்தியாவின் முதல் மெட்ரோ நிறுவனம் சென்னை மெட்ரோ என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டில் தொடங்கி சுமார் மூன்று மாதங்கள் வரை நடைபெற்ற இந்தப் பணிகள், பரங்கிமலை - வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை முழுமையாகத் தொடங்குவதற்கு முன்பாகவே வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன.</p> <h3 style="text-align: justify;">பயணிகள் இணைப்பு வசதி</h3> <p style="text-align: justify;">இந்த அமைப்பில் சென்னை மெட்ரோ ரயில் பாதை, பறக்கும் ரயில் பாதைக்கு செங்குத்தாகச் செல்கிறது. இரு பாதைகளுக்கும் இடையே 6.8 மீட்டர் இடைவெளி பராமரிக்கப்படுகிறது. மெட்ரோவிலிருந்து பறக்கும் ரயில் சேவைக்கு மாற விரும்பும் பயணிகள், ஆதம்பாக்கம் மெட்ரோ நிலையத்திற்கு அடுத்ததாக அமைந்துள்ள வானுவம்பேட்டை மெட்ரோ நிலையத்தைப் பயன்படுத்தலாம். அங்கிருந்து 5 நிமிட நடைபயணத்தில் பறக்கும் ரயில் நிலையத்தை அடைந்து தங்களின் பயணத்தைத் தொடர முடியும்.</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks