
<h2>காவிரி நீர்- விவசாயிகள் பாதிப்பு</h2>
<p>தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே காவிரி நீர் தொடர்பாக தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.அந்த வகையில் காவிரியில் இருந்து உரிய வகையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்காமல் கர்நாடகா வஞ்சித்து வருகிறது. இதனால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குறுவை சாகுபடியும் பாதிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த நிலையில் ஏற்கனவே தமிழகத்திற்கு தண்ணீர் தர கர்நாடகா மறுத்து வரும் நிலையில், காவிரிக்கு குறுக்கே மேகதாது அணை கட்ட திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் விஜய் கர்நாடாக சென்று காவிரி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டார். ஆனால் இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.</p>
<h2>தனிமைப்பட்டு நிற்கும் முதல்வர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a></h2>
<p>இருந்த போதும் கர்நாடகா செல்வது உறுதியாகியிருந்த நிலையில், கர்நாடகாவில் தற்போது சூழ்நிலை சரியில்லாத காரணத்தால் கர்நாடகாவிற்கு வரவேண்டாம் என அம்மாநில முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த நிலையில், இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்துத் தனிமைப்பட்டு நிற்கிறார் முதலமைச்சர்.</p>
<p>தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயிகள் சங்கத்தினர் எல்லோரும் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனளிக்காது என்று எச்சரித்தோம். கர்நாடகம் செல்ல வேண்டாம் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்குக் கோரிக்கை வைத்தோம். தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரமுடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்ட மாநிலத்துடன் சட்டரீதியாகத்தான் போராட வேண்டும் என்பதே கடந்தகாலத்தில் நாம் பெற்ற படிப்பினை. </p>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="ta">தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்துத் தனிமைப்பட்டு நிற்கிறார் முதலமைச்சர்<br /><br />தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயிகள் சங்கத்தினர் எல்லோரும் <a href="https://x.com/hashtag/MekedatuDam?src=hash&ref_src=twsrc%5Etfw">#MekedatuDam</a> விவகாரத்தில் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனளிக்காது என்று எச்சரித்தோம். கர்நாடகம் செல்ல வேண்டாம் என்று…</p>
— M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2083441454584926444?ref_src=twsrc%5Etfw">August 1, 2026</a></blockquote>
<p>
<script src="https://platform.x.com/widgets.js" async="" charset="utf-8"></script>
</p>
<h2>கேட்டை சாத்திய கர்நாடக முதல்வர்</h2>
<p>உபரிநீரை வெளியேற்றும் வடிகால் பகுதியாகத்தான் அவர்கள் தமிழ்நாட்டைப் பார்க்கிறார்கள். ஆனால், தான் கர்நாடகம் சென்றால் காவிரியைக் கையோடு எடுத்துவந்து விடலாம் என்று தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் நினைத்தாரோ என்னவோ... நமது எச்சரிக்கைகளை மீறி கர்நாடகம் செல்வதற்குத் தூது அனுப்பினார். தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடச் சொல்லி CWMA உத்தரவிட்டதும் "நீங்கள் இப்போதைக்கு வரவேண்டாம்" என்று கேட்டைச் சாத்திவிட்டார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளை முன்பே கணித்துதான், தமிழ்நாட்டிலுள்ள அனைவரும் எச்சரித்தோம்.</p>
<p>இனியேனும் தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சினையான காவிரி விவகாரத்தை முதலமைச்சர் ஆலோசனைகளோடு அணுக வேண்டும். நமது முதலமைச்சரை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு, கர்நாடகத்தில் ஆகஸ்ட் 2 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அம்மாநில முதலமைச்சர் அழைப்பு விடுத்து அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதைத் தனது செயலால் உணர்த்திவிட்டார். முதலமைச்சர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது எப்போது? முடியுமா முடியாதா? என <a title="ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/topic/mk-stalin" data-type="interlinkingkeywords">ஸ்டாலின்</a> கேள்வி எழுப்பியுள்ளார்.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/8-reasons-for-frequent-colds-and-coughs-269735" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article