"சிபிஐ, சிபிஎம் தடை செய்யப்பட்ட கட்சிகளா? விவரம் சேகரிப்பது ஏன்?"- அன்புமணி கடும் கண்டனம்!

"சிபிஐ, சிபிஎம் தடை செய்யப்பட்ட கட்சிகளா? விவரம் சேகரிப்பது ஏன்?"- அன்புமணி கடும் கண்டனம்!
News Image
<div>சிபிஐ, சிபிஎம் கட்சிகள் தடை செய்யப்பட்டவையா? கட்சி உறுப்பினர்கள் குறித்த விவரங்களை சேகரிக்க</div> <div>ஆணையிட்ட வட்டாட்சியர் மீது நடவடிக்கை வேண்டும் என்று&nbsp;பா.ம.க. தலைவர்அன்புமணி இராமதாஸ் &nbsp;வலியுறுத்தி உள்ளார்.&nbsp;</div> <div>&nbsp;</div> <div><strong>இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:</strong></div> <p>&rsquo;&rsquo;திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , &nbsp;மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்கள், நிர்வாகிகள் குறித்த விவரங்களை சில மணி நேரங்களில் திரட்டி &nbsp;வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஒப்படைக்க வேண்டும் என்று குஜிலியம்பாறை வட்டாட்சியர் &nbsp;அய்யாசாமி ஆணையிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. எந்த காரணமும் இல்லாமல் பொதுவுடைமை கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை குற்றவாளிகளைப் போல நினைத்து அவர்களின் விவரங்களை சேகரிக்க வட்டாட்சியர் ஆணையிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.<br /><br />இந்திய விடுதலைக்கு முன்பு சில கட்சிகள் தடை செய்யப்பட்டிருந்த காலத்திலும், &nbsp;நெருக்கடி நிலை காலத்திலும் தான் &nbsp;ஆட்சியாளர்களுக்கு எதிராக அரசியல் கட்சிகள் கட்சிகள் போராடுவதைத் தடுக்க &nbsp;அரசியல் கட்சியினரின் &nbsp;விவரங்களை கடைநிலை அதிகாரிகளைக் கொண்டு &nbsp;சேகரிப்பது வழக்கமாக இருந்தது. ஆங்கிலேயர்களும், அடக்குமுறையாளர்களும் பயன்படுத்திய அதே சட்டவிரோத வித்தையை ஒரு வட்டாட்சியரும் பயன்படுத்தியிருப்பது அதிகார அத்துமீறல் ஆகும், இதை சகித்துக் கொள்ள முடியாது.<br /><br /><strong>எந்தக் குற்றமும் செய்யவில்லை</strong></p> <div><br />தனிநபர் விவரங்களை சேகரிக்கும் அளவுக்கு பொதுவுடைமைக் கட்சியினர் எந்தக் குற்றமும் செய்யவில்லை. சம்பந்தப்பட்ட வட்டாட்சியரின் தன்னிச்சையான, மக்கள் விரோத செயல்பாடுகளைக் கண்டித்து &nbsp;குஜிலியம்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நாளை நடத்தப்போவதாக மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்திருந்தது. தமக்கு எதிராக பொதுவுடமை கட்சி போராட்டம் அறிவித்திருப்பதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தான் இப்படி &nbsp;ஓர் அடக்குமுறையை &nbsp;வட்டாட்சியர் &nbsp;ஏவி விட்டுள்ளார்.<br /><br />இதில் கொடுமை என்னவென்றால் இது தொடர்பாக குஜிலியம்பாறை வட்டாட்சியர் நேற்று நண்பகலில் வெளியிட்ட சுற்றறிக்கையின் நகல் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், &nbsp;பழனி வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்டோருக்கும் அனுப்பப்பட்டிருப்பதும், &nbsp;அதைப் பார்த்த பிறகும் &nbsp;குஜிலியம்பாறை &nbsp;வட்டாட்சியரின் அத்துமீறிய செயலை கண்டிக்கவோ, அவர் மீது நடவடிக்கை எடுக்கவோ &nbsp;அந்த உயரதிகாரிகள் முன்வரவில்லை என்பது தான்.</div> <h2><br /><strong>சட்டப்படி கடுமையான நடவடிக்கை</strong></h2> <div>&nbsp;</div> <div>மக்களின் நலன்களுக்காகவும், &nbsp;உரிமைகளுக்காகவும் போராடும் அதிகாரம் &nbsp;இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி &nbsp;அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. &nbsp;அதைப் பறிக்கும் அதிகாரமோ, அதற்காக அச்சுறுத்தும் அதிகாரமோ &nbsp;வட்டாட்சியருக்கும் கிடையாது; மாநில அரசுக்கும் கிடையாது. இதையெல்லாம் மறந்து விட்டு, பொதுவுடமைக் கட்சியினரை மிரட்டும் செயலில் ஈடுபட்ட குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது தமிழக அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்&rsquo;&rsquo; என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.&nbsp;</div> <div><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/gk/what-are-some-things-you-should-never-search-on-google-271570" width="631" height="381" scrolling="no"></iframe></div>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks