இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!

இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
News Image
<p>விழுப்புரம் : திண்டிவனம் அருகே பேராசிரியையிடம் இன்ஸ்டாகிராமில் காதலிப்பதாக நாடகமாடி தனது &nbsp;நண்பர்களை வைத்தே திட்டமிட்டு ஒன்றரை சவரன் தங்கச் சங்கிலியை பறித்த காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.</p> <h2>இன்ஸ்டாகிராம் பழக்கமும் பணப் பறிப்பும்</h2> <p>இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி காதலிப்பதாக நாடகமாடி, கல்லூரி பேராசிரியையிடம் திட்டமிட்டு ஒன்றரை சவரன் தங்கச் சங்கிலி மற்றும் செல்போனைப் பறித்த திருமணமான நபர் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் உட்பட மொத்தம் 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.</p> <p>செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன். இவருக்குத் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவருக்கும், திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 40 வயதுடைய தனியார் கல்லூரி பேராசிரியைகும் இடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது காதலாக மாறியுள்ளது. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட தமிழரசன், பேராசிரியையிடம் தனது தேவைக்கெனக் கூறி சிறுகச் சிறுக சுமார் 50,000 வரை பணம் வாங்கியுள்ளார்.</p> <h3>சதித் திட்டமும் அரங்கேற்றமும்</h3> <p>இதனிடையே, தமிழரசனின் இன்ஸ்டாகிராம் காதல் விவகாரம் தெரியவந்ததால், ஆத்திரமடைந்த அவரது மனைவி அவரைப் பிரிந்து சென்றுவிட்டார். இதனால் தான் மனவேதனையில் இருப்பதாக அந்த பேராசிரியையிடம் தமிழரசன் கூறியுள்ளார்.</p> <p>மேலும், இன்ஸ்டாகிராம் வீடியோ காலின் போது பேராசிரியையின் கழுத்தில் இருந்த ஒன்றரை சவரன் தங்கச் சங்கிலியைப் பார்த்த தமிழரசனுக்கு, அதை எப்படியாவது பறிக்க வேண்டும் என்ற எண்ணம் தோண்டியுள்ளது.</p> <p>இதற்காகத் தனது நண்பர்களான செய்யாறைச் சேர்ந்த அருண்குமார் (34), ராஜேஷ் (31), மற்றும் சுந்தர் (42) ஆகியோருடன் இணைந்து ஒரு சதித் திட்டத்தைத் தீட்டினார். திட்டத்தின்படி, பேராசிரியையை நேரில் சந்திப்பதற்காக வந்தவாசியை അടുത്ത புலிவாய் கிராமக் கூட்டுச்சாலை அருகே வருமாறு வரவழைத்துள்ளார்.</p> <h2>மிரட்டிப் பறித்த நண்பர்கள் - திடுக்கிடும் நாடகம்</h2> <p>பேராசிரியை அங்கு வந்து தமிழரசனுடன் பேசிக் கொண்டிருந்தபோது, முன்கூட்டியே திட்டமிட்டபடி தமிழரசனின் நண்பர்கள் 3 பேர் அங்கு வந்து இருவரையும் மிரட்டியுள்ளனர். நாடகத்தை நம்ப வைப்பதற்காகத் தமிழரசனையும் அவர்கள் தாக்குவது போல் நடித்துள்ளனர். பின்னர், பேராசிரியையின் கழுத்தில் இருந்த ஒன்றரை சவரன் தங்கச் சங்கிலி மற்றும் அவரது செல்போனைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.</p> <h2>சிசிடிவி காட்சிகளால் வெளிவந்த உண்மை</h2> <p>தமிழரசனின் சதித்திட்டம் அறியாத பேராசிரியை, அவரையே அழைத்துக்கொண்டு காவல் நிலையத்திற்குச் சென்று புகாரளித்துள்ளார்.</p> <p>வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி (CCTV) கண்காணிப்பு கேமரா காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில், பேராசிரியையைச் சந்திப்பதற்கு முன்பாகவே தமிழரசன் தனது 3 நண்பர்களுடன் அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்து, சம்பவத்திற்கான இடத்தை தேர்வு செய்தது பட்டவர்த்தனமாகத் தெரியவந்தது.</p> <h2>4 பேர் கைது - பொருட்கள் பறிமுதல்</h2> <p>இதனைத் தொடர்ந்து, தமிழரசனிடம் காவல்துறையினர் பாணியில் தீவிர விசாரணை நடத்தியபோது, நண்பர்களுடன் சேர்ந்து நாடகமாடி நகை மற்றும் செல்போனைப் பறித்த குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, தமிழரசன் மற்றும் அவரது நண்பர்களான அருண்குமார், ராஜேஷ், சுந்தர் ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 சவரன் தங்க நகை, 5 செல்போன்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks