
<h2>மேகாதாது விவகாரம்- சட்டமன்றத்தில் வாக்கு வாதம்</h2>
<p>தமிழக சட்டமன்றத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது எதிர்கட்சி தலைவர் உதயநிதி பேசுகையில், தமிழகத்தின் முக்கிய பிரச்சனையான காவிரி பிரச்சனையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளிக்கும் வகையில், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் ஆர்ஜூன் பேசுகையில், எதிர்கட்சி தலைவர் உரையில் தவறான தகவல் உள்ளதாக குறிப்பிட்டார், பிரதமருக்கு ஒரு முறை மட்டுமே கடிதம் எழுதியதாக கூறினார்.</p>
<p>முதலில் பேசும்போது ஒரு முறை என தெரிவித்தார். அப்புறம் இரு முறை என சொன்னார். அடுத்தாக விவசாயிகள் சந்திக்கவில்லையென கூறினார். இன்று மதியம் டெல்டா மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாய சங்கங்களையும் மூத்த அமைச்சர்கள் சந்தித்து பேசவுள்ளோம். இதற்கு போன வாரமே முதலமைச்சர் அனுமதி கொடுத்ததாக குறிப்பிட்டார். </p>
<h2>உச்சநீதிமன்றம் 3 முறை தள்ளுபடி செய்தது ஏன்.?</h2>
<p>தொடர்ந்து பேசிய அவர், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசின் திட்ட அறிக்கைக்கு எதிராக அப்போது முதலமைச்சராக இருந்த ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. அடுத்தாக மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் நமக்கு இருந்த கடைசி வாய்ப்பும் இல்லாமல் போனது. எனவே தமிழகத்தில் உரிமையை காக்கும் விஷயத்தில் உரிய வகையில் கருத்தை உச்சநீதிமன்றத்தில் எடுத்து கூறாமல் 3 முறை தோல்வி அடைந்தது ஏன் என விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.</p>
<h2>ஒரு நாள் கூட காலம் தாழ்த்தவில்லை- கே.என்.நேரு</h2>
<p>இதற்கு பதில் அளித்த திமுக சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் கே.என்.நேரு கூறுகையில், மேகதாது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அடுத்தாக மறு சீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்து. அடுத்தாக மறு சீராய்வு மனு போட்ட போது கால அவகாசம் எடுத்த வர வேண்டும் என சொன்னார்கள்.</p>
<p>இதனிடையே முதலமைச்சரை புகழ்ந்து பேசுவது இயல்பு, அதே நேரம் இந்த விவகாரத்தில் சண்டை வளர்க்காமல், மேகதாது விவகாரத்தில் கருத்து மாறுபாடு இல்லாமல் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்வதாக கூறினார். மேலும் மேகதாது விஷயத்தில் முன்னாள் முதலமைச்சர் <a title="ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/topic/mk-stalin" data-type="interlinkingkeywords">ஸ்டாலின்</a> ஒரு நாள் கூட காலம் தாழ்த்தாமல் உரிய நடவடிக்கை எடுத்தார் என்பது தான் வரலாறு என கே.என்.நேரு தெரிவித்தார். </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/auto/tvs-jupiter-scooter-travel-240-km-on-just-5-liters-270117" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article