போதை இல்லா தலைமுறைக்காக பூதலூர் பள்ளியின் போராட்டம்: மாநில அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை

போதை இல்லா தலைமுறைக்காக பூதலூர் பள்ளியின் போராட்டம்: மாநில அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை
News Image
<p style="text-align: justify;">தஞ்சாவூர்: போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தி, தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, போதைப்பொருள் விழிப்புணர்வில் மீண்டும் மாநில அளவில் 2ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.</p> <p style="text-align: justify;">சென்னையில் இன்று நடைபெற்ற பெருந்திரள் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி மற்றும் விருது வழங்கும் விழாவில், போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக பூதலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மாநில அளவில் 2-ம் இடம் வழங்கப்பட்டது. இதற்காக ரூ.75 ஆயிரம் பரிசுத்தொகையுடன் வெற்றிக்கோப்பையும் வழங்கப்பட்டது.</p> <p style="text-align: justify;">விருது வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ஜோசப் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a>, பூதலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் பரிசுத்தொகை மற்றும் வெற்றிக்கோப்பையை வழங்கி பாராட்டினார்.</p> <p style="text-align: justify;"><strong>தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சாதனை</strong></p> <p style="text-align: justify;">பூதலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி போதைப்பொருள் விழிப்புணர்வு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டில் மாநில அளவில் முதல் பரிசை வென்றிருந்த இந்த பள்ளி, இந்த ஆண்டும் மாநில அளவில் 2-ம் இடத்தை பிடித்து தனது சாதனையை தொடர்ந்து வருகிறது. மாணவர்களுக்கு கல்வி மட்டுமின்றி, சமூக பொறுப்பு குறித்த புரிதலையும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பள்ளி சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p> <p style="text-align: justify;">போதைப்பொருளின் தீமைகள், அதனால் ஏற்படும் உடல் மற்றும் மன பாதிப்புகள், மாணவர்களின் எதிர்காலத்தில் ஏற்படும் தாக்கங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், போதைப்பொருளுக்கு அடிமையாகாமல் மாணவர்கள் தங்களையும் தங்களது நண்பர்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.</p> <p style="text-align: justify;"><strong>ஒரு பழக்கம்... எதிர்காலத்தையே மாற்றிவிடும்!</strong></p> <p style="text-align: justify;">போதைப்பொருட்கள் ஒருவரின் உடல்நலத்தை மட்டுமின்றி, அவரின் கல்வி, குடும்பம், பொருளாதாரம் மற்றும் சமூக வாழ்க்கையையும் கடுமையாக பாதிக்கும் அபாயம் கொண்டவை.</p> <p style="text-align: justify;">குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப்பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாகவும், நண்பர்கள் மூலமாகவோ அல்லது சமூக வலைதளங்களில் கிடைக்கும் தவறான தொடர்புகள் மூலமாகவோ சிலர் போதைப்பழக்கத்திற்கு ஆளாகும் அபாயம் இருப்பதாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.</p> <p style="text-align: justify;">போதைப்பொருளை பயன்படுத்தத் தொடங்கும் ஒருவருக்கு ஆரம்பத்தில் அது ஒரு சாதாரண பழக்கமாகத் தோன்றினாலும், நாளடைவில் அது அடிமைத்தனமாக மாறக்கூடும். இதனால் உடலின் இயல்பான செயல்பாடுகள் பாதிக்கப்படுவதுடன், மனநிலை மாற்றங்கள், கவனச்சிதறல், கல்வியில் ஆர்வமின்மை, குடும்பத்தினருடன் மோதல், சமூகத்தில் இருந்து விலகுதல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது.</p> <p style="text-align: justify;">மேலும், போதைப்பொருள் பழக்கம் ஒரு தனிநபரின் பிரச்சினையாக மட்டும் இல்லாமல், குடும்பத்தையும் சமூகத்தையும் பாதிக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக மாறுகிறது. இளம் வயதிலேயே போதைப்பழக்கத்திற்கு ஆளாகும் மாணவர்களின் எதிர்கால கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளும் பாதிக்கப்படலாம்.</p> <p style="text-align: justify;"><strong>மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி</strong></p> <p style="text-align: justify;">இதனை கருத்தில் கொண்டு பூதலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு போதைப்பொருளின் தீமைகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.</p> <p style="text-align: justify;">போதைப்பொருளுக்கு எதிராக மாணவர்கள் உறுதிமொழி ஏற்பது, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் மூலம் போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவதில் மாணவர்களின் பங்களிப்பு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.</p> <p style="text-align: justify;">&lsquo;போதை இல்லாத மாணவர் சமுதாயம், போதை இல்லாத குடும்பம், போதை இல்லாத எதிர்காலம்&rsquo; என்ற எண்ணத்தை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதில் பள்ளியின் செயல்பாடுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.</p> <p style="text-align: justify;"><strong>விருது பெற்ற பள்ளிக்கு பாராட்டு</strong></p> <p style="text-align: justify;">சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பூதலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இராமச்சந்திரன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பேகன் மற்றும் மாணவர்கள் கோபிகிருஷ்ணன், சந்தோஷ், அரவிந்த், எல்க்கானா, புருஷோத்தமன் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளிக்கான விருதை பெற்றுக்கொண்டனர்.</p> <p style="text-align: justify;">மாநில அளவில் 2-ம் இடத்துக்கான ரூ.75 ஆயிரம் பரிசுத்தொகையும், வெற்றிக்கோப்பையும் பெற்றது பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p> <p style="text-align: justify;">கடந்த ஆண்டு மாநில அளவில் முதல் பரிசை வென்ற நிலையில், இந்த ஆண்டும் தொடர்ந்து மாநில அளவில் சிறப்பிடம் பெற்றிருப்பது பூதலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பணிகளுக்கு கிடைத்த அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.</p> <p style="text-align: justify;">போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு என்பது ஒரு நாள் நிகழ்ச்சியாக இல்லாமல், மாணவர்களின் வாழ்க்கை முழுவதும் தொடர வேண்டிய சமூகப் பொறுப்பு. அந்த வகையில், கல்வியுடன் சமூக அக்கறையையும் மாணவர்களிடம் வளர்த்து வரும் பூதலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, போதை இல்லாத எதிர்கால தலைமுறையை உருவாக்குவதற்கான முயற்சியில் தொடர்ந்து முன்னுதாரணமாக விளங்கி வருகிறது.</p> <p style="text-align: justify;">பூதலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் இந்த சாதனை, பள்ளி மாணவர்களுக்கு மட்டுமின்றி தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் உள்ள மாணவர்கள் மத்தியில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks