
<p>தமிழ்நாட்டின் சட்டமன்ற கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்று நடந்த மானியக்கோரிக்கையில் சமூகநீதித்துறையின் புதிய அறிவிப்புகளை அந்த துறையின் அமைச்சர் வன்னியரசு வெளியிட்டார்.</p>
<p>அவர் சட்டமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது, </p>
<p>1. ஊட்டி பழங்குடியினர் ஆய்வு மையத்தின் விரிவாக்கமாக சென்னை நந்தனத்தில் பழங்குடியினர் பண்பாட்டு மையம்</p>
<p>2. சமூக நீதித்துறையின் கீழ் செயல்படும் 23 ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்.</p>
<p>3. பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு கல்வி, நிதி உதவிகளை ஒருங்கிணைத்து வழங்க சமூக நீதி அறக்கட்டளை உருவாக்கப்படும்.</p>
<p>4. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையில் உள்ள வேறுபாடுகளை களைந்து சமமாக உயர்த்தி வழங்குதல்</p>
<p>5. பொருளாதாரத்தில் பின்தங்கிய 1 லட்சம் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின குடும்பத் தலைவிகளின் மேம்பாட்டிற்கான விடிவெள்ளி - மகளிர் வாழ்வாதார திட்டம்</p>
<p>6. வீடற்ற தூய்மை பணியாளர்களுக்கு 2,500 கான்கிரீட் வீடுகள் வழங்குதல்</p>
<p>7. 1000 ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 90 சதவீத மானியத்துடன் விரைவு மின் இணைப்பு </p>
<p>8. வீடற்ற பழங்குடியின மக்களுக்கு 2 ஆயிரம் கான்கிரீட் வீடுகளை கட்டிக் கொடுத்தல்</p>
<p>9. பள்ளிகளல் தினசரி தூய்மை, குடிநீர், கழிப்பறை மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டம்</p>
<p>10. வீடற்ற ஆதிதிராவிட குடும்பங்களுக்கு 5 ஆயிரம் கான்கிரீட் கட்டித் தரப்படும்</p>
<p>11. மாத உணவுக்கட்டணம் பள்ளி மாணவர்களுக்கு ரூபாய் 1800 ஆகவும், கல்லூரி மாணவர்களுக்கு ரூபாய் 2 ஆயிரமாகவும் உயர்வு</p>
<p>12. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகளுக்கான வருடாந்திர பராமரிப்பு தொகை உயர்வு ( ரூபாய் 6.5 கோடி)</p>
<p>13. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் தங்கும் பள்ளி விடுதிகளின் ஆண்டு பராமரிப்பு நிதி பள்ளி விடுதிகளுக்கு ரூபாய் 50 ஆயிரத்தில் இருந்து ரூபாய் 75 ஆயிரமாகவும், கல்லூரி விடுதிகளுக்கு ரூபா் 50 ஆயிரத்தில் இருந்து ரூபாய் 1 லட்சமாகவும் உயர்வு</p>
<p>14. ஆதிதிராவிடர் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் புதிய 100 சமுதாய கூடங்கள்</p>
<p>15. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் படிப்பதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்கும் பொருட்டு 150 சமூக நீதி விடுதிகள் ரூபாய் 160 கோடியில் கட்டப்படும்</p>
<p>16. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கவும் வருவாய் ஈட்டவும் கோவையில் வணிக மையம்.</p>
<p>17. சிறப்பாக செயல்படும் ஆசிரியர் மற்றும் காப்பாளர்களை ஊக்குவிக்க அறிவொளி ஆசிரியர்/ காப்பாளர் விருது</p>
<p>18. விடுதி மேலாண்மை மற்றும் மாணவர் பாதுகாப்பை மேம்படுத்த அரண் - விடுதி பராமரிப்பு மேலாண்மை அமைப்பு</p>
<p>19. ஆதிதிராவிட மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டிற்காக சமூக நீதிநல வாரியம் அமைக்கப்படும்.</p>
<p>20. மாணவர்களின் வாசிப்பு பழக்கம் மற்றும் போட்டித் தேர்வுத் திறனை வளர்க்க அனைத்து விடுதிகளிலும் அம்பேத்கர் படிப்பகம்.</p>
<p>இவ்வாறு அமைச்சர் வன்னியரசு அறிவிப்பை வெளியிட்டார்.<br /><br /></p>
<p> </p>
Source: Read Full Article