Vanni Arasu: "ரூ.154 கோடியை ரிலீஸ் பண்ணுங்க..." ராம்தாஸ் அத்வாலேவிற்கு வன்னி அரசு நேரில் மனு!

Vanni Arasu: "ரூ.154 கோடியை ரிலீஸ் பண்ணுங்க..." ராம்தாஸ் அத்வாலேவிற்கு வன்னி அரசு நேரில் மனு!
News Image
<p>மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே இன்று சென்னை வருகை புரிந்தார். அவரை தமிழக சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு நேரில் சந்தித்தார். அப்போது, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.&nbsp;</p> <p>இந்த சந்திப்பின்போது என்னென்ன கோரிக்கைகளை முன்வைத்தார்? என்பதை அமைச்சர் வன்னி அரசு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது,</p> <h2><strong>மனுவில் இருப்பது என்னென்ன?</strong></h2> <p>மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை ஒன்றிய இணை அமைச்சர் ராம்தாஸ் அதாவலேவை அரசு விருந்தினர் மாளிகையில் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம்.</p> <p>நமது சமூக நீதித்துறையின் சார்பில் கீழ்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஒன்றிய அமைச்சர் அதாவலேவிடம் அளித்தோம்.</p> <h2>8 லட்சமாக அதிகரிக்க வேண்டும்:</h2> <p>1. பட்டியலின மாணவர்களுக்கான ப்ரீ மெட்ரிக் &amp; போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசின் பங்கை உரிய நேரத்தில் விடுவிக்க வேண்டும்.</p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="ta">இன்று (17.07.26) சென்னை வருகை தந்த மாண்புமிகு சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ராம்தாஸ் அதாவலே அவர்களை அரசு விருந்தினர் மாளிகையில் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம்.<br /><br />நமது சமூக நீதித்துறையின் சார்பில் கீழ்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாண்புமிகு ஒன்றிய&hellip; <a href="https://t.co/yxSle17Dv5">pic.twitter.com/yxSle17Dv5</a></p> &mdash; வன்னி அரசு (@VanniTamizhVCK) <a href="https://x.com/VanniTamizhVCK/status/2078057636667510801?ref_src=twsrc%5Etfw">July 17, 2026</a></blockquote> <p> <script src="https://platform.x.com/widgets.js" async="" charset="utf-8"></script> </p> <p>2. பட்டியலின மாணவர்களுக்கான ப்ரீ மெட்ரிக் &amp; போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு பெற்றோர்களின் ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.8 லட்சமாக அதிகரிக்க வேண்டும்.</p> <h2><strong>கல்வி உதவித்தொகை:</strong></h2> <p>3. விடுதிகளில் தங்கி பயின்று வரும் மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை கீழ் வழங்கப்படும் Maintenance படியை உயர்த்தி வழங்க வேண்டும்.</p> <p>4. பட்டியலின மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக நடைமுறைப்படுத்தப்படும் ஒன்றிய அரசு திட்டமான PM-AJAY கீழ் நிலுவையில் உள்ள ரூ.154.08 கோடியை உடனே விடுவிக்க வேண்டும்.</p> <h2>நிலுவைத் தொகை:</h2> <p>5. சிவில் உரிமைகள் பாதுகாப்பு சட்டம், 1955 மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம், 1989 ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ரூ.61 கோடி நிலுவை தொகையை உடனே விடுவிக்க வேண்டும்.</p> <p>6. தமிழ்நாட்டில் உள்ள பட்டியலின மற்றும் பழங்குடியின சமூகங்களின் பெயர்களில் உள்ள &nbsp;'ன்' விகுதியை 'ர்' விகுதியாக மாற்றுவதற்கு, உரிய சட்ட நடவடிக்கையை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும்.</p> <p>நமது கோரிக்கைகளை கவனத்தோடு கேட்டறிந்த மாண்புமிகு அமைச்சர் அவர்கள், துறை அதிகாரிகளிடம் ஆலோசித்து நல்லதொரு முடிவு எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இச்சந்திப்பின்போது சமூக நீதித்துறை செயலாளர் டாக்டர் என். சுப்பையன் உடன் இருந்தார்.</p> <p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/education/best-online-courses-at-low-cost-267871" width="631" height="381" scrolling="no"></iframe></p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks