Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!

Tamil Nadu Top  News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
News Image
<p>இன்றைய டிஜிட்டல் உலகில் செய்தித்தாள்களை படிக்கும் பழக்கும் குறைந்து வருகிறது. செய்திகளை தொலைக்காட்சிகளில் பார்க்கும் வழக்கமும் அருகி வருகிறது. அவசர, அவசரமான வாழ்வில் தங்களுக்கு தேவையான செய்திகளை மக்கள் விரைவாக, பார்த்த நொடிகளிலேயே தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். அதற்காக ஏபிபி நாடு முக்கியமான செய்திகளை மட்டும் தொகுத்து தலைப்புச் செய்திகளாக ஒரு சில வரிகளில் தருகிறது. இன்றைக்கு இதை மட்டும் நீங்கள் படித்தால் மட்டும் நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் உங்கள் கவனத்தில் இருந்து விலகாது.</p> <h2>ஜூலை 21,2026ஆம் தேதிக்கான முக்கிய தலைப்புச் செய்திகள்.&nbsp;</h2> <h3>1. புதுச்சேரியில் நாளை 'ஜனநாயகன்" சிறப்புக் காட்சிக்கு அனுமதி</h3> <p>முதலமைச்சர் விஜயின் கடைசி திரைப்படமான &lsquo;ஜனநாயகன்&rsquo; Jananayagan&nbsp; நாளை (23.07.2026) புதுச்சேரியில் 13 திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் திருக்கனூர் சுதா, வில்லியனூர் அசோக், ஜீவா திரையரங்குகளில் காலை 7 மணிக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.&nbsp;</p> <h3>2. US Iran War: என்னது, ஈரான் போர்னால அமெரிக்கா கிட்ட ஏவுகணை காலியாயிடுச்சா.! சொல்லியிருக்கறது யார் தெரியுமா.?</h3> <p>அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க ராணுவத்தின் தயார்நிலை குறித்து தற்போது புதிய கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஈரானுக்கு எதிரான அமெரிக்க ராணுவத்தின் இலக்குகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில், மோதல் தீவிரமடைந்தால், ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளின் பற்றாக்குறை அமெரிக்காவிற்கு ஒரு பெரும் சவாலாக மாறக்கூடும் என்று அமெரிக்க ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. இருப்பினும், அதிபர் ட்ரம்பின் அனைத்து மூலோபாய இலக்குகளையும் நிறைவேற்றுவதற்கு அமெரிக்க ராணுவத்திடம் போதுமான ஆயுதங்கள் உள்ளன என்று கூறி, வெள்ளை மாளிகை இந்த கூற்றுகளை முற்றிலுமாக நிராகரித்துள்ளது.</p> <h3>3. ஒரு துளித் துணிச்சல் கூட இல்ல.. 'டம்மி' முதல்வரா இருக்கீங்களே.! விஜய்யை விமர்சித்த திமுக</h3> <p>திமுக ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவில், ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்து, அவர்களின் எதிர்காலத்தைப் பலியிடும் நீட் அநீதிக்கு எதிராக இன்று இந்திய இளைஞர்களே வீதியில் இறங்கித் துணிச்சலாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டின் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துகொண்டு, ஒன்றிய பா.ஜ.க அரசை எதிர்த்து ஒரு வார்த்தை கூடப் பேசத் துணியாமல், தன் டெல்லி எஜமானர்களுக்குப் பயந்து பதுங்கித் திரிகிறார் இந்த கோழை முதல்வர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a>! காவல் துறையின் அடக்குமுறைகளையும் மீறி, மாணவர்கள் நெஞ்சழுத்தத்தோடு ஊடகங்களைச் சந்தித்துத் தங்கள் உரிமைகளைத் தைரியமாக முழங்குகிறார்கள். ஆனால், நடுத்தெருவில் நின்று போராடும் அந்த சாதாரண மாணவர்களுக்கு இருக்கும் ஒரு துளித் துணிச்சல் கூட இந்த 'டம்மி' முதல்வருக்கு இல்லை என்பதுதான் வெட்கக்கேடு! என திமுக ஐடி விங் பதிவிட்டுள்ளது.&nbsp;</p> <h3>4. கேரளாவுக்குக் கனிமவளக் கடத்தல் - சி.பி.ஐ. விசாரணை கோரி அன்புமணி அதிரடி!</h3> <p>சென்னை: தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரியில் இருந்து கேரள மாநிலத்திற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள பாட்டளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.</p> <h3>5. கட்சி தொடர்பான நீதிமன்ற மனு வாபஸ்: ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு!</h3> <p>சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க.) தலைவராகத் தன்னை அறிவிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நிறுவனர் மருத்துவர் எஸ். ராமதாஸ் திடீரென வாபஸ் பெற்றுக்கொண்டார். இதன் மூலம் பா.ம.க. தலைவராக அன்புமணி ராமதாஸே தொடர்வது உறுதியாகி உள்ளது.</p> <h3>6. தமிழகத்தை குப்பை தொட்டியாக்கும் கேரளா; தினகரன் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்</h3> <p>தென்காசி மாவட்டம், கடையம் அருகே விளைநிலங்களுக்கு அருகே பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் காலாவதியான மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட சுமார் 10 டன் அளவிலான மருத்துவக் கழிவுகள் கேரள மாநிலத்திலிருந்து கொண்டு வந்து கொட்டப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் &nbsp;தமிழகத்தை குப்பைத் தொட்டியாகப் பயன்படுத்தும் கேரளத்தின் போக்கை இரும்புக் கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.</p> <h3>7. Weather Update: தமிழ்நாட்டில் நாளை எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னை? வானிலை கொடுத்த வார்னிங்</h3> <p>தமிழ்நாட்டில் வரும் 24 ஆம் தேதி வரை இடி மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று மாலை மழை பெய்வதற்கான வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 22-07-2026 முதல் 24-07-2026 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks