
<p>உக்ரைனின் ஒடெசா துறைமுகத்திலிருந்து புறப்பட்டுக் கொண்டிருந்த எம்.வி. கோல்டன் லியோ என்ற கப்பல் தாக்கப்பட்டதில், நான்கு இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர். ஒருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாக்குதல் நடந்த நேரத்தில், ஐந்து இந்தியர்கள் உட்பட 17 மாலுமிகள் கப்பலில் இருந்ததாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p>
<h2><span dir="auto">ரஷ்யாவால் தாக்கப்பட்ட கப்பல் - உக்ரேனிய கடற்படை என்ன கூறியது.?</span></h2>
<p><span dir="auto">உக்ரைனிய கடற்படையின் தகவல்படி, கினியா-பிசாவ் கொடியை ஏந்திய 'கோல்டன் லியோ' என்ற கப்பலை ரஷ்யா மூன்று க்ரூஸ் ஏவுகணைகளால் தாக்கியது. அந்த கப்பலில், மெக்காவும், இந்திய-சிரிய மாலுமிகளும் பயணம் செய்தனர். இந்த தாக்குதலால் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. இரவு முழுவதும் மீட்புப் பணிகள் தொடர்ந்ததாக உக்ரைனிய துறைமுக ஆணையம் தெரிவித்தது. மொத்தம் 9 மாலுமிகளும் ஒரு விமானியும் உயிரிழந்தனர்.</span></p>
<h2><span dir="auto">இந்திய வெளியுறவு அமைச்சக அறிக்கை</span></h2>
<p><span dir="auto">இது சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், "2026 ஜூலை 19 ஆம் தேதி மாலையில், ஒடெசா துறைமுகத்திலிருந்து புறப்பட்டுக் கொண்டிருந்த எம்.வி. கோல்டன் லியோ கப்பல் தாக்கப்பட்டது. கப்பலில் ஐந்து இந்தியர்களும் இருந்தனர். துரதிர்ஷ்டவசமாக, நான்கு இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். ஒருவர் மட்டுமே கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாங்கள் உக்ரைனில் நிலவும் சூழ்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம். உயிரிழந்த இந்தியர்களின் குடும்பங்களுக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், காயமடைந்த இந்தியர் விரைவில் முழுமையாக குணமடைய வாழ்த்துகிறோம்," என்று கூறியுள்ளது.</span></p>
<p><span dir="auto">அதோடு, “இத்தகைய தாக்குதல்களை இந்தியா கண்டிக்கிறது. மேலும், வர்த்தகக் கப்பல்களைக் குறிவைப்பதும், அப்பாவிப் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதும், அல்லது கடல் மற்றும் வர்த்தகச் சுதந்திரத்திற்கு இடையூறு விளைவிப்பதும் கண்டிக்கத்தக்கது. அத்தகைய செயல்கள் செய்யப்படக்கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறது,' என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</span></p>
<h2><span dir="auto">தீவிரமடைந்த ரஷ்யா - உக்ரைன் மோதல்</span></h2>
<p><span dir="auto">சமீபத்திய வாரங்களில், உக்ரைனும் ரஷ்யாவும் பரஸ்பர தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன. இந்த மாதத்தில் இதுவரை நடந்த ரஷ்யத் தாக்குதல்களில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைனின் ஒடெசா பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார். </span></p>
<p><span dir="auto">இதனிடையே, இன்று ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் ஒரு பேருந்தின் மீது உக்ரைன் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில், ஒரு குழந்தை உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், பல உக்ரைனிய நகரங்கள் மீதான ரஷ்யத் தாக்குதல்களில் குறைந்தது எட்டு பேர் காயமடைந்தனர்.</span></p>
<p> </p>
<p> </p>
<p><span dir="auto"><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/these-high-protein-fruits-are-best-fruits-which-are-rich-in-protein-for-healthy-diet-268288" width="631" height="381" scrolling="no"></iframe></span></p>
Source: Read Full Article