
<p><strong>MK Stalin:</strong> மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்திட வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். </p>
<h2><strong>தவெக அரசின் மீது ஸ்டாலின் காட்டம்..!</strong></h2>
<p>கூடுதல் மின்கட்டணம் வசூலிக்கப்பட்டதை கண்டித்து, திமுகவின் ஐடி விங் நேற்று வெளியிட்ட பதிவை குறிப்பிட்டு, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தவெக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த பதிவில், ”தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான். முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை. 3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாகப் புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குமுறலைப் பார்க்கும்போது, மொத்தம் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு இருக்கக் கூடும் என்பது உறுதியாகிறது.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/food/which-vegetable-has-the-most-protein-details-in-pics-269506" width="631" height="381" scrolling="no"></iframe></p>
<h2><strong>”அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும்”</strong></h2>
<p>இந்தக் குளறுபடிகள் ஆய்வு செய்யப்பட்டுத் தீர்வு காணப்படும் வரை, மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும். இனி வரும் காலங்களில், மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் reading சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்திட வேண்டும்” என <a title="ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/topic/mk-stalin" data-type="interlinkingkeywords">ஸ்டாலின்</a> கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக அவர் குறிப்பிட்டுள்ள திமுகவின் பதிவில், “3.70 லட்சம் குடும்பங்களுக்குக் கூடுதல் மின்கட்டணம் வசூலிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டு, தன் நிர்வாகத் திறமையின்மையை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> அரசு. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே மக்கள் தலையில் அநியாயப் பொருளாதாரச் சுமையைச் சுமத்தியுள்ள இந்த மக்கள் விரோத அரசு இனியாவது திருந்தட்டும்” என குறிப்பிடப்பட்டு இருந்தது.</p>
<p> </p>
Source: Read Full Article