முடிக்காத பணிகளுக்கு கல்வெட்டு போட்டவர்கள் பேசுவதா ? - செங்கோட்டையன் ஆவேசம்

முடிக்காத பணிகளுக்கு கல்வெட்டு போட்டவர்கள் பேசுவதா ? - செங்கோட்டையன் ஆவேசம்
News Image
<h2><strong>மரக்கன்றுகள் நட்டு வைத்து பூங்கா ஆய்வு</strong></h2> <p>சென்னை அண்ணா நகர் 6 - ஆவது நிழற்சாலையில் பெருநகர சென்னை மாநகராட்சி கீழ் உள்ள போகன்வில்லா பூங்கா ரூபாய் 2.95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளது.&nbsp; இந்த மேம்படுத்தப்பட்ட போகன்வில்லா பூங்காவினை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்து மரக்கன்றுகளை நட்டு வைத்து பூங்காவை ஆய்வு செய்தார்.</p> <p>உடன் அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் ராம்குமார் மற்றும் சென்னை மாநகராட்சியின் மத்திய வட்டார துணை ஆணையாளர் கௌஷிக் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.</p> <h2><strong>பின்பு செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது ;</strong></h2> <p>சென்னையில் உள்ள மக்கள் இயற்கையோடு வாழ வேண்டும் எனவும் &nbsp;பெரியவர்கள், குழந்தைகள் ஓய்வு எடுக்கவும் சென்னை அண்ணா நகரில் உள்ள இந்த போகன்வில்லா &nbsp;பூங்காவில் பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p> <p>பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தான் முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். சென்னை மாநகராட்சி கீழ் உள்ள இந்த போகன்வில்லா பூங்காவாது&nbsp;<br />ரூபாய் 2.95 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p> <p>ஒரு அரசு என்ன செய்ய வேண்டுமோ அதனை சட்டமன்ற உறுப்பினர்கள் செய்து வருகிறார்கள். அதை போல கழகத்தின் நிர்வாகிகள் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.</p> <p>சென்னை என்பது தமிழ் நாட்டின் தலைநகரம் மட்டுமல்ல சிறப்பு மிக்க நகரமாகவும், &nbsp;பொலிவான நகரமாகவும் சென்னையை உருவாக்க வேண்டும் என்பது தான் முதல்வர் &nbsp;அவர்களுடைய கனவு.</p> <h3><strong>நெம்மேலி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னாள் முதல்வர் மு.க.<a title="ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/topic/mk-stalin" data-type="interlinkingkeywords">ஸ்டாலின்</a> பெயரின் கல்வெட்டை மீண்டும் வைக்கா விட்டால் திமுக சார்பாக போராட்டம் நடந்தப்படும் என முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியது குறித்தான கேள்விக்கு ;</strong></h3> <p>ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்துக்கள் இருக்கும். ஒரு அரசு வரும் போது அந்த அரசு செய்கின்ற திட்டங்களை நிறைவேற்றி இறுதியில் அந்த பணிகளை முடிக்கிறார்களோ , அந்த பணிகள் முடிக்கும் போது அதற்கு பொறுப்பு ஏற்று அதனை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் பெயர் தான் கல்வெட்டில் இடம் பெறுவார்கள்.</p> <p>இதுவரை இருக்கின்ற நிலைப்பாடுகள் அந்த நிலைப்பாடுகளை மாற்றி உருவாக்க வேண்டும் என்று முதல்வர் விரும்புவது கிடையாது. இதுவரை நாங்கள் முடிக்காத 95 சதவீதம் பணிகளை முடித்து , 5% முடித்து விட்டு கல்வெட்டு போட்டவர்கள் அவர்கள் அப்படிப்பட்டவர்கள் இந்த கருத்துக்களை சொல்வது வேடிக்கையாகவும் விந்தையாகவும் இருக்கிறது.</p> <h2><strong>த.வெ.க சட்டமன்ற உறுப்பினர்கள் மீது குதிரை பேரம் நடந்துவது குறித்தான கேள்விக்கு ;&nbsp;</strong></h2> <p>எங்களது சட்டமன்ற உறுப்பினர்களை விலை பேசுவது, குதிரை பேரம் நடத்துவது தமிழ்நாட்டில் வரலாற்றில் ஒரு ஆட்சி அமைந்த பிறகு , இந்த ஆட்சிக்கு பல்வேறு கருத்து சொல்ல வேண்டியவர்கள் , நல்ல கருத்துக்களை சொல்ல நாட்டு மக்கள் அவர்களை எதிர்க் கட்சி வரிசையில் அமர வைத்தார்கள்.</p> <p>ஆனால் அவர்கள் இந்த பணிகளை செய்து இருப்பது வெட்ககேடான விஷயம் இதை செய்பவர்களுக்கு உரிய தண்டனை காவல் துறை மூலமாக கிடைக்கும்.</p> <h2><strong>ஆளுநர் திமுக, அதிமுக குதிரை பேரம் தொடர்பான புகார் அளித்துள்ளது குறித்தான கேள்விக்கு</strong></h2> <p>வேண்டுமென்றே குற்றச்சாட்டை சொல்கிறார்கள் குறிப்பாக நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் பொறுத்த வரை அம்மா காலத்தில் ராஜ்யசபா உறுப்பினர், &nbsp;மாவட்ட கழக செயலாளர் என எங்களோடு இருந்து விட்டு , அனுபவித்து விட்டு சென்று திமுக விடம் சென்றார்.</p> <p>இப்போது திமுகவில் சேர்ந்த பிறகு தனக்கு விளம்பரம் வேண்டும் என்று இது.போன்ற கருத்துக்களை சொல்லி இருக்கிறார்.</p> <p>அது தவிர எங்களுக்கு அந்த தேவையே இல்லை என்பது முக்கியமான ஒன்று எங்களுக்கு தேவையான வலிமையான ஆட்சி நடத்துவதற்கு சரியான முறையில் கூட்டணி ஆதரவு தந்து கொண்டிருக்கிறது ஆஸ்டின் போன்றவர்களை நாங்கள் அழைக்கக் கூடிய தேவை இல்லை.</p> <h3><strong>திமுக , அதிமுக பாஜக குதிரை பேரம் குறித்து ஆளுநரிடம் புகார் கொடுத்துள்ள நிலையில் <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> குதிரை பேரம் தொடர்பாக ஆளுநரிடம் புகார் அளிக்குமா என்ற கேள்விக்கு ;&nbsp;</strong></h3> <p>எதிர்க் கட்சியில் அமர்ந்து இருப்பவர்கள் ஆளுநரை சந்திப்பது வழக்கம். எங்களைப் பொறுத்தவரை தூய்மையாகவும், நேர்மையாகவும், கன்னியத்தோடும், நாட்டை காப்பதற்காக நாள்தோறும் திட்டங்களை முதல்வர் உருவாக்கி வருகிறார். மக்கள் அவர் பின்னால் பெரும் திரளாக நிற்கிறார்கள்.</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks