தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவர் பெயரிலேயே பல்கலைக்கழகத்தில் அவமானமா? - அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!

தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவர் பெயரிலேயே பல்கலைக்கழகத்தில் அவமானமா? - அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
News Image
<p>நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் &lsquo;தமிழ்த்தாய் வாழ்த்து&rsquo; முதலாவதாகப் பாடப்படுவதை தமிழ்நாடு அரசும் பல்கலைக்கழக நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.</p> <p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,&nbsp;</p> <p>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வரும் &nbsp;28-ஆம் தேதி நடைபெறவுள்ள &nbsp;33-வது பட்டமளிப்பு விழாவில் முதலில் &rsquo;&rsquo;வந்தே மாதரம்&rsquo;&rsquo; தேசியப் பாடலும், &nbsp;அடுத்து &rsquo;&rsquo;ஜன கண மன&rdquo; &nbsp;தேசிய கீதமும் பாடப்பட்ட பிறகு மூன்றாவதாகத் தான் &nbsp;தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என்று அப்பல்கலைக்கழகத்தின் &nbsp;துணைவேந்தர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மத்திய அரசே வழிகாட்டுதல்களை வழங்கிய பிறகும் &nbsp;தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மூன்றாவது இடத்திற்கு &nbsp;திட்டமிட்டு தள்ளுவது கண்டிக்கத்தக்கது.</p> <p>நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய &nbsp;துணைவேந்தர் சந்திரசேகர்,&rsquo;&rsquo;இது ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால், ஆளுநர் மாளிகையிலிருந்து எங்களுக்குத் தெளிவான மற்றும் கண்டிப்பான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் பங்கேற்கும் விழாக்களில் இந்த நடைமுறையே பின்பற்றப்பட வேண்டும் என்ற வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தான் &nbsp;நடந்து கொள்வோம்&rdquo; என்று தெரிவித்துள்ளார்.</p> <p>குடியரசுத் தலைவர், ஆளுனர் பங்கேற்கும் மாநில அரசு விழாக்களில் முதலில் தேசியப் பாடல், &nbsp;இரண்டாவதாக தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு பிறப்பித்திருந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டிருந்தது. &nbsp;கடந்த மே 10-ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற தமிழக அரசு பதவியேற்கும் விழாவில் முதலில் தேசியப் பாடல், பின்னர் தேசிய கீதம் ஆகியவற்றுக்கு அடுத்து மூன்றாவதாக &nbsp;தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது பெரும் சர்ச்சையை &nbsp;ஏற்படுத்தியது. இந்த வரிசை முறைக்கு &nbsp;தமிழ்நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன.</p> <p>அதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜூலை 9-ஆம் தேதி பிறப்பித்த ஆணையில், &nbsp;மாநிலப் பாடல்கள் பாடப்படும் விழாக்களில் &nbsp;அது தான் முதலில் பாடப்பட வேண்டும்; அதன்பின் தேசியப் பாடல்; மூன்றாவதாக தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று தெளிவாக விளக்கம் &nbsp;அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், &nbsp;அதையும் மீறி வந்தே மாதரம் என்ற &nbsp;தேசியப் பாடலைத் தான் &nbsp;முதலில் பாட வேண்டும் என்று &nbsp;ஆளுனர் மாளிகை கட்டாயப்படுத்துவது அப்பட்டமான அதிகார வெளிப்பாடு ஆகும்.</p> <p>நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்று தொடங்கும் தமிழ்த் தாய் வாழ்த்தை எழுதியவரே &nbsp;மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை &nbsp;அவர்கள் தான். &nbsp;அவரது &nbsp;பெயர் &nbsp;தான் நெல்லை பல்கலைக்கழகத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. அங்கும் கூட, மத்திய அரசின் வழிகாட்டுதல்களையும் புறக்கணித்து விட்டு, வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வேண்டும் என்று ஆளுனர் மாளிகை கட்டாயப்படுத்துவதும், &nbsp; அதை பல்கலைக்கழக துணை வேந்தர் &nbsp;அப்படியே &nbsp;ஏற்றுக் கொள்வதும் சரியல்ல. &nbsp;இதை &nbsp;தமிழக அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது.</p> <p>தமிழ்நாட்டில் நடைபெறும் &nbsp;ஆளுனர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் &nbsp;தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில் பாடப்பட வேண்டும். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஜூலை &nbsp; 28-ஆம் தேதி நடைபெறவுள்ள &nbsp;33-வது பட்டமளிப்பு விழாவிலும் &nbsp;தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப் படுவதை &nbsp;தமிழ்நாடு அரசும், &nbsp;பல்கலைக்கழக நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks