மும்முனை மின்சாரம் கைகொடுக்கவில்லை... மனம் தளராத விவசாயிகள் களத்தில் தீவிரம்

மும்முனை மின்சாரம் கைகொடுக்கவில்லை... மனம் தளராத விவசாயிகள் களத்தில் தீவிரம்
News Image
<p style="text-align: justify;"><strong>தஞ்சாவூர்:</strong> தஞ்சை அருகே வேங்கராயன் குடிகாடு கிராமத்தில் கைகொடுக்காத மும்முனை மின்சாரம், உரம் விலை உயர்வு போன்ற பல்வேறு பிரச்னைகள் கலக்கத்தை கொடுத்தாலும் சாகுபடி செய்த பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் உரம் தெளிப்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.</p> <p style="text-align: justify;">தஞ்சாவூர் மாவட்டம் வேங்கராயன் குடிகாடு கிராமத்தில், நடப்பாண்டு குறுவை சாகுபடிப் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பம்ப்செட் வாயிலாக குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பல்வேறு சவால்களை எதிர்கொண்டு பயிரை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் உள்ளனர்.</p> <p style="text-align: justify;">இப்பகுதியில் மும்முனை மின்சாரம் (Three-Phase Electricity) போதிய அளவில் தட்டுப்பாடின்றி கிடைப்பதில்லை என்பது விவசாயிகளின் முக்கியப் புகாராகும். பம்ப்செட் மூலம் நீர்ப்பாசனம் செய்வதற்குத் தேவையான மின்சாரம் முறையாக வழங்கப்படாததால், பயிர்களுக்குத் தண்ணீர் சரிவர பாய்ச்ச முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், பயிர்கள் வாடி வதங்கும் அபாயம் உள்ளது. இது விவசாயிகளை கவலை அடையச் செய்துள்ளது.</p> <p style="text-align: justify;">விவசாயத்திற்குத் தேவையான யூரியா, டிஏபி (DAP), பொட்டாஷ் உள்ளிட்ட உரங்களின் விலை மிகவும் உயர்த்தப்பட்டுள்ளது. டிஏபி உள்ளிட்ட பிற உரங்களின் விலையும் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இது விவசாயிகளுக்குக் கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளது.</p> <p style="text-align: justify;">நெல் உற்பத்தி செலவு அதிகரித்தாலும், நெல்லுக்குப் போதிய விலை கிடைப்பதில்லை என்பது விவசாயிகளின் மற்றொரு முக்கியக் குறையாகும். அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) விவசாயிகளுக்குக் கூட கிடைப்பதில்லை. இதனால், சாகுபடி செலவைக் கூட மீட்க முடியாத நிலை ஏற்படுகிறது.</p> <p style="text-align: justify;">இப்படியான பல்வேறு சிக்கல்கள், பிரச்சினைகளுக்கு மத்தியில் தாங்கள் உயிர் போல் நினைக்கும் விவசாயத்தை தொடர்ந்து மேற்கொண்டு வரும் விவசாயிகள் சாகுபடி பயிரைக் காப்பாற்றுவதற்காக வேதனையுடனும், நம்பிக்கையுடனும் உரம் தெளிக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். சாகுபடி &nbsp;செலவுக்கு பணம் இல்லாத நிலையில் பலர் தங்களது கால்நடைகளை விற்றும், நகைகளை அடமானம் வைத்தும்கூட உரங்களை வாங்கிச் பயிர்கள் வாடாமல் காப்பாற்ற முயல்கின்றனர்.</p> <p style="text-align: justify;">இதுகுறித்து வேங்கராயன்குடிகாடு கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் தரப்பில் கூறுகையில், உர விலை அதிகரித்திருந்தாலும், பயிரைக் காப்பாற்ற வேண்டும். எங்களுக்கு வேறு எந்த தொழிலும் தெரியாது. வாழ வைப்பதும் விவசாயம் தான். எங்களை வேதனையில் ஆழ்த்துவதும் விவசாயம்தான். இருந்தாலும் எங்கள் உயிர் போல் நினைக்கும் விவசாயத்தை எப்போதும் கைவிட முடியாது. சாகுபடி பயிர்களை காப்பாற்ற உரம் வாங்கப் பணம் இல்லையென்றாலும், கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் உரம் தெளித்து வருகிறோம். உரம் போடவில்லை என்றால், பயிர்கள் வாடிவிடும், அறுவடை பாதிக்கப்படும்.</p> <p style="text-align: justify;">சாகுபடி செலவு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஆனால், நெல் விலை கிடைப்பதில்லை. இதனால், விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் எங்களைப் போன்றோரின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச மும்முனை மின்சாரம் தட்டுப்பாடின்றி கிடைப்பதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்று வேதனையுடன் தெரிவித்தனர்.</p> <p style="text-align: justify;">விவசாயிகளின் இந்த நிலை மிகவும் கவலை அளிக்கிறது. அரசு உடனடியாக தலையிட்டு, மும்முனை மின்சாரத் தட்டுப்பாட்டைப் போக்கவும், உர விலையைச் சீராக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்லுக்குப் போதிய விலை கிடைக்கச் செய்வதற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் உரியத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். விவசாயிகளின் இந்தத் தியாகமும், கஷ்டமும் வீண் போகாமல் பார்த்துக் கொள்வது தமிழக அரசின் கடமையாகும்.</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks