முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Featured Post

TN Weather: கோவை, நீலகிரி, குமரியில் இன்று கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

<p style="text-align: justify;">தமிழகத்தில் நிலவி வரும் வானிலை மாற்றங்கள் காரணமாக, கோவை, நீலகிரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான தினசரி வானிலை அறிக்கையை ஆய்வு மையம் இன்று காலை வெளியிட்டுள்ளது.</p> <h3 style="text-align: justify;">வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி</h3> <p style="text-align: justify;">நேற்று காலை நிலவரப்படி, வடமேற்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த இரண்டு நாட்களில் மேலும் வலுப்பெறக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் காற்றின் திசை மாறுபட்டு பலத்த காற்று வீசக்கூடும் சூழல் உருவாகியுள்ளது.</p> <h3 style="text-align: justify;">மூன்று மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்' எச்சரிக்கை</h3> <p style="text-align: justify;...

" அப்பாகிட்ட சொல்லாத " கள்ளக் காதலனுடன் சினிமாவுக்கு சென்ற தாய் - போட்டுக் கொடுத்த மகள்

News Image
<h3 dir="ltr"><strong>மனைவி நடத்தையில் சந்தேகம்</strong></h3> <p dir="ltr">வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த ராஜக்கல் கூத்தாண்டவர் நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி இவர்கள் இருவரும் 17 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.</p> <p dir="ltr">இவர்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். தனலட்சுமி திருமணம் முடிந்த பின் ஆம்பூரில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்ததாகவும் , தற்போது ஷூ கம்பெனிக்கு வேலைக்கு செல்லாமல் 8 மாதமாக பேரணாம்பட்டில் உள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தனலட்சுமி வேறு ஒருவருடன் கள்ளத் தொடர்பில் இருப்பதாக அவரது நடத்தையில் கணவர் விஜயகுமாருக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது.</p> <h3 dir="ltr"><strong>" அப்பாகிட்ட இதை பத்தி சொல்ல கூடாது "</strong></h3> <p>இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் மனைவி தனலட்சுமி கள்ளக் காதலனுடன் தனது மகளை அழைத்து கொண்டு ஆம்பூரில் உள்ள சினிமா தியேட்டருக்கு படம் பார்க்க சென்றுள்ளார். படம் பார்த்து விட்டு வீடு திரும்பும் போது தனலட்சுமி தனது மகளிடம் அப்பாகிட்ட இத பத்தி சொல்ல கூடாது எனத் தெரிவித்துள்ளார்</p> <p>ஆனால் தனலட்சுமியின் மகள், இது குறித்து தனது அப்பா விஜயகுமாரிடம் அம்மா வேறு ஒருவருடன் சினிமாவிற்கு சென்று, அப்பாவிடம் சொல்ல வேண்டாம் என தெரிவித்ததாக கூறியுள்ளார். இந்த சம்பவம் தனலட்சுமி மீது மீண்டும் கடும் கோபத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.</p> <p>இந்த நிலையில் விஜயகுமார் தனது மனைவி தனலட்சுமி இரண்டு நாட்களாக காணவில்லை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என அங்குள்ள அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். அதையடுத்து அக்கம் பக்கத்தினர் விஜயகுமாரின் வீட்டருகே சென்ற போது கடுமையான துர்நாற்றம் வீசி உள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் உடனடியாக பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபுவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.</p> <p>பொதுமக்கள் கொடுத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டின் சமையலறையில் உள்ள ஸ்லாப்பின் மீது ரத்த கரையுடன் சாக்கு மூட்டை இருந்துள்ளது. அதனைத் திறந்து பார்த்தபோது தனலட்சுமி கை மணிக்கட்டுகள் அறுக்கப்பட்ட நிலையிலும் இரண்டு கால்கள் செல்போன் சார்ஜர் ஒயரால் கட்டப்பட்டு முகம் சிதைந்து அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.</p> <h3><strong>வீட்டில் இருந்த ரத்தக்கரை</strong></h3> <p>இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் கணவர் விஜயகுமாரிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் விஜயகுமார் தனது மனைவி இரண்டு நாட்களாக காணவில்லை என்றும் மனைவி செல்போனுக்கு போன் செய்தால் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்றும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மேலும் தனது மனைவி தனலட்சுமி எப்படி இறந்தார் எனவும் தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.</p> <p>ஆனாலும் போலீசாருக்கு கணவர் விஜயகுமார் கூறிய பதில்கள் மேலும் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து போலீசார் வீட்டினை தீவிர சோதனை செய்த போது ரத்தக்கரை படிந்த துணியும் வெட்டப் பயன்படுத்திய அரிவாளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் தனலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p> <p>மேலும் கைரேகை தடவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு கொலை நடந்த வீட்டையே சுற்றி சுற்றி வந்ததால் இன்ஸ்பெக்டர் பிரபு தனலட்சுமி கணவர் விஜயகுமாரை பேரணாம்பட்டு காவல் நிலையம் அழைத்து வந்து தீவிரமாக விசாரணை நடத்தியுள்ளார்.</p> <h3>மனைவியை தீர்த்து கட்டிய கணவன்</h3> <p>கள்ள காதல் தொடர்பாக கணவன் - மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் தொடர்ந்து மனைவி வேறு ஒருவருடன் கள்ளத் தொடர்பில் இருந்ததால் ஆத்திரமடைந்த கணவன் , மனைவி தனலட்சுமியை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். அதையடுத்து குடியாத்தம் அருகே உள்ள பள்ளிகொண்டாவிற்கு சென்று அங்கு வெட்டு அருவாளை வாங்கி வந்து வீட்டில் மறைத்திறந்துள்ளார்.</p> <p>கடந்த திங்கட்கிழமை அன்று இரவு 11 மணிக்கு மனைவி தனலட்சுமியை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து வீட்டில் சமையல் அறை ஸ்லாப்பில் மீது சாக்கு பையில் மூட்டைக் கட்டி வைத்து விட்டு மனைவி காணாமல் போனதாக நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரிந்துள்ளது. இதையடுத்து கணவர் விஜயகுமாரை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்</p>

Source: Read Full Article

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நள்ளிரவு குத்தாட்டம்: உயர்நீதிமன்ற தடையை மீறியதாக குற்றச்சாட்டு – தாரமங்கலத்தில் ஆபாச நடன நிகழ்ச்சி?

அலறும் ஒலிபெருக்கி.. அரங்கேறும் அநாகரிகம்! பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக மக்கள் புகார் சேலம்: சேலம் மாவட்டம் தாரமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாசி மாத திருவிழாக்கள் நடைபெற்று வரும் நிலையில், சில இடங்களில் திருவிழா நிகழ்ச்சிகளின் போது ஆபாச நடனங்கள் நடத்தப்பட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். உயர்நீதிமன்றம் இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாகவும், அவற்றை மீறியதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். File Photo இந்த விவகாரம் தொடர்பாக, தாரமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ராமிரெட்டிப்பட்டி கிராமம், கத்திமாறன் வளவு பகுதியில் அமைந்துள்ள குள்ள காளிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மேடை அமைத்து நடன நிகழ்ச்சி நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த நிகழ்ச்சியில் ஆபாசப் பாடல்களுக்கு பெண்கள் நடனமாடியதாகவும், அதை இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் பார்த்ததாகவும் சிலர் குற்றம்சாட்டுகின்றனர். இதன் போது ஒலிபெருக்கிகளில் அதிக சத்தத்துடன் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டதால், அருகிலுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுத்தேர்வு எழு...

“என் மீது கொதிக்கும் பாலை ஊற்றினார்கள்!” - திமுக அமைச்சர் மீது மருமகள் பகீர் குற்றச்சாட்டு! - முழு தொகுப்பு...

அமைச்சர் பெயருக்குக் களங்கம் விளைவிக்க சதி? அண்ணன் மகன் ஆவேச விளக்கம் - சேலத்தில் பற்றி எரியும் அரசியல் விவாதம்! சேலம்: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்ட அனலில் இருக்கும் வேளையில், சேலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரனின் குடும்ப விவகாரம் ஒரு மிகப்பெரிய 'பொலிட்டிக்கல் வெடிகுண்டாக' வெடித்துள்ளது. அமைச்சரின் அண்ணன் மகன் சண்முகத்தின் மனைவி தேவி (37), தனது வழக்கறிஞர்களுடன் செய்தியாளர்களைச் சந்தித்து, தனது கணவர் குடும்பத்தினர் தன் மீது 'கொதிக்கும் பாலை' ஊற்றிப் படுகொலை செய்ய முயன்றதாகக் கூறி அதிர வைத்துள்ளார். திராவிட மாடல் அரசு பெண்களுக்குப் பல்வேறு சலுகைகளை வழங்கி வரும் நிலையில், ஆளுங்கட்சி அமைச்சரின் குடும்பத்திலேயே ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த அநீதி, அரசியல் வட்டாரங்களில் மிகப்பெரிய ‘சென்சேஷனை’ கிளப்பியுள்ளது. செய்தியாளர் சந்திப்பில் தனது தீக்காயங்களின் புகைப்படங்களைக் கண்ணீருடன் காட்டிய பல் மருத்துவர் தேவி, "கடந்த 2025 அக்.11-ஆம் தேதி எனது மகனைப் பார்க்கச் சென்றபோது, என் மீது கொதிக்கும் பாலை ஊற்றிக் கொடுமைப்படுத்தினர். இதில் என் உடல...

புகார் கொடுத்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த எஸ்.எஸ்.ஐ - வைரல் ஆடியோ!

கோவை சூலூர் காவல் நிலையத்தில் அதிரவைக்கும் அநாகரிகம்: புகார் கொடுத்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த எஸ்.எஸ்.ஐ - ஆடியோ லீக் ஆகி வைரல்! ரூ.10,000 லஞ்சம் வாங்கியதுடன் நில்லாமல் தோளில் கைப்போட்டு அத்துமீறல்; கதறி அழுத இளம்பெண்ணின் ‘ஹார்ட் பிரேக்கிங்’ வாக்குமூலம்! கோவை: நீதியின் இருப்பிடமாக கருதப்படும் காவல் நிலையத்திலேயே ஒரு பெண்ணுக்கு நேர்ந்த அநீதி, கோவை மாவட்டத்தையே உலுக்கி எடுத்துள்ளது. கோவை சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற 30 வயது பெண்ணிடம், அங்கிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் (SSI) அத்துமீறி நடந்து கொண்ட விவகாரம் இப்போது ‘லீக்’ ஆகி, சமூக வலைதளங்களில் ‘வைரல்’ ஆகி வருகிறது. லஞ்சம் வாங்கியது மட்டுமின்றி, பெண்ணின் கண்ணியத்தை சிதைக்க முயன்ற அந்த அதிகாரியின் செயல், காவல்துறையின் நற்பெயருக்கு ஒரு பெரிய ‘நெகட்டிவ்’ இம்பேக்ட்டை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவத்தின் ‘இன்புட்ஸ்’ படி, சூலூர் பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர், தனது உறவினர் உயிரிழந்தது தொடர்பாக புகார் அளிக்க காவல் நிலையம் சென்றுள்ளார். அங்கிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், இந்தப் புகாரை விசாரிக்க 10,000 ரூபாய் ‘...