முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Featured Post

BJP will register a decisive victory in U.P., says party chief Nitin Nabin

Mr. Nabin, who reached Lucknow on a two-day visit, added that he was overwhelmed by the respect received in the land of Lord Shri Ram. Source: Read Full Article

ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை ! தட்டி தூக்கிய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை

News Image
<h2 dir="ltr"><strong>பாலியல் ரீதியாக பெண்ணுக்கு தொல்லை</strong></h2> <p dir="ltr">திருச்சியில் இருந்து சென்னை மாதவரம் நோக்கி சுமார் 25 பயணிகளுடன் அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் சென்னை பகுதியைச் சேர்ந்த சுமார் 35 வயதுடைய இளம் பெண் ஒருவர் தனியாக பயணம் செய்து வந்துள்ளார். அப்போது அவருக்கு அருகில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் தொடர்ந்து பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொண்டு ஆபாசமாக தொட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. முதலில் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் , பொது மக்கள் முன்னிலையில் பிரச்சினை ஏற்படக் கூடாது என்பதற்காக அமைதியாக இருக்க முயன்றுள்ளார்.</p> <p>ஆனால் அந்த நபரின் அத்துமீறல் தொடர்ந்து அதிகரித்ததால், உயிர் அச்சத்துடன் சாமர்த்தியமாக தனது செல்போன் மூலம் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஓடும் பேருந்தில் இருந்து வந்த அந்த புகாரை அதிகாரிகள் மிகுந்த தீவிரத்துடன் எடுத்துக் கொண்டு உடனடியாக செங்கல்பட்டு மாவட்ட சிங்கப்பெண் படை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.</p> <h2><strong>சுற்றி வளைத்த சிங்கப்பெண் அதிரடிப்படை</strong></h2> <p>இதையடுத்து செங்கல்பட்டு பேருந்து நிலையம் அருகே பெண் போலீசார் தயார் நிலையில் காத்திருந்தனர். குறிப்பிட்ட அரசுப் பேருந்து செங்கல்பட்டு புறவழிச்சாலையை வந்தடைந்ததும், சற்றும் தாமதிக்காமல் பேருந்திற்குள் ஏறிய சிங்கப்பெண் படை போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் உறுதிப்படுத்திக் கொண்டு, பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் நபரை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர்.</p> <p>பின்னர் அந்த நபரை செங்கல்பட்டு நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய கந்தசாமி என்பது தெரிய வந்தது. மேலும், திருச்சியில் இருந்து சென்னை நோக்கி பயணம் செய்தபோது, பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததையும் அவர் ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.</p> <p>இதையடுத்து கந்தசாமி மீது பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த செங்கல்பட்டு நகர போலீசார், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.</p> <p>ஓடும் அரசுப் பேருந்தில் பாலியல் தொல்லைக்கு ஆளான இளம்பெண், தைரியமாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்ததும், அதற்கு சிங்கப்பெண் படை போலீசார் சில நிமிடங்களிலேயே பதிலளித்து குற்றவாளியை கைது செய்தது பொது மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.</p>

Source: Read Full Article

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நள்ளிரவு குத்தாட்டம்: உயர்நீதிமன்ற தடையை மீறியதாக குற்றச்சாட்டு – தாரமங்கலத்தில் ஆபாச நடன நிகழ்ச்சி?

அலறும் ஒலிபெருக்கி.. அரங்கேறும் அநாகரிகம்! பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக மக்கள் புகார் சேலம்: சேலம் மாவட்டம் தாரமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாசி மாத திருவிழாக்கள் நடைபெற்று வரும் நிலையில், சில இடங்களில் திருவிழா நிகழ்ச்சிகளின் போது ஆபாச நடனங்கள் நடத்தப்பட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். உயர்நீதிமன்றம் இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாகவும், அவற்றை மீறியதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். File Photo இந்த விவகாரம் தொடர்பாக, தாரமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ராமிரெட்டிப்பட்டி கிராமம், கத்திமாறன் வளவு பகுதியில் அமைந்துள்ள குள்ள காளிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மேடை அமைத்து நடன நிகழ்ச்சி நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த நிகழ்ச்சியில் ஆபாசப் பாடல்களுக்கு பெண்கள் நடனமாடியதாகவும், அதை இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் பார்த்ததாகவும் சிலர் குற்றம்சாட்டுகின்றனர். இதன் போது ஒலிபெருக்கிகளில் அதிக சத்தத்துடன் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டதால், அருகிலுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுத்தேர்வு எழு...

“என் மீது கொதிக்கும் பாலை ஊற்றினார்கள்!” - திமுக அமைச்சர் மீது மருமகள் பகீர் குற்றச்சாட்டு! - முழு தொகுப்பு...

அமைச்சர் பெயருக்குக் களங்கம் விளைவிக்க சதி? அண்ணன் மகன் ஆவேச விளக்கம் - சேலத்தில் பற்றி எரியும் அரசியல் விவாதம்! சேலம்: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்ட அனலில் இருக்கும் வேளையில், சேலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரனின் குடும்ப விவகாரம் ஒரு மிகப்பெரிய 'பொலிட்டிக்கல் வெடிகுண்டாக' வெடித்துள்ளது. அமைச்சரின் அண்ணன் மகன் சண்முகத்தின் மனைவி தேவி (37), தனது வழக்கறிஞர்களுடன் செய்தியாளர்களைச் சந்தித்து, தனது கணவர் குடும்பத்தினர் தன் மீது 'கொதிக்கும் பாலை' ஊற்றிப் படுகொலை செய்ய முயன்றதாகக் கூறி அதிர வைத்துள்ளார். திராவிட மாடல் அரசு பெண்களுக்குப் பல்வேறு சலுகைகளை வழங்கி வரும் நிலையில், ஆளுங்கட்சி அமைச்சரின் குடும்பத்திலேயே ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த அநீதி, அரசியல் வட்டாரங்களில் மிகப்பெரிய ‘சென்சேஷனை’ கிளப்பியுள்ளது. செய்தியாளர் சந்திப்பில் தனது தீக்காயங்களின் புகைப்படங்களைக் கண்ணீருடன் காட்டிய பல் மருத்துவர் தேவி, "கடந்த 2025 அக்.11-ஆம் தேதி எனது மகனைப் பார்க்கச் சென்றபோது, என் மீது கொதிக்கும் பாலை ஊற்றிக் கொடுமைப்படுத்தினர். இதில் என் உடல...

புகார் கொடுத்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த எஸ்.எஸ்.ஐ - வைரல் ஆடியோ!

கோவை சூலூர் காவல் நிலையத்தில் அதிரவைக்கும் அநாகரிகம்: புகார் கொடுத்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த எஸ்.எஸ்.ஐ - ஆடியோ லீக் ஆகி வைரல்! ரூ.10,000 லஞ்சம் வாங்கியதுடன் நில்லாமல் தோளில் கைப்போட்டு அத்துமீறல்; கதறி அழுத இளம்பெண்ணின் ‘ஹார்ட் பிரேக்கிங்’ வாக்குமூலம்! கோவை: நீதியின் இருப்பிடமாக கருதப்படும் காவல் நிலையத்திலேயே ஒரு பெண்ணுக்கு நேர்ந்த அநீதி, கோவை மாவட்டத்தையே உலுக்கி எடுத்துள்ளது. கோவை சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற 30 வயது பெண்ணிடம், அங்கிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் (SSI) அத்துமீறி நடந்து கொண்ட விவகாரம் இப்போது ‘லீக்’ ஆகி, சமூக வலைதளங்களில் ‘வைரல்’ ஆகி வருகிறது. லஞ்சம் வாங்கியது மட்டுமின்றி, பெண்ணின் கண்ணியத்தை சிதைக்க முயன்ற அந்த அதிகாரியின் செயல், காவல்துறையின் நற்பெயருக்கு ஒரு பெரிய ‘நெகட்டிவ்’ இம்பேக்ட்டை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவத்தின் ‘இன்புட்ஸ்’ படி, சூலூர் பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர், தனது உறவினர் உயிரிழந்தது தொடர்பாக புகார் அளிக்க காவல் நிலையம் சென்றுள்ளார். அங்கிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், இந்தப் புகாரை விசாரிக்க 10,000 ரூபாய் ‘...