கட்டிட தொழிலாளி மனைவியுடன் கள்ளக் காதல்...டீ மாஸ்டர் முகத்தை சிதைத்த கணவன் , ஆட்டோ டிரைவர்

கட்டிட தொழிலாளி மனைவியுடன் கள்ளக் காதல்...டீ மாஸ்டர் முகத்தை சிதைத்த கணவன் , ஆட்டோ டிரைவர்
News Image
<h2 dir="ltr"><strong>அடையாளம் தெரியாத வாலிபர் வெட்டிக் கொலை</strong></h2> <p dir="ltr">ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தணிகைபோளூர் ஏரியில் கடந்த 5 - ம் தேதி அடையாளம் தெரியாத அளவில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் அந்த சடலத்தை அரக்கோணம் தாலூகா போலீசார் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து , பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை மேற்கொண்டனர். மேலும், கொலையான நபர் யார் என்பது குறித்து விசாரனை நடத்தி வந்தனர்.</p> <p>திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பி.டி.புதூர் பகுதியை சேர்ந்த ஹேமநாதன் (எ) சின்னா ( வயது 23 ) டீ மாஸ்டர் என தெரிய வந்தது. இவர் கொலை செய்யப்படுவதற்கான காரணம் என்ன ? என்பது குறித்து தனிப்படை போலீசார் திவீர விசாரணை நடத்தி வந்தனர். காவல் துறையினரின் முதற்கட்ட விசாரனையில் ஹேமநாதன் (எ) சின்னா கள்ளத் தொடர்பு காரணமாக கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.</p> <h2><strong>வேலையில் ஏற்பட்ட கள்ளக் காதல்</strong></h2> <p>மேலும் , இந்த விசாரணையில் சம்பத்தப்பட்ட கணவன் சங்கர் , மனைவி கவிதா, ஆட்டோ டிரைவர் ஆனஸ்ட் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரனையில் அரக்கோணம் அடுத்த கீழாந்தூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர் ( வயது 39 ) , இவரது மனைவி கவிதா ( வயது 35 ) இருவரும் கட்டிட தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்களுடன் பி.டி.புதூரை சேர்ந்த ஹேமநாதனும் கட்டிட வேலைக்கு வந்துள்ளார். நாளாடைவில் கவிதாவிற்கும், ஹேமநாதனுக்கும் பழக்கம் ஏற்பட்டு, கள்ளத் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.</p> <p>கவிதாவின் வீட்டிற்கு ஹேமநாதன் மற்றும் அவரது நண்பரான ஆட்டோ டிரைவர் ஆனஸ்ட் ( வயது 33) ஆகிய இருவரும் அடிக்கடி வருவதை அறிந்த கணவர் சங்கர் இதைக் கண்டித்துள்ளார். மேலும் ஆட்டோ டிரைவரான ஆனஸ்ட்க்கும் கவிதாவின் மீது ஆசை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.</p> <p>இதனையறிந்த ஹேமநாதன் கடந்த 4 - ம் தேதி இரவு கவிதாவின் வீட்டிற்கு வந்து அதிகளவில் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து முன்கூட்டியே கண்டித்திருந்த சங்கர், சம்பவத் தன்று ஹேமநாதனை சமதானம் செய்து , ஆனஸ்ட் உடன் ஆட்டோவில் அழைத்து வந்து தணிகைபோளூர் ஏரிக் கரையில் உருட்டுகட்டை மற்றும் கத்தியால் பலமாக தாக்கி முகத்தை சிதைத்து சடலத்தை வீசி சென்றுள்ளார்.</p> <p>இதனையடுத்து சங்கர் அவரது மனைவி கவிதா மற்றும் ஆட்டோ டிரைவரான ஆனஸ்ட் ஆகிய மூவரையும் கைது செய்து, அவர்கள் கொலைக்கு பயன்படுத்திய கத்தி, உருட்டுகட்டை, ஆட்டோ ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks