டெல்டாவில் கரும்பு சாகுபடிக்கு ஆபத்து மணி! 60 ஆயிரம் ஏக்கரிலிருந்து 15 ஆயிரம் ஏக்கராக சுருங்கிய பரப்பளவு

டெல்டாவில் கரும்பு சாகுபடிக்கு ஆபத்து மணி! 60 ஆயிரம் ஏக்கரிலிருந்து 15 ஆயிரம் ஏக்கராக சுருங்கிய பரப்பளவு
News Image
<p style="text-align: justify;"><strong>தஞ்சாவூர்:</strong> டெல்டாவில் கரும்பு சாகுபடி 60 ஆயிரம் ஏக்கரிலிருந்து 15 ஆயிரம் ஏக்கராக சுருங்கிய உள்ளது. இதற்கு காரணம் கட்டுப்படியான விலை இல்லை. அதிகரிக்கும் சாகுபடி செலவு என மாற்றுப் பயிர்களுக்கு விவசாயிகள் மாறி வருகின்றனர்.</p> <p style="text-align: justify;"><strong>கரும்பு சாகுபடியில் கடும் சரிவு</strong></p> <p style="text-align: justify;">தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா மாவட்டங்களில், நெல்லுக்கு அடுத்தபடியாக அதிகளவில் சாகுபடி செய்யப்பட்ட பயிரான கரும்பு, தற்போது மிகப்பெரிய சரிவைச் சந்தித்து வருகிறது. தஞ்சாவூர், கும்பகோணம், பாபநாசம், மயிலாடுதுறை, திருவிடைமருதூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு காலத்தில் பசுமையாக காட்சியளித்த கரும்புத் தோட்டங்கள் இன்று கணிசமாகக் குறைந்துள்ளன. அதிகரித்து வரும் சாகுபடி செலவு, தொழிலாளர் பற்றாக்குறை, உரம் மற்றும் விதைக்கரும்பின் விலை உயர்வு, போதிய கொள்முதல் விலை இல்லாமை உள்ளிட்ட காரணங்களால் கரும்பு சாகுபடியை விவசாயிகள் கைவிட்டு, குறுகிய கால மாற்றுப் பயிர்களை நோக்கி திரும்பி வருகின்றனர்.</p> <p style="text-align: justify;"><strong>60 ஆயிரம் ஏக்கரிலிருந்து 15 ஆயிரம் ஏக்கராக வீழ்ச்சி</strong></p> <p style="text-align: justify;">ஒரு காலத்தில் காவிரி டெல்டாவில் ஆண்டுக்கு 60 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் கரும்பு சாகுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது அது வெறும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ஏக்கர் வரை மட்டுமே சுருங்கியுள்ளது. இதனால் மக்காச்சோளம், நிலக்கடலை, உளுந்து, பயறு உள்ளிட்ட மூன்று மாத கால பயிர்களை விவசாயிகள் அதிகளவில் தேர்வு செய்து வருகின்றனர்.</p> <p style="text-align: justify;"><strong>ஒரு ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் வரை செலவு</strong></p> <p style="text-align: justify;">கரும்பு ஒரு ஆண்டு கால பயிராக இருப்பதால் முதலீடும் அதிகமாக உள்ளது. தற்போது ஒரு ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்ய ரூ.70 ஆயிரம் வரை செலவாகிறது. விதைக்கரும்பு, உரம், உழவு, தொழிலாளர் கூலி, பாசனம், களையெடுப்பு உள்ளிட்ட செலவுகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் பெரும் நிதிச்சுமையை சந்தித்து வருகின்றனர்.</p> <p style="text-align: justify;"><strong>அறுவடை செலவும் பெரும் சுமை</strong></p> <p style="text-align: justify;">கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக ஒரு டன் கரும்பை வெட்டி ஆலைக்கு ஏற்றுவதற்கே ரூ.2 ஆயிரம் வரை செலவாகிறது. முன்பு ஒரு ஏக்கரில் 50 டன் வரை மகசூல் கிடைத்த நிலையில், தற்போது பல இடங்களில் 25 டன் மட்டுமே கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். பருவநிலை மாற்றம், நோய் தாக்குதல் மற்றும் தரமான விதைக்கரும்பு பற்றாக்குறை இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.</p> <p style="text-align: justify;"><strong>சர்க்கரை ஆலைகளும் பாதிப்பு</strong></p> <p style="text-align: justify;">கரும்பு சாகுபடி குறைந்ததால் அரசு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தஞ்சை குருங்குளம் அரசு சர்க்கரை ஆலையில் முன்பு ஆண்டுக்கு 4.30 லட்சம் டன் வரை கரும்பு அரவை செய்யப்பட்ட நிலையில், தற்போது அது 1.80 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இதேபோல் பல தனியார் ஆலைகளும் வெளி மாவட்டங்களில் இருந்து கரும்பு வாங்கி அரவை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.</p> <p style="text-align: justify;"><strong>டன்னுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்</strong></p> <p style="text-align: justify;">தற்போது ஒரு டன் கரும்புக்கு ரூ.3,500 மட்டுமே வழங்கப்படுவதால் சாகுபடி செலவைக் கூட ஈடுகட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குறைந்தபட்சம் ஒரு டன் கரும்புக்கு ரூ.5 ஆயிரம் வழங்கினால் மட்டுமே விவசாயிகள் மீண்டும் கரும்பு சாகுபடியில் ஈடுபடுவார்கள் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.</p> <p style="text-align: justify;"><strong>14 நாட்களில் பணம் வழங்க வேண்டும்</strong></p> <p style="text-align: justify;">கரும்பு ஆலைக்கு அனுப்பிய 14 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு முழுத் தொகையும் வழங்க வேண்டும். தாமதமானால் 15 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்ற நடைமுறை இருந்தும், அது பல இடங்களில் முறையாக பின்பற்றப்படுவதில்லை. இதனால் வங்கி கடன், சாகுபடி செலவுகளை சமாளிப்பதில் விவசாயிகள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.</p> <p style="text-align: justify;"><strong>அரசின் உடனடி நடவடிக்கை அவசியம்</strong></p> <p style="text-align: justify;">நோய் தாக்காத தரமான விதைக்கரும்புகளை மானிய விலையில் வழங்குதல், உரங்களுக்கு கூடுதல் மானியம், அறுவடை எந்திர வசதி, தொழிலாளர் பற்றாக்குறைக்கு தீர்வு, கரும்பு வெட்டுக்கூலிக்கு அரசே மானியம் வழங்குதல், கரும்பு கொள்முதல் விலையை உயர்த்துதல் போன்ற நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p> <p style="text-align: justify;"><strong>கரும்பை காப்பாற்ற வேண்டிய நேரம்</strong></p> <p style="text-align: justify;">நெல் சாகுபடிக்கு அடுத்தபடியாக காவிரி டெல்டாவின் அடையாளமாக விளங்கிய கரும்பு இன்று அழியும் நிலையில் இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். உரிய விலை, மானியம் மற்றும் தொழில்நுட்ப ஆதரவை அரசு உடனடியாக வழங்கினால் மட்டுமே கரும்பு சாகுபடியை மீண்டும் புத்துயிர் பெறச் செய்ய முடியும் என்பதே டெல்டா விவசாயிகளின் ஒருமித்த கருத்தாக உள்ளது.</p> <p style="text-align: justify;"><strong>நியாயமான விலையும்... வெட்டுக்கூலியும் அரசே வழங்க வேண்டும்</strong></p> <p style="text-align: justify;">கரும்புக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததால் விவசாயிகள் மாற்றுப் பயிர் சாகுபடிக்கு மாறி வருகின்றனர். நோய் தாக்காத தரமான விதைக்கரும்புகளை அரசு மானிய விலையில் வழங்க வேண்டும். கரும்பு ஆலைக்கு அனுப்பிய 14 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு பணம் வழங்க வேண்டும். அதற்கு மேல் தாமதமானால் 15 சதவீத வட்டியுடன் தொகை வழங்கும் நடைமுறையை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். மேலும் அறுவடை மற்றும் வெட்டுக்கூலி செலவுகளுக்கும் அரசு மானியம் வழங்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.</p> <p style="text-align: justify;"><strong>2.55 லட்சம் டன் அரவையிலிருந்து 82 ஆயிரம் டன்னாக சரிவு</strong></p> <p style="text-align: justify;">தமிழகத்தில் ஒரு காலத்தில் கூட்டுறவு, பொதுத்துறை மற்றும் தனியார் என மொத்தம் 58 சர்க்கரை ஆலைகள் செயல்பட்டு வந்தன. ஆனால் தற்போது பல கூட்டுறவு மற்றும் தனியார் ஆலைகள் மூடப்பட்டுள்ளன. கடந்த 2011-12-ம் ஆண்டில் மாநிலம் முழுவதும் 2.55 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்ட நிலையில், நடப்பு ஆண்டில் அது சுமார் 82 ஆயிரம் டன் அளவுக்கு மட்டுமே குறைந்துள்ளது. இது கரும்பு சாகுபடியின் வீழ்ச்சியை வெளிப்படுத்தும் முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகிறது.</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks