ரூ. 2 கோடி கேட்டு மிரட்டல் !! சாலையில் காரோடு கடத்தப்பட்ட தொழிலதிபர் - பின்னணி என்ன ?

ரூ. 2 கோடி கேட்டு மிரட்டல் !! சாலையில் காரோடு கடத்தப்பட்ட தொழிலதிபர் - பின்னணி என்ன ?
News Image
<h3><strong>3 மடங்கு லாபம் தருவதாக முதலீடு</strong></h3> <p>தமிழகத்​தில் கடந்த 2016-ம் ஆண்டு செயல்​பட்ட நியோ மேக்ஸ் நிறு​வனம் மாநிலம் முழு​வதும் 60,000-க்​கும் மேற்​பட்​டோரிடம் ரூ.8,000 கோடி வரை மோசடி செய்​த​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது. பலரிடம் பணம் பெற்​று, அதை ரியல் எஸ்​டேட் துறை​யில் முதலீடு செய்து 3 மடங்கு லாபம் தரு​வ​தாக கூறி பலரை முதலீடு செய்ய வைத்​த​தாக கூறப்​படு​கிறது. பின்​னர் நிறு​வனம் செயலிழந்த நிலை​யில், அதன் நிர்வாகிகள் மீது விசா​ரணை நடை​பெறுகிறது.</p> <p>இந்த வழக்​கில் தொடர்​புடைய​ வரும், நியோமேக்ஸ் நிறு​வனத்​தின் முன்​னாள் பங்​கு​தா​ரரு​மான சென்னை மேட​வாக்​கத்​தைச் சேர்ந்த சார்​லஸ் ( வயது 56), கடந்த 27-ம் தேதி தனது கார் ஓட்​டுநர் ஷியாம் விக்​னேஷ் ( வயது 30) உடன் ஓ.எம்​.ஆர். சாலையில் உள்ள நாவலூர் பகு​திக்கு சென்​றிருந்​தார்.</p> <div class="text__StyledText-sc-n3xoc4-0 hRGIKp"> <p>அங்கு சாலை​யோரம் காரை நிறுத்​திய சார்லஸ், எதிரே உள்ள வணிக வளாகத்தில் சில பொருட்கள் வாங்கி வருமாறு ஓட்​டுநரிடம் கூறி​னார். ஓட்​டுநர் 15 நிமிடங்​கள் கழித்து வந்​த​போது, சார்லஸைக் காண​வில்​லை. காரும் இல்லை. செல்​போன் லைனும் கிடைக்கவில்லை.</p> <h3><strong>சிசிடிவி காட்சிகள் ஆய்வு</strong></h3> <p>இதையடுத்து ஓட்​டுநர் காவல் கட்​டுப்​பாட்டு அறைக்கு தகவல் தெரி​வித்​தார். தாழம்​பூர் போலீ​ஸார் சிசிடிவி காட்​சிகளை ஆய்வு செய்​த​ போது, மற்​றொரு காரில் வந்த நால்வர், அவரை அவரது காருடன் அழைத்துச் செல்​வது பதி​வாகி இருந்​தது.</p> <p>கடத்​தல் கும்​பல் 2 கார்​களில் பிரிந்து பயணித்​ததும், ஒரு கார் தென்​காசி நோக்கியும் மற்​றொரு கார் கோவை நோக்கி​யும் சென்​றதும் தெரிந்தது. தென்காசி மாவட்​டத்​தில் உள்ள ஒரு பண்ணை​யில் அடைத்து வைக்​கப்​பட்டிருந்த சார்​லஸை தனிப்படை போலீஸார் மீட்​டனர். அங்கு இருந்த தினேஷ் பாண்​டின் ( வயது 34 ) கைது செய்யப்பட்டார்.</p> <p>&nbsp;அவர் அளித்த தகவலின் பேரில், கோவையில் பதுங்​கி​யிருந்த கருத்​த​பாண்டி ( வயது 24), ராம​நாத​புரத்​துக்கு தப்பிச் சென்ற தினேஷ்கு​மார் ( வயது 33), சபரி என்ற வேல் சபரி ( வயது 26) ஆகியோரை​யும் கைது செய்​தனர்.</p> <p>இந்த கும்​பல், கடந்த 7 மாதங்​களுக்கு முன்பே சார்லஸை மிரட்டி ரூ.1.40 கோடியை பறித்​துள்​ள​து. அது தொடர்பாக சார்லஸ் புகார் அளிக்காததால், தற்போது அவரை ரூ.2 கோடி கேட்டு, மிரட்டி, கடத்தியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களிடம் இருந்து 2 கார்களும், சார்லஸின் காரும் பறிமுதல் செய்யப்பட்டன.</p> </div>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks