"திமுக தேர்தல் அறிக்கை - 2.0 அரசின் உண்மையான கதாநாயகன்!" – எஸ்டிபிஐ கட்சி புகழாரம்!

"திமுக தேர்தல் அறிக்கை - 2.0 அரசின் உண்மையான கதாநாயகன்!" – எஸ்டிபிஐ கட்சி புகழாரம்!

"திமுக தேர்தல் அறிக்கை ஒரு தொலைநோக்கு ஆவணம்!" - எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் முகம்மது முபாரக் பாராட்டு!

"தமிழகத்தின் அடுத்த ஐந்தாண்டு வளர்ச்சிக்கான தொலைநோக்கு ஆவணம்"; மகளிர் உரிமைத் தொகை உயர்வு மற்றும் வேலைவாய்ப்பு அறிவிப்புகளுக்கு முகம்மது முபாரக் வரவேற்பு!

திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று வெளியிட்டுள்ள 524 வாக்குறுதிகள் கொண்ட 2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையை, "தமிழக வளர்ச்சிக்கான ஒரு தொலைநோக்கு ஆவணம்" என எஸ்டிபிஐ (SDPI) கட்சியின் மாநிலத் தலைவரும் நன்னிலம் தொகுதி வேட்பாளருமான முகம்மது முபாரக் அவர்கள் பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தத் தேர்தல் அறிக்கை வெறும் வாக்குறுதிகளின் தொகுப்பு மட்டுமல்லாமல், அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய 'திராவிட மாடல் 2.0' அரசின் உண்மையான கதாநாயகன் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

மகளிர் மேம்பாடு: 

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 2,000 ரூபாயாக உயர்த்தியிருப்பது மற்றும் இல்லத்தரசிகளுக்கு மின்சாதனப் பொருட்கள் வாங்க 8,000 ரூபாய் மதிப்பிலான கூப்பன் வழங்கும் திட்டம் புரட்சிகரமானது என அவர் தெரிவித்துள்ளார்.

கல்வி மற்றும் இளைஞர் நலன்: 

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ உள் ஒதுக்கீட்டை 10.5% ஆக உயர்த்தியிருப்பதையும், 'புதுமைப்பெண்' மற்றும் 'தமிழ்ப் புதல்வன்' திட்ட உதவித்தொகையை 1,500 ரூபாயாக அதிகரித்திருப்பதையும் அவர் வரவேற்றுள்ளார்.

வேலைவாய்ப்பு அதிரடி: 

அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5 லட்சம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற அறிவிப்பும், தனியார் துறையில் தமிழர்களுக்கே 75% முன்னுரிமை அளிக்கும் சட்டமும் இளைஞர்களின் எதிர்காலத்திற்கு வலுசேர்க்கும் என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

விவசாயிகள் மற்றும் மீனவர் நலன்: 

பயிர்ச் சேதங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை உயர்த்தியிருப்பது விவசாயிகளுக்குப் பெரும் ஆறுதல் அளிக்கும். குறிப்பாக, நெல் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ₹25,000 மற்றும் மீனவர்களுக்கான தடைக்கால நிவாரணம் ₹12,000-ஆக உயர்த்தப்பட்டிருப்பது அரசின் அக்கறையை வெளிப்படுத்துகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொழில்நுட்ப வளர்ச்சி: 

2030-க்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் 'நியோ டைடல் பூங்காக்கள்' அமைப்பதன் மூலம் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை அவர் பாராட்டியுள்ளார்.

சமூக நல்லிணக்கத்தின் அடையாளம்:

சிறுபான்மையின மாணவர்களின் கல்வி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கான மேம்பாட்டு நிதியை உயர்த்தியிருப்பது, தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தைப் பேணும் திராவிட மாடல் அரசின் செயல்பாட்டை மீண்டும் உறுதி செய்துள்ளதாக முகம்மது முபாரக் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். ஒட்டுமொத்தமாக, இந்தத் தேர்தல் அறிக்கை தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாகத் தக்கவைக்க உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு அளிக்கவுள்ள தேநீர் விருந்தைத் தொடர்ந்து, மார்ச் 31-ஆம் தேதி திருவாரூரில் இருந்து தனது பிரசாரத்தைத் தொடங்கவுள்ளார்.













புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks