கோவையில் நகை கடை அதிபர் மகன் திடீர் உயிரிழப்பு : நகை கண்காட்சிக்கு வந்த போது பரிதாபம் - காவல்துறை விசாரணை !!!

கோவையில் நகை கடை அதிபர் மகன் திடீர் உயிரிழப்பு : நகை கண்காட்சிக்கு வந்த போது பரிதாபம் - காவல்துறை விசாரணை !!!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஔவையார் நகரை சேர்ந்தவர் செல்வராஜ். நகைக் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் விக்னேஷ் ( 28).
விக்னேஷ் கோவையில் நடந்து வரும் நகை கண்காட்சிக்காக வந்து இருந்தார். 

இதற்காக அவரது நண்பர் தினேஷ் என்பவரிடம் வரதராஜபுரம் காமராஜர் பகுதியில் உள்ள ஹோடடலில் அரை எடுத்து தங்கி இருந்தார். 

நேற்று நகை கண்காட்சிக்கு சென்று விட்டு இருவரும் ஓட்டலுக்கு திரும்பி வந்தனர். இந்த நிலையில் அங்கு உள்ள ஸ் பாவில் சென்று விட்டு அறைக்கு வந்த விக்னேஷ் தண்ணீர் குடித்து உள்ளார். 

அப்போது திடீரென்று அவர் மயங்கி விழுந்து உள்ளார். 
உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 ஆனால் அதற்குள் அவர் இறந்து விட்டார். இதுகுறித்து செய்யாறில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இந்த சம்பவம் குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk