கோவை மத்திய சிறையில்
கைதி உயிரிழப்பு - காவல்துறை விசாரணை !!!
கோவை மத்திய சிறைச்சாலையில் பழைய சுங்கம் திருச்சி ரோடு பகுதியை சேர்ந்த 35 வயது கைதி அடைக்கப்பட்டு இருந்தார். இவர் துடியலூர் அருகே நடந்த போஸ்கோ வழக்கில் கைதாகி கிடந்த ஜூன் மாதம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில் அவருக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. அங்கே திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சிறையில் உள்ள மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்து உள்ளனர். அதன் பிறகு அவரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கி கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதைத்தொடர்ந்து குன்னூரில் உள்ள அவரது உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடல் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
in
செய்திகள்