கோவையில் ஹோட்டல் அருகில் இறந்து கிடந்த வாலிபர் - உடலை கைப்பற்றி காவல் துறை விசாரணை !!!

கோவையில் ஹோட்டல் அருகில் இறந்து கிடந்த வாலிபர் - உடலை கைப்பற்றி காவல் துறை விசாரணை !!!


கோவை, பாப்பநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஜெயசிம்மபுரம் பகுதியைச் சேர்ந்தவர் எத்திராஜ். இவரது மகன் விஜயகுமார் (வயது 28) இவர் பாப்பநாயக்கன்பாளையத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். 

சம்பவத்தன்று வீட்டில் இரந்து வேலைக்கு செல்வதாக கூறி சென்று உள்ளார். அதன் பிறகு இரவில் வீட்டுக்கு வரவில்லை. இந்த நிலையில் விஜயகுமார், பி .என் .பாளையம் அருகே பாரதியார் ரோடு மற்றும் நேதாஜி ரோடு சந்திக்கும் பகுதியில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 
இது குறித்து போலீசார் விஜயகுமாரின் தாய் விஜயலட்சுமிக்கு தகவல் கொடுத்தனர். 

அவர் சம்பவ இடத்திற்கு சென்று விஜயகுமார் இறந்த உடலை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Website Developed & Maintained by
IPD Media Networks