மெரினா கொலை வழக்கு: தாய் கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ ஓட்டுநரை மகனே தீர்த்துக் கட்டியது அம்பலம்! Marina Auto Driver Murder: Son Kills Mother's Lover; College Student and Friend Arrested

மெரினா கொலை வழக்கு: தாய் கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ ஓட்டுநரை மகனே தீர்த்துக் கட்டியது அம்பலம்! Marina Auto Driver Murder: Son Kills Mother's Lover; College Student and Friend Arrested

கடற்கரையில் கோரச் சம்பவம்: கல்லூரி மாணவர் உட்பட இருவர் கைது – பின்னணியில் தவறான உறவு!

சென்னை மெரினா கடற்கரை மணல் பரப்புப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரத்தக் காயத்துடன் மீட்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த வழக்கில், கல்லூரி மாணவர் உட்பட இருவரை மெரினா போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இந்தக் கொலையின் பின்னணியில், உயிரிழந்த நபருக்கும், கைதான மாணவரின் தாயாருக்கும் இடையே இருந்த சட்ட விரோதத் தொடர்புதான் காரணம் என்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

நேற்று முன்தினம் இரவு மெரினா கடற்கரை மணல் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் கிடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், மெரினா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து  சென்று பார்த்தபோது, அவரது பின் பக்க இடது தலையில் ஆழமான வெட்டுக் காயம் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பப்பட்ட அந்த நபர், ஆபத்தான நிலையில்  இருந்து இன்று காலை உயிரிழந்தார். அவரது சட்டைப் பையில் இருந்த ஏடிஎம் அட்டையைக் கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், அவர் கீழ்ப்பாக்கம், சாஸ்திரி நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அந்தோணி (33) என்பது உறுதியானது. இவருக்குத் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது.

கொலைக்கான மர்ம முடிச்சை  அவிழ்க்கும் விதமாகப் போலீசார், அந்தோணியின் பின்னணி குறித்து சந்தேகத்தின் பேரில் விசாரணையைத் தொடங்கினர். இந்த நிலையில், கொலையுடன் தொடர்புடைய கல்லூரி மாணவர் ஆகாஷ் மற்றும் அவரது நண்பர் ஜோஷ்வா ஆகிய இருவரையும் போலீசார் இன்று கைது செய்தனர்.

போலீஸ் தரப்பிலிருந்து வெளிவந்த தகவலின்படி, கைது செய்யப்பட்ட ஆகாஷின் தாயாருக்கும், கொல்லப்பட்ட அந்தோணிக்கும் இடையே தவறான உறவு நீடித்து வந்துள்ளது. ராயப்பேட்டை விஎம் தெருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்த அந்தப் பெண், வேலைக்குச் செல்லும்போது அந்தோணியின் ஆட்டோவில் அடிக்கடிப் பயணம் செய்ததன் மூலம் பழக்கம் ஏற்பட்டு, அது நெருங்கிய உறவாக மாறியுள்ளது. தாயின் இந்த உறவு மகனான ஆகாஷுக்குத் தெரிந்தவுடன் கடும் ஆட்சேபனையை  தெரிவித்து, பல முறை கண்டித்துள்ளார்.

எனினும், அந்தப் பழக்கம் தொடர்ந்ததால், ஆத்திரமடைந்த ஆகாஷ், தனது நண்பர் ஜோஷ்வாவுடன் சேர்ந்து, நேற்று முன்தினம் இரவு அந்தோணி மீண்டும் அப்பெண்ணைச் சந்திக்க மெரினா கடற்கரைக்கு வந்தபோது, அவரை கட்டையால் தாக்கி கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைதான 2 பேரிடமும் கொலை தொடர்பாக தனித்தனி விசாரணை  நடத்தப்பட்டு வருகிறது. விசாரணைக்குப் பிறகு அவர்கள் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk

advertisement Car Wale
© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks