திருப்பத்தூரில் தண்ணீர் கேட்டு மூதாட்டியிடம் இரண்டரை சவரன் நகை பறிப்பு: பெண் கைது! Woman Arrested for Robbing Elderly Woman in Tirupattur: Pretended to Ask for Water

திருப்பத்தூரில் தண்ணீர் கேட்டு மூதாட்டியிடம் இரண்டரை சவரன் நகை பறிப்பு: பெண் கைது! Woman Arrested for Robbing Elderly Woman in Tirupattur: Pretended to Ask for Water

தண்ணீர் கேட்பது போல் வீட்டிற்குள் நுழைந்து மூதாட்டியிடம் இரண்டரை சவரன் தங்க நகையைப் பறித்துச் சென்ற ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்தச் சம்பவம், திருப்பத்தூர் மாவட்டம் ஜலகாம்பாறை அடுத்த ஜடையனூர் பகுதியில் நடந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த 70 வயதான கண்ணம்மாள் என்பவர் தனது கணவர் மறைவுக்குப் பிறகு தனியாக வசித்து வருகிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சுமதி (40) என்பவர், ஜடையனூர் பகுதியில் உள்ள தனது உறவினரைப் பார்க்க வந்துள்ளார். கண்ணம்மாள் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த அவர், தண்ணீர் கேட்டு வீட்டிற்குள் நுழைந்துள்ளார். கண்ணம்மாள் தண்ணீர் கொண்டு வரச் சென்றபோது, அவரது கழுத்தில் இருந்த இரண்டரை சவரன் தங்க நகையைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு வந்த இளைஞர்கள், சுமதியைத் துரத்திச் சென்று ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி அருகே பிடித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த குரிசிலாபட்டு போலீசார், சுமதியை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

மூதாட்டியிடம் தந்திரமாக நகை பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமதி வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks