கார் விபத்தில் உயிரிழந்த தனது நண்பர் டியாகோ ஜோடாவுக்காக, அவரைக் கட்டியணைக்கும் உருக்கமான படத்தைக் காலில் பச்சை குத்தி (Tattoo) ரூபன் நெவ்ஸ் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
கார் விபத்தில் உயிரிழந்த நண்பரும் சக கால்பந்து வீரருமான டியாகோ ஜோடாவின் நினைவாக, அவரைக் கட்டியணைக்கும் புகைப்படத்தைத் தனது காலில் பச்சை குத்தி (Tattoo) போர்ச்சுகல் வீரர் ரூபன் நெவ்ஸ் அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்த உருக்கமான செயல் கால்பந்து வட்டாரத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போர்ச்சுகல் கால்பந்து அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான ரூபன் நெவ்ஸ், தனது இடது காலில் ஜோடாவை அணைத்திருக்கும் ஒரு படத்தைப் பச்சை குத்தியுள்ளார். இது, இருவருக்கும் இடையே இருந்த ஆழமான நட்பைக் காட்டுவதாகவும், கால்பந்து உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த Tattoo, அவர்களின் நட்பை என்றும் நினைவூட்டுவதுடன், மறைந்த நண்பனுக்கு நெவ்ஸ் செலுத்திய உணர்வுபூர்வமான அஞ்சலியாகவும் பார்க்கப்படுகிறது.
