செங்கோட்டையனைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் 7 பேர் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சென்னை: முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்களான ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேரின் கட்சிப் பொறுப்புகளையும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பறித்துள்ளார்.
பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள்:
நம்பியூர் வடக்கு ஒன்றியச் செயலாளர்: தம்பி (எ) K.A. சுப்பிரமணியன்
நம்பியூர் தெற்கு ஒன்றியச் செயலாளர்: M. ஈஸ்வரமூர்த்தி (எ) சென்னை மணி
கோபிசெட்டிப்பாளையம் மேற்கு ஒன்றியச் செயலாளர்: N.D. குறிஞ்சிநாதன்
அந்தியூர் வடக்கு ஒன்றியச் செயலாளர்: M. தேவராஜ்
அத்தாணி பேரூராட்சிக் கழகச் செயலாளர்: S.S. ரமேஷ்
அத்தாணி பேரூராட்சி துணைச் செயலாளர்: வேலு (எ) தா. மருதமுத்து
ஈரோடு மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர்: K.S. மோகன்குமார்
செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்த சில மணி நேரங்களில் அவர் நீக்கப்பட்ட நிலையில், தற்போது அவரது ஆதரவாளர்களும் நீக்கப்பட்டுள்ளனர். இந்தக் கடுமையான நடவடிக்கை அ.தி.மு.க.வில் புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.