
<p>இந்தியாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வந்த சீன அதிபர் ஷி ஜின்பிங் பக்கவாதம் காரணமாக மயங்கி விழுந்ததாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p>
<h2><strong>பிரிக்ஸ் மாநாட்டில் மயங்கி விழுந்த ஷி ஜின்பிங்</strong></h2>
<p>டெல்லியில் செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் பிரிக்ஸ் உச்சி மாநாடு வெகு சிறப்பாக நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் சீனா, ரஷ்யா, ஈரான், பிரேசில், தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ், பெலாரஸ், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், கியூபா, பொலிவியா, நைஜீரியா என பல நாடுகள் பங்கேற்றனர். பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீன அதிபர் ஷி ஜின்பிங் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்திருந்தார். ஆனால் அவர் மாநாட்டில் மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p>
<p><iframe title="TVK Sathyabama vs Admk | துரோகி ஒழிக!"அதிமுக தொண்டர்கள் ஆவேசம்.. ஷாக்கான <a title=" data-type="interlinkingkeywords"><a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> சத்தியபாமா" src="https://www.youtube.com/embed/a1wVWb5pYwg" width="1101" height="619" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>இதுதொடர்பாக சீன ஜனநாயகக் கட்சியின் தலைவர் வான்ஜுன் ஷி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “புது டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் போது சீன அதிபர் ஷி ஜின்பிங் மயங்கி விழுந்ததாகவும், மருத்துவ சிகிச்சைக்காக அவர் சிறப்பு விமானம் மூலம் சீனாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறியுள்ளார். தன்னுடன் எப்போதும் வரும் மருத்துவ குழுவினரிடமிருந்து ஷி ஜின்பிங் அவசர சிகிச்சை பெற்ற பிறகு தனது இந்தியப் பயணத்தை முன்கூட்டியே முடித்துக்கொண்டு ஒரு சிறப்பு விமானத்தில் சீனாவுக்குத் திரும்பினார்” எனவும் வான்ஜுன் ஷி கூறியுள்ளார். </p>
<h2><strong>இஸ்கிமிக் பக்கவாதத்தால் பாதிப்பு</strong></h2>
<p>இதனிடையே அவசர மருத்துவ சிகிச்சைக்காக ஷி ஜின்பிங், பெய்ஜிங் இந்தியாவில் இருந்து சென்ற விமானம் விமான நிலையத்திற்கு வந்தடைந்ததும் அவரை வரவேற்பதற்காக அதிகாரிகள் குழு அல்லது வரவேற்பு விழா என எதுவும் ஏற்பாடு செய்யவில்லை. மாறாக ஷி ஜின்பிங்கை அவசர சிகிச்சைக்காக பெய்ஜிங்கில் உள்ள 301 மருத்துவமனைக்கு நேரடியாகக் கொண்டு செல்ல ஒரு இராணுவ ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது. அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் இஸ்கிமிக் பக்கவாதம் எனப்படும் மூளையின் ஒரு பகுதிக்குச் செல்லும் இரத்த ஓட்டம் அடைப்பு ஏற்பட்டது தெரிய வந்தது. </p>
<p>தனது உடல்நிலை குறித்த தகவல்களை இந்தியத் தரப்பு பெற்றுவிடுமோ என்று ஷி ஜின்பிங் அஞ்சியதால் அவர் இந்திய மருத்துவமனையில் அவசர சிகிச்சையை மறுத்து உடனடியாக பெய்ஜிங் திரும்பினார். அதுமட்டுமல்லாமல் விமானப் பயணத்தின்போது, அறுவை சிகிச்சைக்கான வசதிகள் இல்லாததால் ஷி ஜின்பிங்கின் உயிரைக் காப்பாற்ற மருத்துவக் குழுவினரால் பழமையான சிகிச்சைகளை மட்டுமே அளிக்க முடிந்தது எனவும் வான்ஜுன் ஷி கூறியுள்ளார். செப்டம்பர் மாத இறுதியில் நடக்கவிருக்கும் அமெரிக்கப் பயணத்திற்கு முன்பாக ஷி ஜின்பிங் குணமடைவாரா என்பது இதுவரை மருத்துவமனை தரப்பில் உறுதி செய்யப்படவில்லை எனவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/health-tips-dont-do-this-suffering-from-migraines-274493" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article