
<p><span dir="auto">யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், செப்டம்பர் 14-15 தேதிகளில், பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை பயன்படுத்தி பல சவுதி அரேபிய நகரங்கள் மற்றும் ராணுவத் தளங்கள் மீது ஒரு பெரிய தாக்குதலை நடத்தினர். சவுதி அரேபியா நெருக்கடியில் இருப்பதைக் கண்ட பாகிஸ்தானும் அவர்களை கைவிட்டது. யேமனின் செங்கடல் கடற்கரை மற்றும் பாப் அல்-மண்டேப் ஜலசந்தியை ஹவுதிக்கள் ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து, சவுதி அரேபியா இஸ்ரேலிடம் உதவி கோரியது. பாகிஸ்தானைப் போலவே, சவுதி அரேபியாவும் இஸ்ரேலை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்கவில்லை என்பதும், அதனால் இரு தரப்பிலும் தூதரக உறவுகள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.</span></p>
<h2><span dir="auto">இஸ்ரேலிடம் உதவி கோரும் சவுதி அரேபியா </span></h2>
<div class="mid-taboola">
<div id="taboola-mid-article-personalisation-3189319" class="trc_related_container tbl-trecs-container trc_spotlight_widget">தி ஜெருசலேம் போஸ்ட் பத்திரிகையின் அறிக்கையின்படி, சவூதி அரேபியாவுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான நிலைமையை, உளவுத்துறை ஆதரவின் மூலம் இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்க, அமெரிக்க மத்திய கட்டளை மையத்தின் மத்தியஸ்தத்தில் இஸ்ரேலும் சவூதி அரேபியாவும் பேச்சுவார்த்தை நடத்தின.</div>
<div class="trc_related_container tbl-trecs-container trc_spotlight_widget"> </div>
<div class="trc_related_container tbl-trecs-container trc_spotlight_widget">இஸ்ரேலின் ஹயோம் செய்தித்தாள் தனியாக வெளியிட்ட செய்தியில், சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போராட்டத்தில் உதவி கோரி மற்ற வளைகுடா நாடுகளுக்கும் எகிப்துக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்று குறிப்பிட்டிருந்தது. பாப் அல்-மண்டேப் ஜலசந்தியில் உருவாகி வரும் அச்சுறுத்தல்கள் குறித்து உளவுத்துறை உதவியை நாடி, முகமது பின் சல்மான் அமெரிக்க மத்திய கட்டளை மையம் வழியாக இஸ்ரேலை மறைமுகமாகத் தொடர்பு கொண்டதாக அது கூறியது.</div>
</div>
<p><span dir="auto">சவுதி அரேபியா இஸ்ரேலை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்கவில்லை. மேலும், இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகள் இல்லை. இருப்பினும், இஸ்ரேலுடனான அதன் தொடர்பு, மறைமுகமாக இருந்தாலும், ஏமனில் சவுதி அரேபியா எதிர்கொள்ளும் கடுமையான நெருக்கடியை பிரதிபலிக்கிறது. பல நாடுகள் சவுதியின் வேண்டுகோள்களை நேரடியாக புறக்கணித்துள்ளன. அமெரிக்காவும், பிரிட்டனும், ஏமனில் உள்ள ஹவுதிக்களை நேரடியாக தாக்க மறுத்து, அதற்கு பதிலாக உளவுத்துறை ஆதரவையும் ராணுவ ஆலோசகர்களையும் வழங்கியுள்ளன.</span></p>
<h2><span dir="auto">சவூதி அரேபியாவை கைவிட்ட பாகிஸ்தான்</span></h2>
<p><span dir="auto">மிக முக்கியமாக, பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகியவை, மெக்கா பாதுகாப்பு கூட்டணியில் பங்காளிகளாக உள்ளன. ஏமனில் ஹவுதிக்களுக்கு எதிராகப் போரிட, துருப்புக்களையோ ஆயுதங்களையோ வழங்க பாகிஸ்தான் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.</span></p>
<p><span dir="auto">சவுதி அரேபியாவின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீது வாரக்கணக்கில் அவ்வப்போது நடத்தப்பட்ட ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, ஹவுதிகள் கடந்த வாரம் யேமனில் ஒரு தாக்குதலைத் தொடங்கினர். இதன் மூலம், சவுதி ஆதரவு கூட்டணியின் அனைத்து எதிர்ப்புகளையும் அவர்கள் முறியடித்தனர். ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இந்த திடீர் தாக்குதல், செங்கடல் கடற்கரையோரத்தில் உள்ள பாப் அல்-மண்டேப் தீவுகளின் கட்டுப்பாட்டை அவர்களுக்கு வழங்கியது. ஜூலை மாதம் முதல் அமலில் உள்ள சவுதி கப்பல் போக்குவரத்து மீதான முற்றுகை தொடரும் என்றும், அதே நேரத்தில் அமெரிக்கா உட்பட பிற நாடுகளின் கப்பல்கள் தடையின்றி பயணிக்க அனுமதிக்கப்படும் என்றும் ஹவுதிகள் அறிவித்தனர்.</span></p>
<h2><span dir="auto">தீவிரமடையும் சவுதி அரேபியாவுக்கான நெருக்கடி</span></h2>
<p><span dir="auto">கண்ணீர்க் கதவு (பாப் அல்-மண்டேப்) சவுதி அரேபியாவிற்கு ஒரு முக்கிய கடல்வழிப் பாதையாக இருந்தது. இது, ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் விதிக்கக்கூடிய எந்தவொரு முற்றுகையையும் தவிர்த்து, பாதுகாப்பாக எண்ணெயை ஏற்றுமதி செய்ய உதவியது. தற்போது, கண்ணீர்க் கதவு மூடப்பட்டுள்ளதுடன், சவுதி அரேபியாவின் பரந்த உள்நாட்டுக் குழாய் வலையமைப்பும் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளது. கடல்வழிப் பாதை மூடப்பட்டதாலும், தரைவழிக் குழாய் வலையமைப்பு சேதமடைந்ததாலும், சவுதி அரேபியாவின் மாற்று எண்ணெய் போக்குவரத்து உள்கட்டமைப்பு முற்றிலுமாக முடங்கிவிட்டது.</span></p>
<p><span dir="auto">சவுதி இதற்கு முன்னர் ஹவுதிக்களை எதிர்கொண்டிருப்பதால், இஸ்ரேலைத் தொடர்பு கொண்டுள்ளது. 2023-ல் காசாவில் போர் வெடித்ததைத் தொடர்ந்து, ஹவுதிக்கள் செங்கடலில் இஸ்ரேலுடன் கூட்டணி வைத்துள்ள கப்பல்களை தாக்கத் தொடங்கினர். அந்த அறிக்கையின்படி, சவுதி அரேபியாவுக்கான இஸ்ரேலிய உதவி, உளவுத்துறை சார்ந்ததாக மட்டுமே இருக்கும்.</span></p>
<p> </p>
<p><span dir="auto"><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/7-main-reasons-for-frequent-cold-and-cough-know-about-its-treatment-274600" width="631" height="381" scrolling="no"></iframe></span></p>
Source: Read Full Article